நடிகை யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 19 வயதே நிரம்பிய யாஷிகா ஆனந்த் வயதிற்கு மீறிய கவர்ச்சி காட்டி நடித்து வருகிறார். இவர் படங்களை விட விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலமே மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே யாஷிகா ஆனந்த் தான் இளம்வயது போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர் ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள யாஷிகா ஆனந்த் தற்போது எஸ்.ஜே சூர்யாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் தனது நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் பயணம் செய்திருக்கிறார். மாமல்லபுரம் அருகே உள்ள சூளேரிக்காடு பகுதியில் சென்றபோது அந்த கார் தடுப்பு சுவரின் மீது மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயம் அடைந்துள்ளார்.
யாஷிகாவின் தோழி, வள்ளிச்செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் யாஷிகா ஆனந்த் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் யாஷிகா மீது மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர்.
- 364