Feed Item
Added a post 

படித்ததில் பிடித்தது............ பகிர்கிறேன்.....

எல்லோருடைய அப்பாவை போல என்னுடைய அப்பாவும் கண்டிப்பானவர். 

அப்பாவின் அன்பு ்டிப்பு  

முடி வெட்டவதில் இருந்தே கண்டிப்பு.

ஒரே பார்பர். எப்போதும் சம்மர் கட் தான்.  

"என்ன உன் பையன் இன்னும் முடி வெட்டலையா" அப்பா, அம்மாவிடம்.

"நேத்து தான் வெட்டிண்டு வந்தான்.

இப்ப காலேஜ்க்கு போறான். அதான். ஏதோ இப்ப இதுதான் ஃபேஷனாம்". 

என்ன ஃபேஷனோ என்ன எழவோ.  ரவுடிப்பைய மாதிரி இருக்கு பாக்க.

சரி.  ஹிந்து பேப்பராவது ஒழுங்கா படிக்கறானா? "அதெல்லாம் படிக்கறான்".

"ஏண்டா எப்ப பார்த்தாலும் ஸ்போர்ட்ஸ் பக்கத்தை மட்டும் படிச்சா போதுமா? எப்படி Vocabulary  improve ஆகும்? ஊர் மேயறதை விட்டு, உருப்படற வழிய பாரு" - அப்பா 

"அப்பா தான் தினம் சொல்றாளே. அந்த இந்து பேப்பரை கொஞ்சம் படிடா கோந்தே. அப்பா வருத்தப்படறா பாரு" - அம்மா. 

"ஏண்டி, மணி எட்டாச்சு.  இன்னும் உன் பையனுக்கு விடியலயா?"  - அப்பா. 

"இல்ல.  ராத்திரி படிச்சுட்டு, லேட்டாதான் படுத்துண்டான்.அதான்." - அம்மா. 

"கிழிச்சான்..அஞ்சு மணிக்கு எந்திருச்சு படிச்சா மனசுல பதியும். இப்படி இருந்தா எப்படி உருப்படுவான்"?

என்னால் அம்மாவிற்கு அர்ச்சனை. 

நான் இப்போது அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன். அப்பா தான் இல்ல.

"ஏண்ணா! கண்ணனுக்கு புது சைக்கிள் வேணுமாம். இப்போ இருக்கிறது அடிக்கடி ரிப்பேர் ஆகிறதாம்" -அம்மா. 

"அப்ப தானே தொரை இன்னும் நல்லா ஊரு சுத்த முடியும்.  சைக்கிள் நல்லாத்தான் இருக்கு.  இல்லேனா நடந்து போகச்சொல்லு"- அப்பா. 

மாலை கல்லூரியிலிருந்து வரும்போது வீட்டில் பளபளவென்று புத்தம்பதிய அட்லஸ் சைக்கிள். "அம்மா,  யாரோடது இந்த புது சைக்கிள்?" உனக்குத்தான்டா. அப்பாதான் வாங்கிண்டு வந்தா. பூஜை போட்டு எடுத்துண்டு போ"- அம்மா

கோபம் உதட்டில்தான். ஆனால் மனசு? 

அது தான் அப்பா. இப்போது என்னிடம் கார் இருக்கிறது.  அப்பா தான் இல்லை.

ஏன், உன் புள்ளையாண்டான் அடிக்கடி லேட்டா வர்றான்?-அப்பா. "ஏதோ குரூப் ஸ்டடியாம்.  நாராயணன் வீட்டுக்கு போயிருக்கான்"- அம்மா. நான் போன செகண்ட் ஷோவுக்கு அம்மாவின் சப்பக்கட்டு. இது மாதிரி பல நாட்கள். 

சே. என்ன அப்பா இவர். எது செஞ்சாலும் நைநைனு ஏதாவது சொல்லிண்டே இருந்தா எவன் இந்த வீட்டில் இருப்பான்? - நான்.   

சின்ன வயசில் அப்பாவுக்கு TAS ரத்தினம் பட்டணம் பொடி நான்தான் வாங்கி வருவேன்.  இது பள்ளி வரை தொடர்ந்தது. கல்லூரி வந்ததும் நான் அம்மாவிடம்,  "நா இனிமே பொடி எல்லாம் வாங்கிண்டு வரமாட்டேன். அப்பாவை பொடி போடறதை நிறுத்த சொல்லு". இது எப்படி தெரிந்ததோ அதன் பின்பு என்னிடம் பொடி வாங்க சொல்வதில்லை. பொடி யாரு வாங்கறா? 

மனசு கேட்காமல் ஒருநாள் அப்பாவிடம்,  "அப்பா உனக்கு பொடி வாங்கிண்டு வரவா" வேண்டாம்பா.. நா பொடி போடறத விட்டாச்சு..நீ சிரமப்பட வேண்டாம்".  அம்மாவிடம் கேட்டதற்கு, "ஆமாடா.  அப்பா ஒரு வாரமாவே போடலை. நானும் கேட்டேன். விட்டாச்சுனானு சொன்னா" 

மனது ஏனோ லேசாக வலித்தது எனக்கு. 

இப்போது நினைத்தால் கண்கள் கலங்குகிறது. நான் இன்று ஆங்கிலத்தில் கொஞ்சம் எழுதுவதற்கு காரணம் அப்பா. இப்போதும் நான் படிப்பது இந்து பேப்பர்தான்.

அப்பா தான் இல்லை.  

சே... கேவலம். முடி வெட்ட எவ்வளவு சண்டை அப்பாவுடன். இன்றும் முடி வெட்டும்போது அப்பா ஞாபகம்.

அப்பா தான் இல்லை. 

அப்பாவின் ஞாபகார்த்தமாக நான் எடுத்து வைத்து கொண்டது அந்த

#பொடிடப்பா மட்டும் தான். இன்றும் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது. என்னை என்ன பாடுபடுத்னாய் என்று.

அப்பா,  எங்கப்பா இருக்கே?  வாப்பா! நான் பொடி வாங்கித்தருகிறேன் என்று இப்போது கதறலாம் போல் இருக்கிறது.  

ஒன்று மட்டும் நிச்சயம். 

அப்பாவோட கண்டிப்பு இல்லேனா நம்ம வாழ்க்கை நிச்சயம் #தாறுமாறு தர்பார் தான்.  அதே மாதிரி அந்த நேரங்களில் அம்மாவோட அரவணைப்பு இல்லை என்றாலும் வாழ்க்கை தாறுமாறு தான்.

பெற்றோர்களை அவர்கள் வாழும்போதே #போற்றி வழிபடுங்கள் நண்பர்களே.  

அப்போதுதான் வாழ்க்கை வெல்லம் போல #சுவைக்கும். நினைவுகளை அசை போடும்போது ிக்கும்.

படித்து முடிப்பதற்குள் கண்ணில் ஜலம் நிறைந்து விட்டது.

  • 1389