Feed Item
Added article 

விஜய் நடித்த தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய மூன்று படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கான் நடிக்கவிருக்கும் ஹிந்தி படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் ஆகிவிட்டதாகவும் செய்திகள் வெளியானது. அதன் பிறகு அந்த படத்திலிருந்து அட்லீ வெளியேறிவிட்டார், ஷாருக்கானுக்கு கதை பிடிக்கவில்லை, மீண்டும் விஜய்யை வைத்து அட்லி இயக்க போகிறார், என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்தது.

ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஷாருக்கான் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்தபின் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் இயக்குனர் அட்லி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அட்லி இயக்கத்தில் ராஜா ராணி, பிகில் என்ற படங்களில் நயன்தாரா நடித்திருந்தார் என்பதும், அதிலும் ராஜா ராணி படம் தமிழ் திரையுலகில் நயன்தாராவை முன்னணி நடிகையாக மாற்றியது என்பதால் ஷாருக்கான் ஜோடியாக அட்லி இயக்கத்தில் நயன்தாரா நடிக்க ஒப்புக் கொள்வார் என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.

  • 199