Feed Item
Added a news 

கடந்த 22 ஆம் திகதி அன்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் யாழ். மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவிற்குட்பட்ட அரச வைத்திய அதிகாரிகளின் சங்கக் கிளையினர் மேற்கொண்ட சந்திப்பின் போது ஆளுனரிடம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தெல்லிப்பளை கிளையினர் ஆதார வைத்தியசாலைக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு தேவையான நிதியை இந்த வருடம் ஒதுக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அத்துடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை, ஊர்காவற்துறை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட்ட நிதியில் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ள கட்டுமான பணிகளை எந்தவித மாற்றங்களும் இன்றி தொடருமாறு வேண்டுகோள் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவால் தயாரிக்கப்பட்ட திட்டங்களுக்கு அமைவாக நடப்பு ஆண்டிற்கென ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஆளுநர் அனுமதி வழங்கினார்.

அத்துடன் இக்கூட்டத்தில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலந்து கொண்டு இருந்தார் இக்கூட்டத்திற்கு வடமாகாண பிரதம செயலாளரோ அல்லது வடமாகாண சுகாதார திணைக்களத்தின் திட்டமிடல் பிரிவினரோ கலந்து கொண்டிருக்க வில்லை. அத்துடன் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோயின் காரணமாக ஏற்பட்டுள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவின் தேவைப்பாடு காரணமாகவும், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிகரித்த நோயாளர்களுக்கு ஏற்ப அதி தீவிரசிகிச்சை பிரிவின் கட்டில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு உள்ள வளக் கட்டுப்பாடுகள் காரணமாகவும் யாழ் மாவட்டத்தில் இருந்து ஏனைய மாவட்டங்களுக்கு பொதுவாக கொழும்பு மற்றும் கண்டி போன்ற இடங்களில் உள்ள அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு நோயாளர்களை மாற்றவும் நேரிடுகின்றது.

இதன்போது பலவிதமான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியும் இருக்கின்றது. எதிர்வரும் காலங்களிலும் இப்படியான நெருக்கடிகளிற்கு முகம் கொடுப்பதற்காகவே மருந்து களஞ்சியசாலைக்கு பதிலாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கு தெல்லிப்பழை வைத்தியசாலை வைத்திய நிபுணர்களால் தீர்மானிக்கப்பட்டது.

  • 424