Feed Item
Added a news 

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,000க்கு கீழ் குறைந்துள்ளது.

கொரோனாவின் 2வது அலை பரவத் தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்தது. ஆனால், கடந்த 24 தினங்களாக குறைந்து வருகிறது. இந்த நிலையில், இன்று 13ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் 2வது நாளாக பதிவாகியுள்ளது. அதாவது,12,772 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,66,493ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, கோவையில் இன்று 1,728 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 828 பேருக்கும், திருப்பூரில் 781 பேருக்கும், ஈரோட்டில் 1,295 பேருக்கும், சேலத்தில் 796 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் இன்று 254 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29,801ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 25,561 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 99 ஆயிரத்து 808 ஆக அதிகரித்துள்ளது.

  • 546