Feed Item
Added a news 

 கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் மரணங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி, 48 அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெறும் அனைத்து கொரோனா மரணங்கள் தொடர்பான விபரங்களை அதே நாளில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே இனிவரும் காலங்களில் முந்தைய நாட்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பான தகவல்கள் காலம் தாழ்த்தி வெளியிடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்தார்.

  • 561