Feed Item
Added a news 

வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை நேற்றைய தினம் சந்திக்க சென்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

பரிசோதனைக்கு பின்னர், வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தானுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு நாடாளுமன்ற உறுப்பினரிடம் பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அதன் முடிவுகள் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் ஏற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  • 483