Feed Item
Added a news 

இலங்கையில் இன்று மேலும் 515 கொரோனா தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தொிவித்துள்ளார்.

மருதனார் மடம் சந்தையில் 394 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் வெள்ளிக்கிழமை அடையாளம் காணப்பட்ட  குடும்ப உறுப்பினர்கள் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர்  த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.  

கொரோனா தொற்று நிலமையினைக் கருத்திற் கொண்டு பொதுச்சந்தை மற்றும் அதனை அண்டிய விற்பனை நிலையங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது  என அரசாங்க அதிபர் தெரிவித்தார்.இலங்கையில் தொற்றுக்குள்ளானோர் மொத்தம் 32,790 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 23,793

இவர்களில் சிறைக் கைதிகள் 147 பேர் உள்ளடங்குவதாக தொிவிக்கப்படுகிறது.

  • 570