சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? என்ற பஞ்சாயத்தே இன்னும் முடியாத நிலையில் சிவகார்த்திகேயன் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லாமல் சொல்லி இணையத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார் பிரபல இயக்குனர்.
தமிழ் சினிமாவில் புத்திசாலித்தனமான இயக்குனர் என பெயர் எடுத்தவர் கரு பழனியப்பன். பத்திரிக்கையாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இயக்குனராக சிகரம் தொட்டவர். அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த நட்பேதுணை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
இயக்குனர் பார்த்திபனிடம் அசிஸ்டெண்ட் டைரக்டராக தன்னுடைய சினிமா வாழ்க்கையை தொடங்கிய கருபழனியப்பன் இயக்கத்தில் முதன்முதலாக ஸ்ரீகாந்த், சினேகா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் பார்த்திபன் கனவு.
அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம், மந்திரப் புன்னகை, சதுரங்கம், ஜன்னலோரம் போன்ற படங்கள் ரசிகர்களிடையே கணிசமான வரவேற்பை பெற்றது.
சினிமா முதல் அரசியல் வரை அதிரடி கருத்துக்களை தைரியமாக தெரிவிக்கும் கரு பழனியப்பன் சமீபத்தில் ரஜினி, விஜய் பாதையில் தற்போது சிவகார்த்திகேயன் சென்று கொண்டிருப்பதாக கூறியுள்ளார். ஒவ்வொரு படத்திற்கும் தன்னுடைய வியாபார எல்லையை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்யா? அஜித்தா? என்ற பஞ்சாயத்து இணையதளங்களில் அவ்வப்போது ஏற்படும். இந்நிலையில் சிவகார்த்திகேயனும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
- 333