Feed Item
Added a news 

ஒன்றாரியோ மாகாணத்தின் தடுப்பூசி பிரச்சினையை தீர்க்க முதல்வர் டக் ஃபோர்ட் வெளிநாட்டு உதவியை நாடியுள்ளார்.

ஒன்றாரியோவிற்கு கொவிட்-19 தடுப்பூசி அதிக அளவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஃபோர்ட் உலகெங்கிலும் உள்ள தூதரகங்களை அணுகத் தொடங்கியுள்ளதாக மாகாண முதல்வரின் செய்தித் தொடர்பாளர் இவானா யெலிச் உறுதிப்படுத்தினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘அஸ்ட்ராஸெனெகாவின் வயது வரம்பைக் குறைப்பது குறித்த கூட்டாட்சி முடிவுக்காக நாம் காத்திருக்கும்போது, மற்றும் மொடர்னா ஏற்றுமதிகளில் சமீபத்திய வெட்டுக்கு பதிலளிக்கும் விதமாக, நம் பன்னாட்டு நட்பு நாடுகளிடமிருந்து ஒன்றாரியோவிற்கு அதிகமான தடுப்பூசி விநியோகத்தை முயற்சிக்க மாகாண முதல்வர் தூதரகங்களை அணுகத் தொடங்கியுள்ளார்’ என கூறினார்.

  • 569