Feed Item
Added a news 

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் போது சிலர் உரிய சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்று சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரம் தொடர்பான பிரதி பணிப்பாளர் நாயகம், வைத்திய நிபுணர் எஸ்.எம்.ஆர்னல்ட் இதனை தெரிவித்தார்.

"பண்டிகை காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இந்த நோய் பரவும் வகையில் சிலர் செயற்பட்டிருந்ததை நாம் கண்டறிந்துள்ளோம். இது நோய் விரைவாக பரவ வழிவகுக்கும். "என்று அவர் கூறினார்.

  • 564