Feed Item
Added a news 

போராட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த போது கண்டுபிடிக்கப்பட்ட 170 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகை தொடர்பான விசாரணைகளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவிலிருந்து நீக்கி குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்தமை தொடர்பில் நீதிமன்றில் விளக்கமளிப்பதற்காக கொழும்பு நீதவான் இன்று (25) பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை வௌியிட்டுள்ளார்.

அந்த வழக்கில் பிரதிவாதிகளில் ஒருவரான அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே எதிர்வரும் பெப்ரவரி மாதம் 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

  • 360