யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள GREEN GRASS தங்குமிட விடுதியில், தங்கி நின்ற தம்பதிகளை ஜன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.கடமை புரியும் ஊழியரே இந்த வீடியோவை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளும் சுரண்டப்பட்டு, அங்கு திருட்டுத்தனமாக கேமராக்கள் மூலம் தொடர்ச்சியாக வீடியோ பதிவு செய்து வந்தமை கண்டறிக்கப்பட்டுள்ளது.தென் இலங்கையை சேர்ந்த தம்பதிகள் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த வேளை குறித்த விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.இதன்போது கடமை புரிந்த ஊழியர் ஒருவர் ஜன்னல் வழியாக அவர்கள் உறங்குவதை படம் பிடித்துள்ளார்.இதனை அவதானித்த கணவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட வேளை, குறித்த விடுதியில் உள்ள அனைத்து அறைகளும் சுரண்டப்பட்டு அதன் மூலம் வீடியோக்கள் பதிவு செய்து வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டது. சில ஊழியர்கள் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- 412