Feed Item
Added a news 

2021 இல்முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவும் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களிற்காக அரசாங்கம் 44 மில்லியனை செலவிட்டது என தகவல் வெளியாகியுள்ளது.

தகவல் உரிமை ஆணைக்குழுவின் உத்தரவின் பேரில் ஜனாதிபதி செயலகமும் பிரதமர் அலுவலகமும் வழங்கிய தகவல்களின் மூலம் இது தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் மேற்கொண்ட ஐந்து வெளிநாட்டு பயணங்களிற்காக ராஜபக்ச சகோதரர்கள் 44, 739,184.91 ரூபாயை செலவிட்டனர் என்பது தகவல் உரிமை மூலம் தெரியவந்துள்ளது.

தகவல் உரிமை சட்டத்தின் கீழ் இது குறித்த விபரங்கள் ஜனவரியில் கோரப்பட்டவேளை ஜனாதிபதி செயலகமும் பிரதமர் செயலகமும் ஆரம்பத்தில் இவற்றிற்கான வேண்டுகோளை நிராகரித்திருந்தன.

எனினும் தகவல் உரிமை ஆணைக்குழு இது குறித்த மேல்முறையீட்டை ஆராய்ந்ததுடன் ஜனாதிபதி செயலகத்தையும் பிரதமர் அலுவலகத்தையும் இது குறித்த விபரங்களை பத்திரிகையாளர்களிற்கு தெரிவிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

  • 330