Feed Item
Added a news 

வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஈடுபடும் ஸார்ப் தன்னர்வ தொண்டு நிறுவனமானது கடந்த 2016ம் ஆண்டுமுதல் இன்று வரை கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் ; இருபத்திமூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து நூற்று நாற்பத்தி மூன்று சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திநான்காயிரத்து அறுநூற்று நாற்ப்த்தொன்பது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப்  நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்தார்.

இலங்கையின் வடபகுதியில் மேற்படி கண்ணிவெடி அகற்றும் பணிகளை முன்னெடுத்து வரும் மனித நேய கண்ணிவெடியகற்றும் நிறுத்தின் நடவடிக்கை முகாமையாளர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதாவது இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் 2022 இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகபிரிவின் கீழுள்ள அம்பகாமம் மற்றும் தச்சடம்பன் பகுதியிலும்; புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின்; கீழ் உள்ள சுதந்திரபுரம் மல்லிகைத்தீவு ஆகிய பகுதிகளிலும்; கிளிநொச்சி மாவட்டத்தின்; பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள முகமாலை மற்றும் ஆனையிறவிலும் இதவரை இருபத்திமூன்று இலட்சத்து ஒன்பதாயிரத்து நூற்;றுநாற்பத்திமூன்று சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து முப்பத்திநான்காயிரத்து அறுநூற்று நாற்ப்த்தொன்பது அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் ஓய்வுபெற்ற கப்டன் பிரபாத் நாரம்பனவ மேலும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை முகமாலை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவின் கீழுள்ள சுதந்திரபுரம் மல்லிகைத்தீவு ஆகிய பகுதியிலும் அம்பகாமம்; பகுதியிலும்; துரித கதியில் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  • 689