Feed Item
Added a news 

கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் பல்வேறு பகுதியில் தொடர்ந்தும் குடிநீருக்கான தட்டுப்பாடு நிலவி வருகின்றது என்றும் தமக்கான குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் இப்பகுதி மக்கள் அன்றாடம் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய குடிநீர் நெருக்கடி நிலவும் பகுதியாக பூநகரி பிரதேசம் காணப்படுகின்றது.

அதாவது,  பூநகரி பிரதேசத்தில் உள்ள 19 கிராம அலுவலர் பிரிவுகளில்  வாழ்ந்து வரும்  ஏழாயிரத்து 500இற்கும் மேற்பட்ட  குடும்பங்களில் 10 கிராம அலுவலர் பிரிவுகளில் வாழும் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வருடம் முழுவதும் குடிநீர் விநியோகிக்க வேண்டிய நிலமை காணப்படுகின்றது.

  • 380