Feed Item
Added a news 

முல்லைத்தீவு  மாவட்டத்தின்  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட கோம்பாவில், வள்ளிபுனம், தேரவில் பகுதிகளை சேர்ந்த மூன்று இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தி  அவர்களை  டிப்பரில் கடத்தி சென்று கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் கடந்த வாரத்தில் இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலின் போது கல்லாற்று பகுதியினை சேர்ந்த இளைஞன் ஒருவரை தாக்கியதாக தெரிவிக்கப்படும் மூன்று இளைஞர்களையே இவ்வாறு டிப்பரில் கடத்தி செல்லப்பட்டுள்ளார்கள்.05.07.2022 மாலை இளைஞர் குழு ஒன்று டிப்பரில் மூன்று இளைஞர்களையும் கடத்தி சென்ற வேளை விசுவடு பகுதியில் ஒழுங்கை ஒன்றில் பயணித்த டிப்பர் பாலத்தில் சில்லு மோதி ரயர் வெடித்துள்ளது இந்த சம்பவத்தினை தொடர்ந்து டிப்பர் வாகனத்தை அந்த இடத்தில் விட்டுவிட்டு இளைஞர்களை கடத்தி சென்றுள்ளனர்.புதுக்குடியிருப்பு பொலிசார் சென்ற வேளை கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் டிப்பர் வாகனத்தினை விட்டு தப்பி சென்ற நிலையில் கடத்தப்பட்ட மூன்று இளைஞர்களையும் மீட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்கள்.டிப்பர் வாகனம் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்புபொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது வாகனத்தின் உரிமையாளர் தொடர்பிலும் வாகனம் சாரதி தொடர்பிலும் புதுக்குடியிருப்பு பொலிசார் மேலத்திக விசாரணைகளை மேற்கொண்டு ஙருகின்றனர்.

  • 329