Feed Item
Added a news 

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட முரசு மோட்டை சேற்றுக் கண்டி பகுதியில் அமைந்துள்ள தொன்மை வாய்ந்ததும் அற்புதங்கள் நிறைந்ததுமான அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழா கடந்த 27ஆம் தேதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து திருவிழா நடைபெற்று இன்றைய தினம் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.இன்று காலை விசேட புசை வழிபாடுகளைத் தொடர்ந்து சுவாமி உள்வீதியுலா நடைபெற்றதையடுத்து தேரேறி வலம் வரும் காட்சி வெகுசிறப்பாக நடைபெற்றுள்ளது.மூன்று சித்திர தேர்கள் வடிவமைக்கப்பட்டு வீதி உலாவரும் ஆலயமாக காணப்படும் சேற்று கண்டி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மேற்படி தேர்த் திருவிழாவில் பெருமளவான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  • 352