Feed Item
Added a news 

முல்லைத்தீவு திருமுறி கண்டி பகுதியில் இன்று (02-07-2022) பகல் கடைக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த  சிறுவன் ஒருவர் வழிமறித்து   அவரது துச்சக்கர வண்டியை அவசர தேவைக்கு வாங்குவது போல் வாங்கிசென்று   களவாடப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது 

முல்லைத்தீவு  ஏ-09 வீதியின் திருமுருகண்டி பகுதியில்  ஒருவன். கடைக்கு சென்று துவிச்சக்கர வண்டியில் வீதியால் சென்று கொண்டிருந்த சமயம் வீதியில் நடந்து வந்த ஒருவர் தன்னுடைய மோட்டார் சைக்கிள் பெட்ரோலியில்லாது நின்று விட்டதாகவும் ஆலயத்திற்கு அருகில் சென்று பெட்ரோல் வாங்கி வருவதாக தெரிவித்து அவரது  துச்சக்கர வண்டியை வாங்கி தப்பிச் சென்றுள்ளார் 

நீண்ட நேரம்மாகியும்  துவிச்சக்கரவண்டியை வாங்கி சென்றவர் மீளக் கொண்டு வராததால் 3 மணி நேரத்துக்கு மேல் வீதியில் காத்திருந்த சிறுவன் பெற்றோருக்கு தகவல் தெரிவுத்த நிலையில்  குறித்த சம்பவம் தொடர்பில் பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது

குறித்த சைக்கிள் சூட்சமமான முறையிலே கொள்ளையிடப்பட்டுள்ளதாக அறிய முடிந்துள்ளது.

  • 349