Feed Item
Added a news 

இலங்கை பொலிஸ் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான உடற்தகுதிகாண் பரீட்சை வவுனியா நகரசபை மைதானத்தில் இன்றுகாலை 8 மணி முதல் இடம்பெற்று வருகின்றது.

குறித்த பரீட்சையில் வடமாகணத்தை சேர்ந்த 551 பரீட்சார்த்திகள் கலந்து கொண்டனர். ஏற்கனவே அவர்களிற்கான நேர்முகத் தேர்வுகள் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த நிலையில் இன்றையதினம் அவர்களிற்கான உடற்தகுதிகாண் பரீட்சைகள் இடம்பெற்றிருந்தது.

வவுனியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் டி சில்வாவிவின் மேற்பார்வையில் இடம்பெற்றிருந்த இந்நிகழ்வில், பொலிஸ் உயர் அதிகாரிகள், மற்றும் சுகாதார பிரிவினர் கலந்துகொண்டிருந்தனர்.

  • 721