Feed Item
Added a news 

அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கலாம் என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ண மார்ச் மாதமளவிலேயே இலங்கைக்கு கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கிடைக்கலாம் என தெரிவித்துள்ளார்.

சனத்தொகையில் 15 சதவீதமானவர்களிற்கே மருந்து கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஒருவருக்கு இரண்டு டோஸ்களை வழங்கவேண்டும் என்பதால் 600,000 மருந்துகள் மூன்று இலட்சம் பேருக்கு போதுமானதாகயிருக்கும் என தெரிவித்துள்ள அவர் உலக சுகாதார ஸ்தாபனத்திடமிருந்து கிடைக்கும் மருந்துகளை சனத்தொகையின் 20 வீதமான மக்களிற்கே வழங்க முடிடியும். ஒருவருக்கு இரண்டு டோஸ்கள் வழங்கப்படவேண்டும் என்பதால் மார்ச்சில் 15வீதமானவர்களிற்கே மருந்து கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை மக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் மருந்து கிடைப்பதற்கு இன்னமும் இரண்டரை வருடங்களாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஏனைய நாடுகளை போல முன்கூட்டியே மருந்துகளிற்கு வேண்டுகோள் விடுக்க தவறியதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது என ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார்.

322 பில்லியன் சனத்தொகையை கொண்ட அமெரிக்கா ஏற்கனவே மருந்துகளிற்கு முன்பதிவு செய்துள்ளது,37 பில்லியன் சனத்தொகையை கொண்ட கனடா 38 மில்லியன் மருந்திற்கு பதிவு செய்துள்ளது,இந்தியா 1800 மில்லியன் மருந்தினை பெறுவதற்கு முன்பதிவு செய்துள்ளது என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் இலங்கை முன்கூட்டியே பதிவு செய்ய தவறியுள்ளதால் மிகக்குறைந்த அளவிலான மருந்துகளே கிடைக்கவுள்ளன என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்துகளிற்கு முன்பதிவு செய்யாத அரசாங்கம் உள்ளுர் மருந்துகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியது,ஆற்றில் பானைகளை வீசுவதிலும் பாணிகளை குடிப்பதிலும் ஈடுபட்ட அமைச்சர் கொரோனா நோயாளியாகியுள்ளார் என தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையில் பழங்குடி இனத்தவர்களின் மனோநிலையுடனான மக்கள் வாழ்கின்றனர் என்ற தோற்றப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிததுள்ளார்.

  • 566