Added a post
ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் அமைந்துள்ள ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமானோர் நன்கொடை அளித்து வருகின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி பல்வேறு தனியார் நிறுவனங்களும், அறக்கட்டளைகள், தொண்டு நிறுவனங்கள், பிரபலங்கள் வாரி வாரி நன்கொடை வழங்குகின்றனர். அந்த வகையில் சாந்தா பயோடெக்னிக்ஸ் நிறுவனத்தின் தலைவர் கே.எல். வரபிரசாத் ரெட்டி தனது மனைவியுடன் திருப்பதிக்கு சென்று ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கியுள்ளனர்.மூன்று, நான்கு மாதங்களில் SVBC ட்ரஸ்டிற்கு 14.5 கோடி ரூபாய் பணம் நன்கொடையாக கிடைத்துள்ளது.
- 489