<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Posts of Gomathisiva RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/posts/rss/author/9]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/posts/rss/author/9" rel="self" type="application/rss+xml" /><description>Posts of Gomathisiva RSS</description><lastBuildDate>Sun, 15 Jun 2025 04:32:12 GMT</lastBuildDate><item><title><![CDATA[பிறந்தநாள் பரிசு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1rf31va]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1rf31va]]></guid><description><![CDATA[<p>"என்னங்க.. உங்க கார்டை குடுங்க. கொஞ்ச நாள் நான் வச்சுக்குறேன்..""ஏன் திடீர்னு கார்டு கேட்கிற?""ஏதாவது emergencyனா.. அதான்..""2 நாள் கழிச்சு தறேன்..""இல்ல எனக்கு இப்பவே வேணும்.. முக்கியமான பொருள் வாங்கணும் அர்ஜெண்ட்டா..""உனக்கு என்ன அர்ஜெண்ட்னு எனக்கே தெரியும். நாளைக்கு என் பிறந்தநாளுக்கு கிஃப்ட்னு சொல்லி என் கார்டுலேயே ஏதாவது ஆர்டர் போடுவ. அதனால நான் 2 நாள் போகட்டும் தர்றேன்..""ஏன்ங்க உங்க சர்ப்ரைஸ நீங்களே கெடுக்குறீங்க?""அதுக்கு தான் உன் கைல காசே குடுக்காம வச்சுருக்கேன்.. ""உங்களுக்கு ஏதாவது நான் குடுக்கணும்னு ஆசை படுறேன்.. பேசாம வர்றீங்களா buffet கூட்டிட்டு போறேன்..""கூட்டிட்டு போய்.. அங்க இதே கார்டை தான் தேய்க்க போற..""பார்த்தீங்களா.. இதுக்கு தான் நான் அப்பவே வேலைக்கு போறேன்னு சொன்னேன். நீங்க தான் நீ வீட்ல இரு. நான் உன்னை ராணி மாதிரி பார்த்துப்பேன்னு சொன்னிங்க. இதுவே நானே சம்பாரிச்சு..."He:"நீ பேசாம அமைதியா நான் சொல்லுறதுக்கெல்லாம் அந்த ஒரு நாளாச்சு தலையாட்டிட்டு இருக்குறது தான் நீ எனக்கு தரப்போற பிறந்த நாள் பரிசு. காசும் செலவாகாது.. நானும் நிம்மதியா இருப்பேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.. "... <a href="https://tamilpoonga.com/view-post/1rf31va">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/nufyztzvmpjffjvtqaz9ja35lgjd9u62.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:32:12 GMT</pubDate></item><item><title><![CDATA[பிராமணரும் மூன்று முரடர்களும்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/ப-ர-மணர-ம-ம-ன-ற-ம-ரடர-கள-ம]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/ப-ர-மணர-ம-ம-ன-ற-ம-ரடர-கள-ம]]></guid><description><![CDATA[<p>ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பிராமணர் வசித்து வந்தார். ஒரு சடங்கு சடங்கு செய்த பிறகு அவருக்கு ஒரு ஆட்டு பரிசாக வழங்கப்பட்டது. அதன் பிறகு அந்த பிராமணர் தனது வீட்டிற்கு பயணத்தைத் தொடங்கினார். வழியில் ஆட்டை கட்டுப்படுத்துவதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாமல் இருக்க, பிராமணர் ஆட்டைத் தனது தோள்களில் சுமந்து சென்றார். அவர் ஒரு சில தூரம் மட்டுமே சென்றபோது, ​​மூன்று முரடர்கள் பிராமணர் ஆட்டை சுமந்து செல்வதைக் கண்டனர். பிராமணர் அவர்களைக் கவனிக்காதபடி ஒரு குறிப்பிட்ட தூரத்தில் அவரைப் பின்தொடர்ந்தனர். அவர்கள் மிகவும் பசியுடன் இருந்தனர், பிராமணர் தனது ஆட்டுடன் தனியாக இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.அவர்கள் விவாதிக்கத் தொடங்கினர். முதல் முரடன், "இந்தப் பசியிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வோம். பிராமணரை ஏமாற்றி ஆட்டைத் திருடிவிட்டால், ஆடு நம் மூவருக்கும் மிகவும் அருமையான உணவைத் தரும். எனக்கு ஒரு திட்டம் இருக்கிறது. நான் சொல்வதைக் கேளுங்கள்" என்று கூறி, மற்ற இருவரின் காதுகளிலும் திட்டத்தைக் கிசுகிசுத்தான்.திட்டத்தின் படி, அவர்கள் பிராமணரின் பின்னால் குனிந்தனர். முதல் முரடன் பிராமணரின் பாதையில் நின்றான். பிராமணர் தனது தோளில் ஆட்டுடன் அவரை அணுகியபோது, ​​அவர் அவரிடம், "ஓ புனித பிராமணரே, நீங்கள் உங்கள் தோளில் ஒரு நாயை சுமந்து செல்வதை நான் காண்கிறேன். உங்களைப் போன்ற ஒரு பக்தியுள்ள நபர் ஏன் தனது தோளில் ஒரு நாயை சுமந்து செல்கிறார் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என்று கூறினார். இதைக் கேட்டதும் பிராமணர் மிகவும் கோபமடைந்து, "உனக்கு கண்கள் இல்லையா? நாய்க்கும் ஆட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உன்னால் பார்க்க முடியவில்லையா?" என்று பதிலளித்தார்.பின்னர் திருடன் தான் தனது பங்கை ஆற்றியதாக நினைத்து அவனிடம், "மன்னிக்கவும், ஐயா, ஆனால் நான் என் கண்களால் பார்ப்பதை மட்டுமே சொல்கிறேன். தெளிவாக, உயர் கல்வி கற்றவராக இருப்பது எல்லாம் இல்லை" என்று கூறினான். பிராமணர் தனது பேச்சைக் கேட்பதை உறுதிசெய்து கொண்டு, முரடன் முணுமுணுத்தான்.அந்த பிராமணர் தனது பயணத்தைத் தொடர்ந்தார், அந்த மனிதனின் முட்டாள்தனத்திற்காக அவரை சபித்தார். ஆனால் அவர் சிறிது தூரம் சென்றதும், இரண்டாவது முரடன் அவரை அணுகினார். பின்னர் அவர் பிராமணரிடம், "மதிப்பிற்குரிய ஐயா, நீங்கள் எவ்வளவு முட்டாள்! இந்த இறந்த கன்றை உங்கள் தோளில் எப்படி சுமக்க ... <a href="https://tamilpoonga.com/view-post/ப-ர-மணர-ம-ம-ன-ற-ம-ரடர-கள-ம">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/idpe644cbzrufpvjxrbedpk9syxjpvih.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:30:33 GMT</pubDate></item><item><title><![CDATA[ஏழையின் குடிசை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/ஏழ-ய-ன-க-ட-ச]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/ஏழ-ய-ன-க-ட-ச]]></guid><description><![CDATA[<p>ஓஷோ சொன்ன கதை...ஒரு ஏழை மரவெட்டி காட்டில் உள்ள சின்னஞ்சிறு குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்தான். அந்தக் குடிசை மிகமிகச் சிறியது. அவனும் அவன் மனைவியும் மட்டுமே அதில் தூங்க முடியும் அளவே வசதி கொண்டது. ஒரு மழை நாள் நள்ளிரவில் விறகு வெட்டியின் குடிசைக் கதவு ‘தடதட’வென்று தட்டப்பட்டது.விறகு வெட்டி தன் மனைவியிடம், “யாரோ ஒருவன் வழிதவறி காட்டில் மாட்டிக்கொண்டு விட்டான். மழையில் எங்கும் போகவும் முடியாது. விலங்குகள் ஆபத்து வேறு இருக்கிறது. அதனால் கதவைத் திற” என்றான். அவன் மனைவியோ இந்தக் குடிசையில் இன்னொரு மனிதனுக்கு எப்படி இடம் கொடுக்கமுடியும் என்று கேட்டாள்.விறகு வெட்டி சிரித்தான். “இது ராஜ அரண்மனை அல்ல. அங்கேதான் இடப் பற்றாக்குறை இருக்கும். இது ஒரு ஏழையின் குடிசை. இங்கே இரண்டு பேர் வசதியாகத் தூங்க முடியும். மூன்று பேர் வசதியாக அமர்ந்து இருக்க முடியும். கதவைத் திற” என்றான்.கதவு திறக்கப்பட்டது. வந்த மனிதன் விறகு வெட்டிக்கும் அவன் மனைவிக்கும் நன்றி சொல்லி அமர்ந்தான். அவர்கள் சேர்ந்து அமர்ந்து கதைகளைச் சொல்லிப் பொழுதைப் போக்கிக்கொண்டிருந்தபோது கதவைத் தட்டும் சத்தம் மீண்டும் கேட்டது. கதவடியில் உட்கார்ந்திருந்த விருந்தினன், இன்னொருவருக்கு இடமில்லையே என்றான்.விறகு வெட்டியோ, “இதைத்தான் நீங்கள் முன்பு வரும்போதும் என் மனைவி கூறினாள். அவளது சொல்லைக் கேட்டிருந்தால் நீங்கள் குடிசைக்குள் உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது. மூன்று பேர் சௌகரியமாக அமர்வதற்கு இடம் இருந்தால் நான்காம் நபருக்கும் கொஞ்சம் இடம் இருக்கத்தான் செய்யும்” என்று சொல்லி கதவைத் திறக்கச் சொன்னான்.தற்போது அவர்கள் ஒருவருக்கொருவர் நெருக்கமாக அமர்ந்திருந்தனர். ஒரு அங்குலம் அளவு கூட இடமில்லை. மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. ஆனால் அது ஒரு மனிதனுடையதைப் போல இல்லை. இப்போதும் விறகுவெட்டி கதவைத் திறப்பானோ என்று இரண்டு விருந்தினர்களுக்கும் அச்சம்.விறகுவெட்டியோ, “கதவைத் திறங்கள். அது என்னுடைய கழுதைதான். இவ்வளவு பெரிய உலகில் அது ஒன்றுதான் எனது நண்பன். நான் தினசரி வெட்டிக்கொண்டு வரும் விறகுகளைச் சுமக்கும் உயிர் அது. வெளியே கடும் மழை பெய்கிறது. என் நண்பனை வரவேற்போம்” என்றான்.விறகு வெட்டியின் மனைவி உட்பட எல்லாரும் கதவைத் திறப்பதை எதிர்த்தனர். “கழுதை உள்ளே வந்தால் அது எங்கே நிற்கும். உனது குடிசையில் இப்படி மாட்டிக்கொண்டிருப்பதை விட மழைய... <a href="https://tamilpoonga.com/view-post/ஏழ-ய-ன-க-ட-ச">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/nj8kypj5bzwrthqlzqqblrhwxdt7aact.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:26:50 GMT</pubDate></item><item><title><![CDATA[பூணூல்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/ப-ண-ல]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/ப-ண-ல]]></guid><description><![CDATA[<p>ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை(ரகுராம்கேட்) நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார். என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான். சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான். அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர். என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா? ஆம்; பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும். ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான்.ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே. என்ன செய்யலாம்?காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான். அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது. இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான். பிராமணரும் தன் மகளுக்கு் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.அவ்வளவு தானே!நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.மன்னன் நகைத்தான். ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான். பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது. மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை. பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன்... <a href="https://tamilpoonga.com/view-post/ப-ண-ல">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/ybvbjgrcapzgn5xkmqqntdxmktv5xvea.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:14:02 GMT</pubDate></item><item><title><![CDATA[பயம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/dlcwj]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/dlcwj]]></guid><description><![CDATA[<p>நேத்து நைட்டு வீட்டுல திடீர்ன்னு கரண்ட் ஆஃப் ஆகிடுச்சு...நான் மெழுகுவர்த்தி பொருத்தி எரிய வச்சேன். ஆனால் கொஞ்ச நேரம் கழிச்சு கரண்ட் வந்துருச்சு.சரின்னு மெழுகுவர்த்திய வாயால் ஊதி அணைக்க try பண்ணேன். மெழுகுவர்த்தி அணைக்க முடியல... ரொம்ப வேகமா ஊதி try பண்ணேன். அப்படியிருந்தும் மெழுகுவர்த்தி அணையல.. எனக்கு மூச்சு முட்ட தொடங்கிடுச்சு.எனக்கு இப்போது லேசாக பயம் வர தொடங்கிருச்சு. ஒரு வேளை ஆக்ஸிஜன் அளவு குறைஞ்சு போயிருக்குமோ... நினைக்க நினைக்க தலை சுத்தியது... பதட்டம் கூடிருச்சு..உடம்பெல்லாம் வியர்க்க ஆரம்பிச்சது.. அய்யோ கடவுளே காப்பாத்துன்னு எல்லா கடவுளையும் கும்பிட தொடங்கினேன்..இதெல்லாம் அமைதியாக சோபால உட்கார்ந்து கவனிச்சுகிட்டு இருந்த என் பொண்டாட்டி சிரிச்சுகிட்டே சத்தமா சொன்னா...யோவ்.. லூசு... முதல்ல வாய்ல இருந்து mask கழட்டிட்டு ஊதித்தொல...... <a href="https://tamilpoonga.com/view-post/dlcwj">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/pjef3ufntk6ustpyrm9rbcu4x6p9w8zc.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:13:02 GMT</pubDate></item><item><title><![CDATA[பலருடைய ஆசை இதுதான்.....]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/பலர-ட-ய-ஆச-இத-த-ன]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/பலர-ட-ய-ஆச-இத-த-ன]]></guid><description><![CDATA[<p>கட்டிய மனைவி சலிப்படைந்து எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.பெற்ற பிள்ளை சனியனே என்று சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.சொத்து சேர்த்த தகப்பனை தவிக்க விட்டு சொத்துக்கு மக்கள் அடித்துக் கொள்ளும் நிலை வருவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.இழுத்துக் கொண்டிருப்பதை பார்த்து நாளை போக வேண்டும் என்று கடவுளை மகள் வணங்குவதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.மூன்று வேலை உணவில் ஒருவேளை உணவை கொடுத்து தின்னு தொலை சனியனே என்று சொல்லும் உன் மரணம் வந்து விட வேண்டும்.உறவுகள் எல்லாம் கூடி அறியாமல் செய்த பாவத்தை எடுத்துரைத்து கைத்தட்டி சிரிப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.நோயில்லாத உடல் ஆரோக்கியமாக இருக்கும் நேரத்தில் மரணம் வந்துவிட வேண்டும்.பெற்ற பிள்ளைகள் கட்டிய மனைவி எட்டி உதைப்பதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.நீ எல்லாம் வாழ்ந்து என்ன பயன் மனைவியும் மக்களும் சொல்வதற்குள் மரணம் வந்துவிட வேண்டும்.... <a href="https://tamilpoonga.com/view-post/பலர-ட-ய-ஆச-இத-த-ன">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/h3zmbq7mwxa46q5jh59kguaswuruqdgr.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:12:13 GMT</pubDate></item><item><title><![CDATA[மாணவர்களுக்கு பிடிக்காத ஆசிரியர்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/ம-ணவர-கள-க-க-ப-ட-க-க-த-ஆச-ர-யர]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/ம-ணவர-கள-க-க-ப-ட-க-க-த-ஆச-ர-யர]]></guid><description><![CDATA[<p>நேர்த்தியா உடுத்து வா! என்று சொன்னால்….உரிய நேரத்துக்கு வா என்று சொன்னால்…..நகம் வெட்டி வா! என்று சொன்னால்…..தலைமுடியை (சிகையலங்காரம்)மாணவனுக்கு ஏற்ற மாதிரி வெட்டி வா! என்று சொன்னால்…..வகுப்பறையை விட்டு தேவையில்லாமல் வெளியே வராதே! என்று சொன்னால் ….சுயமாக இருந்து பாடத்தை படி என்று சொன்னால்..பாடசாலை கீதத்துக்கு மதிப்பளி என்று சொன்னால்….தேவாரம் பாடும் போது சேர்ந்து பாடு என்று சொன்னால்..இதை எல்லாம் தாண்டி கல்வி தான் எல்லாமே என்று நாம் சொன்னால்.....மாணவனின் பதில் ஏளனமான சிரிப்புதான்…..</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/u3x2sy9pawdmxxbkjgmlhtsw8mgxumdj.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:10:34 GMT</pubDate></item><item><title><![CDATA[ஜாடிக்கேத்த மூடி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/1umwf8c]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/1umwf8c]]></guid><description><![CDATA[<p>கணவனுக்கும் மனைவிக்கும் பயங்கர சண்டை.அப்புறம் நாள் முழுக்க ரெண்டு பேரும் பேசவே இல்லை..மனைவியால பொறுக்க முடியல..கணவன் கிட்ட வந்தாங்க..இப்படி பேசாம இருக்கிறது இனிமேலும் சரி இல்லை.ரெண்டு பேரும் விட்டுக் கொடுத்து ஆளுக்கொரு நல்ல காரியம் செஞ்சா சமாதானமாப் போயிடலாம்னாங்க.கணவன்:: நல்லது. என்ன செய்யலாம் சொல்லு.மனைவி:::நீங்க பெரிய மனசு பண்ணி செஞ்ச தப்புக்கு மன்னிப்பு கேளுங்க..கணவன் - சரி நான் பெரிய மனசு பண்ணி நீ செஞ்ச தப்பை மன்னிச்சு விட்டுடறேன்..மனைவி - ~~!!!!!!!!!!!!!!</p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/5euz4yaltamqzy2rcs3gkihgc3dam3qn.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:09:26 GMT</pubDate></item><item><title><![CDATA[வார்த்தைகளுக்கு உள்ள வலிமை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/16qxncr]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/16qxncr]]></guid><description><![CDATA[<p>குத்துச் சண்டை வீரர் ஒருவர் இருந்தார். அந்தப் பகுதியில் அவரை வெல்ல யாருமே இல்லை. சில குத்துக்களிலேயே எதிரியை வீழ்த்திவிடும் வலிமை அவருக்கு இருந்தது. தோல்வி என்பதையே அறியாமல் வாழ்ந்து வந்தார்.இப்போதெல்லாம் அவருடன் போட்டியிட யாருமே முன்வருவதில்லை.. அவருடைய எதிரிகள் எவ்வளவோ விதங்களில் முயற்சி செய்தும் கூட அவரை வீழ்த்த முடியவில்லை.. நல்ல உடற்பயிற்சி , சத்தான உணவு , தேவையான அளவு உறக்கம் என்று தன்னுடைய உடலை நன்றாகப் பேணி வந்ததால், எதிரிகள் அவரை வீழ்த்த வேறு ஏதாவது வகையில் திட்டம் வகுக்க ஒன்று கூடினார்கள். பல விதமான ஆலோசனைகளை அவர்கள் கூடிப் பேசினார்கள். ஏதாவது செய்து அவரைக் கொன்றுவிட்டாலும் அவர் வீரர்களுக்கெல்லாம் முன்மாதிரி என்று பேசப்பட்டு அழியாத புகழைப் பெற்று விடுவார். எனவே அந்த யோசனை கைவிடப்பட்டது.குடிப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கங்களை அவருக்கு அறிமுகப்படுத்தலாம் என்று முயற்சி செய்து அயல் நாட்டு போதை வஸ்துக்களை அவருக்குப் பரிசளிக்க முயன்ற போது அவர்களுக்கு முன்பாகவே அவர் அதை உடைத்து நொறுக்கி அவர்களை அவமானப்படுத்தி அனுப்பினார்.உருப்படியாக எந்த ஒரு யோசனையும் கிடைக்காத நிலையில் அவர்களுக்குள் ஒரு முடிவெடுத்தார்கள். எதையாவது செய்து அவரைப் போட்டியில் வீழ்த்த வேண்டும். அவரை வீழ்த்துபவருக்கு 10லட்சம் பரிசு கொடுப்பதாக வாக்களித்தார்கள்..பெரிய தொகைதான்,......... இருந்தாலும் அவரை வீழ்த்த இதைவிட அதிகமாக செலவு செய்யவும் அவர்கள் தயாராக இருந்தார்கள். இந்தச் செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. இது புதிதாய் சண்டைப் பயிற்சி செய்து வரும் ஒரு இளைஞனின் காதிலும் விழுந்தது. 10 லட்சம் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டாலும் அந்த வீரரின் வலிமை தெரிந்திருந்ததால் போட்டிக்கு வர யாருமே முன்வரவில்லை. இந்த நிலையில் அந்தப் புதிய இளைஞன் , தான் போட்டிக்கு வருவதாக முன்வந்தான். பலரும் அவனை பயமுறுத்தி அவரிடம் மோத வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள். அவனோ தன் முடிவில் உறுதியாக இருந்தான். வீரரும் அவனுடன் சண்டையிட சம்மதித்து விட்டார். போட்டியின் நாள் அறிவிக்கப் பட்டது.புதிய இளைஞன் தன்னுடைய நெருக்கமான நண்பர்களை வரவழைத்தான் . அவர்களிடம் தனக்காக உதவிச் செய்யும்படி சில விஷயங்களைக் கூறினான். அவன் எதற்காக அப்படிச் சொன்னான் என்று அவர்களுக்குப் புரியவில்லையென்றாலும் நண்பனின் வெற்றிக்காக எதையும் செய்யத் தயாராக இருந்ததால் அவன் ச... <a href="https://tamilpoonga.com/view-post/16qxncr">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/jpzbt55vnte6gvqe6lyt4xhlhzhktftl.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:08:19 GMT</pubDate></item><item><title><![CDATA[10 நிமிடம் உட்காருங்கள்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-post/10-ந-ம-டம-உட-க-ர-ங-கள]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-post/10-ந-ம-டம-உட-க-ர-ங-கள]]></guid><description><![CDATA[<p>ஒரு குடிகாரனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - வாழ்க்கை மிகவும் எளிதானது என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு துறவிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்களிடம் உள்ள எல்லாவற்றையும் தானமாக கொடுக்கத் தோன்றும்.ஒரு தலைவனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் படிப்பெல்லாம் பயனற்றது என்று தோன்றும்.ஒரு ஆயுள் காப்பீட்டு முகவருக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - செத்துப்போவது நல்லது என்று தோன்றும்.வியாபாரிகளுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வருமானம் மிகவும் குறைவு என்று உங்களுக்குத் தோன்றும்.விஞ்ஞானிகளுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் அறியாமையின் தீவிரத்தை நீங்கள் உணர்வீர்கள்.நல்ல ஆசிரியர்களுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் மீண்டும் மாணவனாக ஆசைப்படுவீர்கள்.ஒரு விவசாயி அல்லது தொழிலாளிக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - நீங்கள் போதிய அளவு கடினமாக உழைக்கவில்லை என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு சிப்பாய்க்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் சொந்த சேவைகளும் தியாகங்களும் அற்பமானவை என்று உங்களுக்குத் தோன்றும்.ஒரு நல்ல நண்பனுக்கு முன்னால் 10 நிமிடம் உட்காருங்கள் - உங்கள் வாழ்க்கை சொர்க்கம் என்று உங்களுக்குத் தோன்றும்!... <a href="https://tamilpoonga.com/view-post/10-ந-ம-டம-உட-க-ர-ங-கள">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/bx_posts_photos_resized/jnuyknphpgktq2avtuby6ws3pxzddr8s.jpg" />]]></description><pubDate>Sun, 15 Jun 2025 04:03:20 GMT</pubDate></item></channel></rss>