<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Popular RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/popular]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/popular" rel="self" type="application/rss+xml" /><description>Popular RSS</description><lastBuildDate>Tue, 22 Jul 2025 14:59:23 GMT</lastBuildDate><item><title><![CDATA[நாகேஷ்  கவிஞர் கண்ணதாசன் பற்றி கூறியது....]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ந-க-ஷ-கவ-ஞர-கண-ணத-சன-பற-ற-க-ற-யத]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ந-க-ஷ-கவ-ஞர-கண-ணத-சன-பற-ற-க-ற-யத]]></guid><description><![CDATA[<p>ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலசந்தர்.'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.அத்துடன் விடவில்லை.எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ்பெஷலா ஏதாவது செய்...' என்று, கவிஞர் கூறினார். தான் போட்டிருந்த, 'டியூனை' தாலாட்டு பாணியில் சற்றே நீட்டி, போட்டுக் காட்டினார்.ஆளான பொண்ணுக பாக்கு வெக்கும் முன்னமே... என்று, தாலாட்டு வரிகளை சேர்த்து, இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.அனுபவி ராஜா அனுபவி படத்தில் நடித்து கொண்டிருந்த போது, கண்ணதாசனை சந்தித்தேன்.'மெட்ராஸ் ரோடுல நடந்துகிட்டே பாடுறதா, ஒரு பாட்டு எழுத சொல்லியிருக்காங்க...' என்றார்.'கவிஞரே... நான் தாராபுரத்துக்காரன்; மெட்ராஸ் வந்ததுலேர்ந்து, எனக்கு ஒரு பெரிய சந்தேகம்... எங்க ஊர்ல எல்லாம் கன்னு குட்டியை அவிழ்த்து, மாடுகிட்ட விடுவாங்க... அது ஓடி போய், பசு மாட்டு மடியில முட்டி முட்டி, பாலை குடிக்கும். அப்புறம் கன்னுகுட்டியை இழுத்து கட்டி விட்டு கறந்தால், மாடு, பால் சுரக்கும்.'ஆனா, பாருங்கண்ணே... இந்த மெட்ராஸ்ல, கன்னு குட்டியோட தோலுக்குள்ளே வைக்கோலை அடைச்சு வெச்சிடறாங்க... அந்த வைக்கோல் கன்னு குட்டியை, மாடுகிட்ட எடுத்து போய், ரெண்டு நிமிஷம் காட்டறான்; மாடு பால் சுரக்க ஆரம்பிச்சிடுது... இது எப்படின்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...' என்றேன்.'நீ சொல்றது கூட சுவாரசியமா தான் இருக்கு... இதைக் கூட பாட்டுல வெச்சுக்கலாம்...' என்றார்.'ம்... பஞ்சு, எழுதிக்க...' என்று சொல்லி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... என்று ஆரம்பித்து, மடமடவென்று பாடல் வரிகளை சொல்லியபடியே வந்தவர், எனக்கு இனிய ஆச்சரியத்தை கொடுத்தார்...வைக்கோலால கன்னுக்குட்டி, மாடு எப்போ போட்டது... கக்கத்துல துாக்கி வெச்சா கத்த... <a href="https://tamilpoonga.com/view-article/ந-க-ஷ-கவ-ஞர-கண-ணத-சன-பற-ற-க-ற-யத">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/qcvmwyydengmqg5xm8nqar4ckuisjfya.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 14:59:23 GMT</pubDate></item><item><title><![CDATA[எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் திருமணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/16lts8l]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/16lts8l]]></guid><description><![CDATA[<p>வாலி புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்."கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.குமரிப்பெண்ணின் உள்ளத்திலேகதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்."குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''இவ்வாறு வ... <a href="https://tamilpoonga.com/view-article/16lts8l">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/nku6xhr3yxbuu6xkqwnnifw5e4v7ysrf.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:38:53 GMT</pubDate></item><item><title><![CDATA[முதல் கவர்ச்சி கன்னி நடிகை டி ஆர் ராஜகுமாரி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ம-தல-கவர-ச-ச-கன-ன-நட-க-ட-ஆர-ர-ஜக-ம-ர]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ம-தல-கவர-ச-ச-கன-ன-நட-க-ட-ஆர-ர-ஜக-ம-ர]]></guid><description><![CDATA[<p>தென்னிந்தியாவின் முதல் கவர்ச்சி கன்னி, முதல் கவர்ச்சி வில்லி.ஒரு நடிகைக்கு தேவையான எல்லாமே அவரிடம் இருந்தது. மயக்கும் விழிகள், அபார உடலமைப்பு, வசீகரமான குரல், நடனத் திறமை என்று பல்வேறு திறமைகளை ஒருங்கே பெற்றவர்.முதல் படம் சுமாராக போனாலும், அடுத்த படமான 'கச்ச தேவயானி' ஹிட் ஆகி, அவரது வெற்றிப்பயணம் தொடங்கியது. 1944-ல் பிளாக்பஸ்டர் திரைப்படமான 'ஹரிதாஸ்' வெளியாகி இவரை புகழின் உச்சிக்கு கொண்டு போனது. 1944-ம் ஆண்டு தீபாவளி அன்று வெளியான இந்தப்படம், 1946 தீபாவளி வரை ஓடி மாபெரும் சாதனை படைத்தது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்‌.கே.தியாகராஜ பாகவதருடன் நடித்த ராஜகுமாரி, கவர்ச்சியில் தாராளமாகவே நடித்திருந்தார். ஒரு மசாலா படத்துக்கு கவர்ச்சி மிக முக்கியம் என்ற இலக்கணத்தை முதலில் தொடங்கி வைத்தது அநேகமாக இந்தப் படமாகத்தான் இருக்கும். படத்தின் முதல் பாதி முழுவதும் காதல் காட்சிகள்தான்.மிகவும் நெருக்கமான காட்சிகள் அதிகம். உடை விஷயத்திலும் சரி, நடிப்பு விஷயத்திலும் சரி டி‌.ஆர். ராஜகுமாரி மிகவும் தாராளமாக நடித்திருப்பார். அந்த காலகட்டத்தில் யாருமே நினைத்து பார்க்க முடியாத செயல் இது.ஐநது சூப்பர் ஸ்டார்கள் பாகவதர், பி யு சின்னப்பா,. டி ஆர் மகாலிங்கம் , எம்ஜிஆர், சிவாஜி ஆகியோருடன் இணைந்து நடித்த முதல் நடிகைநடிகை இவர் தான்.ஹரிதாஸ், நந்தனார்,  சந்திரலேகா போன்ற படங்களில் நடித்து இந்தியா அளவில் புகழ் பெற்றவர்.எம்ஜிஆர், சிவாஜி இணைந்து நடித்த கூண்டுகிளி படத்தை தயாரித்தவர்.பாண்டி பஜாரில் இருந்த ராஜகுமாரி திரையரங்கத்துக்கு சொந்தமானவர்.கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் தனிமையில் வாழ்ந்த அவர், 1999-ம் ஆண்டு மறைந்தார். இன்று ஒரு பிடி மண் வாங்குவதற்கும் கோடி ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும் சென்னையின், அதிக விலை மதிப்பு மிகுந்த தி.நகரில், முதல் பங்களா கட்டி 'கன்யாகுமரி பவனம்' என பெயரிட்டார்.தி. நகரிலேயே முதன் முதலாக பங்களா கட்டியவர் இவர் தான்.இவர் கடைசியாக நடித்த படம் வானம்பாடி.ஆகும்.... <a href="https://tamilpoonga.com/view-article/ம-தல-கவர-ச-ச-கன-ன-நட-க-ட-ஆர-ர-ஜக-ம-ர">Read more</a></p>]]></description><pubDate>Sat, 02 Aug 2025 04:22:37 GMT</pubDate></item><item><title><![CDATA[இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/13i9jds]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/13i9jds]]></guid><description><![CDATA[<p>இயக்குநர் சுந்தர்.சி-க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவரது பிறந்தநாளில் நடிகையும் அவரின் மனைவியுமான குஷ்பூ தகவல் தெரிவித்தார். அவருக்கு என்ன ஆனது?தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சுந்தர்.சி. பல வெற்றிப்படங்களை இயக்கிய இவர் அண்மையில் கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் ஒப்பந்தமான சில நாட்களிலேயே விலகிய அவர், ரஜினி படத்தை இயக்கப்போவதில்லை என்றும் அதற்காக ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.தற்போது விஷாலை வைத்து ஒரு படமும், நயன்தாரா முன்னணி நாயகியாக வைத்து மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகத்தையும் சுந்தர் சி இயக்கி வருகிறார். இன்று சுந்தர் சியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் மனைவியும் நடிகையுமான குஷ்பூ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.விஐபி பிரேக் தரிசனம் மூலம் வழிபட்ட குஷ்புவுக்கு, தேவஸ்தான நிர்வாகம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.தொடர்ந்து கோவிலுக்கு வெளியே செய்தியாளர்களுடன் பேசிய குஷ்பு, இன்று என்னுடைய கணவர் சுந்தர் சி பிறந்தநாள். சிறிய அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அவரால் வர இயலவில்லை. எனவே நான் குடும்ப உறுப்பினர்களுடன் வந்து ஏழுமலையானை வழிபட்டேன் என்று அப்போது கூறினார். ஆனால் அவருக்கு என்ன அறுவை சிகிச்சை என்ற விவரங்களை குஷ்பூ தெரிவிக்கவில்லை.இதனிடையே, சுந்தர் சியின் பிறந்தநாளையொட்டி வீடியோ வெளியிட்டு அவரது அவ்னி மீடியா நிறுவனம், மூன்று தசாப்தங்களாகத் தொடர்ச்சியாக பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுத்து வரும் பொழுதுபோக்கின் மன்னர் என்று புகழ்ந்துள்ளது.ஆம்பள, ஆக்சன் படங்களைத் தொடர்ந்து விஷால், ஹிப் ஆப் தமிழா, சுந்தர் சி இணையும் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-article/13i9jds">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/5ze6k82pdvccxbdhliitghksfyskcuyx.jpg" />]]></description><pubDate>Fri, 23 Jan 2026 14:25:44 GMT</pubDate></item><item><title><![CDATA[‘பராசக்தி’யில் ரவி மோகன் தான் நம்பர் ஒன் - கெனிஷா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/14a710y]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/14a710y]]></guid><description><![CDATA[<p>‘பராசக்தி’ படத்தில் ரவி மோகன் தான் நம்பர் ஒன்” என்று அவரது தோழி கெனிஷா கருத்து தெரிவித்துள்ளார்.சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன் முதன்முறையாக வில்லனாக நடித்துள்ளார். இன்று காலை படக்குழுவினர் வெவ்வேறு திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தை கண்டுகளித்தனர்.சென்னை - காசி திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை கண்டு களித்தார் ரவி மோகன். அவருடன் அவரது தோழியான கெனிஷாவும் வந்திருந்தார். படம் முடிந்தவுடன் செய்தியாளர்களிடம் கெனிஷா பேசும்போது, “அவர் வில்லனாக நடித்தால் என்ன, ஹீரோவாக நடித்தால் என்ன... அவரால் படம் ஓடும். இந்த கதாபாத்திரத்துக்காக 6 மாதங்கள் கடுமையாக உழைத்தார். என் கண்ணுக்கு அவரை தவிர வேறு யாரும் தெரியவில்லை.இந்தப் படத்தை பார்க்கும்போது அவருக்காகவே பண்ணியிருக்கிறார்கள் என்று தோன்றியது. ‘பராசக்தி’ படத்தில் அவர்தான் நம்பர் ஒன். முதல் பாதியில் அவரை பார்ப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். 2-ம் பாதியில் அவரைத் தாண்டி எதுவுமே இல்லை என தெரிந்துவிடும்” என்று கெனிஷா தெரிவித்துள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-article/14a710y">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/ml35ba8kf8angjpxkswfez84cvqgxw4n.jpg" />]]></description><pubDate>Sat, 10 Jan 2026 15:43:19 GMT</pubDate></item><item><title><![CDATA[‘பராசக்தி’ படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட உயர் நீதிமன்றம் தடை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/d5vvfr]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/d5vvfr]]></guid><description><![CDATA[<p>நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடித்து, சுதா கொங்கரா இயக்கி, ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம் நாளை திரைக்கு வரவுள்ளது.இந்த நிலையில், நாளை திரைக்கு வரவுள்ள ‘பராசக்தி’ திரைபடத்தை இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடைவிதிக்க இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘டான் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது.இந்த மனு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பட தயாரிப்பு நிறுவனம் சார்பில், முன்னணி நடிகர்களை கொண்டு பெரும் பொருட் செலவில் திரைப்படம் எடுக்கபட்டுள்ளதால், சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியானால் ஈடு செய்யமுடியாத இழப்பு ஏற்படும் என தெரிவித்தார்.இதையடுத்து நீதிபதி ‘பராசக்தி’ படத்தை இணையதளங்களில் சட்டவிரோதமாக வெளியிடுவதற்கு தடைவிதித்து உத்தரவிட்டார்.... <a href="https://tamilpoonga.com/view-article/d5vvfr">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/txgp88wtes482frhvavtbyqjxl4amngb.jpg" />]]></description><pubDate>Fri, 09 Jan 2026 14:43:38 GMT</pubDate></item><item><title><![CDATA['ஆண்கள் மேல ஆசை இல்லை' - நடிகை ஸ்ரீலீலா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1ae5tem]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1ae5tem]]></guid><description><![CDATA[<p>'பெல்லி சண்டடி' மூலம் டோலிவுட்டில் அறிமுகமான ஸ்ரீலீலா, தனது அழகாலும் நடிப்பாலும் பிரபலமானார். தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'பராசக்தி' படத்தில் நடிக்கிறார். சுதா கொங்கரா இயக்கும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது.இப்படத்தின் விளம்பரப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதில் பங்கேற்ற நடிகை ஸ்ரீலீலா, படம் குறித்தும் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளார். சமீபத்திய பேட்டியில், தனது திருமணம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.தனது திருமணம் பற்றி பேசிய ஸ்ரீலீலா, சில சுவாரஸ்யமான கருத்துக்களை தெரிவித்தார். தனக்கு இப்போது 24 வயது என்றும், 30 வயதுக்கு மேல் தான் திருமணம் என்றும், அதுவரை பசங்க பேச்சே இல்லை என்றும் கூறியுள்ளார். தான் காதலிப்பதாக வரும் செய்திகள் வெறும் வதந்திகளே என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.நான் யாருடனும் காதலில் இல்லை. படப்பிடிப்புக்கு சென்றாலும், எங்கு சென்றாலும் என் அம்மாவுடன் தான் செல்கிறேன். அப்படி இருக்கும்போது நான் எப்படி காதலில் விழ முடியும்? அமெரிக்கா சென்றபோது கூட அம்மாவுடன் தான் சென்றேன். ஆனாலும் வதந்திகள் வருகின்றன என ஸ்ரீலீலா கூறினார்.ஸ்ரீலீலாவின் திரைப்பயணத்தில் வெற்றிப் படங்கள் குறைவு. ஆனாலும், அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகின்றன. தற்போது 'மாஸ் ஜாதரா', 'பராசக்தி', 'உஸ்தாத் பகத் சிங்' மற்றும் கார்த்திக் ஆர்யனுடன் ஒரு படம் என நான்கு படங்களில் நடித்து வருகிறார்.... <a href="https://tamilpoonga.com/view-article/1ae5tem">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/akwqb6nz5cvtedjfyvrbrm3b7hnyvqgy.jpg" />]]></description><pubDate>Fri, 09 Jan 2026 15:13:32 GMT</pubDate></item><item><title><![CDATA[நடிகர் செந்திலின் மகன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1q5tbik]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1q5tbik]]></guid><description><![CDATA[<p>இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் நடிகர் செந்திலின் மகன்..செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.அதே நேரத்தில் செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தான். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை. தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.... <a href="https://tamilpoonga.com/view-article/1q5tbik">Read more</a></p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 15:16:58 GMT</pubDate></item><item><title><![CDATA[ஜெமினி கணேசன் விரும்பி வாங்கிய பங்களா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/8jwwna]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/8jwwna]]></guid><description><![CDATA[<p>ஜெமினி கணேசனின் கொடைக்கானல் பங்களா ! திரையுலகில் பணக்காரனாவது ஒரே இரவில் நடந்துவிடும் மாயம்.திரையுலகில் சேர்த்து வைத்த சொத்துக்களை மென்மேலும் பெருக்கியவர் ஜெமினி. சினிமாவில் சம்பாதித்த சொத்துக்களை வீண் செலவுகள் செய்யாமல் புத்திசாலித்தனமாக முதலீடு செய்த வெகு சிலரில் அவரும் ஒருவர்.அவரது புத்திசாலித்தனத்திற்கு அடையாளமாக இன்றும் நிற்கிறது அந்த பங்களா. ரெட் லின்ச் என்ற பெயரில் கொடைக்கானலில் ஜெமினியின் திரைப்படங்களைப் போலவே ஒரு நினைவுச் சின்னமாக இன்றும் நிற்கிறது இந்த பங்களா. இது வந்த வரலாறு சுவார்ஸ்யமானது.சென்னை நுங்கம்பாக்கத்தில் ஏறக்குறைய பத்து கிரவுண்ட் நிலத்தை வாங்கிய ஜெமினி அதில் அருமையானதொரு பங்களாவைக் கட்டினார்.புதுமனை புகுவிழாவை அமர்க்களமாக அவர் கொண்டாடினார்.அன்றைய திரைத் துறை பிரபலங்கள் போக ரசிகர்களும் வந்திருந்து வாழ்த்தினார்கள். அவருக்குப் பிரியமான காமராஜரோடு அண்ணா கருணாநிதி என திராவிட இயக்கமும் அதில் கலந்து கொண்டது நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இந்த கொடைக்கானல் பங்களா வந்த விதம் நிறைய பேருக்குத் தெரியாது.பாசமலர் படப்பிடிப்பிற்காக சாவித்திரி ஜெமினி ஜோடி கொடைக்கானலில் வந்திறங்கியது. அப்போது தான் இந்த ரெட் லின்ச் ஜெமினி கண்ணில்பட்டது. நல்லாயிருக்கில்லம்மா.!..அருகிலிருந்த சாவித்திரியிடம் காட்ட அவரது பங்காக பியூட்டிஃபுல். நான்கு ஏக்கர் பரப்பளவு. சுற்றிலும் ரம்மியமான தோட்டம். பல வகை வண்ண மலர்களோடு வித்தியாசமான பழ மரங்கள். நட்ட நடுவே அமைதியான பங்களா. யாரப்பா ஓனரு.?. ஐயா ஒரு வெள்ளைக்கார துரைங்க. பேரு ஹேவர்ட்ஸ் துரை. ஏது இந்த பிரான்டி விஸ்கி தயாரிக்கும் ஹேவர்ட்ஸா?. அவரேதாங்க. பிரிட்டீஷ் ஆட்சியில துரை வாங்கிப்போட்டது.ஆட்சி போனதும் ஒருத்தரை கவனிக்கச் சொல்லீட்டு துரை லண்டன் போயிட்டாருங்க. விக்கிற மூடுல தான் துரை இருக்காரு. அப்படியா!.. செட்டியாரு வந்து பாத்திட்டு போனாரு. எந்த செட்டியார். மதுரைல கருமுத்து செட்டியாருங்க. டி.வி.எஸ்.குரூப் கூட வாங்கப்போறதா பேசிக்கிறாங்க.ஜெமினி ஆர்வமானார். செட்டியாரை அவருக்கு நன்றாகவே தெரியும். ஷூட்டிங் முடிந்து கீழே இறங்கினார். நேராக செட்டியார் வீட்டுக்குப் போனார். வாங்க வாங்க!.. ஏது இந்தப் பக்கம்?. கொடைக்கானல்ல ஒரு ஷூட்டிங். அப்படியே உங்களையும் பாத்திட்டு போகலாம்னு வந்தேன்.அப்புறம் செட்டியார் என ஆரம்பித்தார் ஜெமினி. கொடைக்கானல்ல என... <a href="https://tamilpoonga.com/view-article/8jwwna">Read more</a></p>]]></description><pubDate>Tue, 05 Aug 2025 14:36:03 GMT</pubDate></item><item><title><![CDATA[முனைவர் பட்டம் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ம-ன-வர-பட-டம-ப-ற-ற-நக-ச-ச-வ-நட-கர-ச-ர-ல]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ம-ன-வர-பட-டம-ப-ற-ற-நக-ச-ச-வ-நட-கர-ச-ர-ல]]></guid><description><![CDATA[<p>வேல்முருகன் தங்கசாமி மனோகர் (பிறப்பு: மார்ச் 6, 1960) என்பது இவர் இயற்பெயர்.இவர் பிறந்து வளர்ந்த ஊர் கோவில்பட்டி. அங்கே இருக்கும் GVN கல்லூரியில் ரசாயனத்தில் பட்டப் படிப்பு படித்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.."தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு - 1937 முதல் 1967" என்ற தலைப்பில் .lஎம்.ஃபிலுக்கான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அக்டோபர் 2019 இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் "தமிழ் சினிமாவில் நகைச்சுவை" என்ற தலைப்பில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார்.அவரது கல்லூரி நாட்களில், அவர் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற தமிழ் நடிகர்களைப் போல் மிமிக்கிரி செய்து அவரது அசாத்திய திறமைக்காக அறியப்பட்டார். அவர்தான் திரைப்பட உலகில் நகைச்சுவ்வை நடிகர் சார்லலி என்று அழைக்கப் படுகிறார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மோனோ ஆக்டிங், மேடை நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்தல் போன்றவற்றில் மிகவும் திறமையான இவர், பல்வேறு நாடுகளில் தன் கலையை திறம்பட காட்டியுள்ளார். இவருடைய அபார நடிப்பு திறமைக்காக 2004ல் கலைமாமணி விருது, 2018lல் கலைசிகரம் விருது, மற்றும் பல திரைப்பட விருதுகளை வாங்கியுள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-article/ம-ன-வர-பட-டம-ப-ற-ற-நக-ச-ச-வ-நட-கர-ச-ர-ல">Read more</a></p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 14:49:21 GMT</pubDate></item></channel></rss>