<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Articles of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Articles of sivam RSS</description><lastBuildDate>Mon, 20 Jul 2026 13:19:30 GMT</lastBuildDate><item><title><![CDATA[“சீதையாக நடிக்க தினமும் தியானம் செய்தேன்” - சாய் பல்லவி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1p1ny32]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1p1ny32]]></guid><description><![CDATA[<p>பிரபல இயக்​குநர் நிதேஷ் திவாரி, ராமாயணக் கதையை ‘ரா​மாயணா’ என்ற பெயரில் திரைப்படமாக இயக்​கி​யுள்​ளார். இதில் ரன்​பீர் கபூர் ராம​னாக​வும் சாய் பல்​லவி சீதை​யாக​வும் ராவணனாக யாஷும் அனு​ம​னாக சன்னி தியோலும் நடித்துள்ளனர்.இந்​தப் படம் 2 பாக​மாக உரு​வாகி உள்ளது. ஹாலிவுட்​டில் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்​றும் அனிமேஷன் நிறு​வனத்தை நடத்தி வரும் நமித் மல்​ஹோத்​ரா, தனது பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ் சார்​பில் இதை தயாரிக்​கிறார். நடிகர் யாஷின் மான்​ஸ்​டர் மைண்ட் கிரியேஷன்​ஸும் இணைந்து தயாரிக்​கிறது.இதன்முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளிக்​கும் 2-வது பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்​கும் வெளி​யாக இருக்​கிறது. இப்​படத்​தின் டிரெய்​லர் ஜூலை 24-ல் வெளி​யாக இருக்​கிறது. அதற்கு முன் இப்​படத்​தின் அதி​காரப்​பூர்வ டிரெய்​லர், முதல் முறை​யாக டெல்லியில் நடந்த விழாவில் பிரத்​யேக​மாகத் திரை​யிடப்​பட்​டது.அப்போது தயாரிப்​பாளர் நமித் மல்​ஹோத்ரா கூறும்​போது, “எங்களது நிறு​வனம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரி​வில் 8 ஆஸ்​கர் விருதுகளை வென்று சாதனை படைத்​துள்​ளது. இந்​தி​யா​வில் உள்ள நம்​முடைய கலைஞர்​கள், நம்​முடைய திறமை, ஆர்​வம் ஆகியவை உலகிலேயே சிறந்​தவை என்​ப​தால் தான் இது சாத்தியமானது. ஆனால் அதற்​கான அங்​கீ​காரம் நமக்கு கிடைக்கவில்லை.இந்​தி​யா​வும், இந்​தி​யா​வின் திரைப்​படத் துறை​யும் ஹாலிவுட்​டில் இருந்து தூரத்​தில் இருக்​கிறது. எனவே, நம்​மிடம் இருக்​கும், நமக்குச் சொந்​த​மான, நாம் பெரு​மைப்​படக்​கூடிய ஒரு கதையை ஏன் உலகுக்​குச்சொல்​லக் கூடாது என்று நினைத்​தேன். அதற்கு ராமாயணத்​தை தவிர வேறு எந்த கதை​யும் நினை​வுக்கு வரவில்லை.ராமாயணம் உலகின் மிகச்​சிறந்த கதைகளில் ஒன்​று. அதன் பெருமை, அது சொல்​லும் வாழ்க்கை நெறி​முறை​களில் உள்​ளது. ஏற்​கெனவே அது உலக மக்​களிடம் புகழ்​பெற்ற காவி​யம். ராமாயணத்​தின் பிரம்​மாண்​ட​மான காட்​சிகளை மட்​டுமல்​லாமல், அதன் உணர்​வு​கள், மனி​தாபி​மானம் மற்​றும் காலத்​தால் அழி​யாத ஆன்மா ஆகிய​வற்​றை​யும் இந்​தத் திரைப்​படம் மூலம் பார்வையாளர்​கள் உணர்​வார்​கள் என்று நம்​புகிறேன்” என்றார்.சாய் பல்​லவி கூறும்​போது, “சீதை​யின் கதா​பாத்​திரத்தை நான் தேர்ந்தெடுக்​க​வில்​லை. அந்​தக் கதா ​பாத்​திரத்​தில் நடிக்​கும் பாக்கி​யம் எனக்​குக் கிடைத்துள்ளது. சீதையாக நடிக்க தின​மும் தியானம் செய்​தேன். சில நேரங்​களில்,... <a href="https://tamilpoonga.com/view-article/1p1ny32">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/npmmyzarvphesynx9z3dzprmldad9tqv.jpg" />]]></description><pubDate>Mon, 20 Jul 2026 13:19:30 GMT</pubDate></item><item><title><![CDATA[புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சொக்கத் தங்கம் பட நடிகை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1uu7nrd]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1uu7nrd]]></guid><description><![CDATA[<p>தமிழ் சினிமாவில் சில நடிகைகள் குறைந்த படங்களே நடித்திருந்தாலும் மக்கள் மனங்களில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வரிசையில் குறைந்த படங்களில் நடித்து அதிகம் கவனிக்கப்படாமல் போனவர்தான் நடிகை உமா சங்கரி. தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக திகழ்ந்த சுமித்ராவின் மகளான இவர், 2000 ஆம் ஆண்டு சீமான் இயக்கிய ‘வீரநடை’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.தொடர்ந்து கலகலப்பு, சொக்கத் தங்கம், விகடன், சூரியன், தென்றல், கோவை பிரதர்ஸ், அடைக்கலம், மணிகண்டா, ரசிகர் மன்றம், பாக்கியலட்சுமி போன்ற பல படங்களில் நடித்தார். இறுதியாக அவர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தில் சிறு வயது சுமித்ரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் ‘சொக்கத்தங்கம்’ மற்றும் ‘கோவை பிரதர்ஸ்' படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்ததுள்ள அவர் 2006 ஆம் ஆண்டு திருமணத்திற்குப் பின்னர் சினிமாவில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தினார்.இந்த நிலையில் அவர் எங்கு இருக்கிறார், என்ன செய்கிறார் என எதுவுமே தெரியாமல் இருந்து வந்தது. மேலும் சமூக வலைதளங்களிலும் பெரிய அளவில் அவர் ஆக்டிவாக இல்லாமல் இருந்து வந்தார்.  தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அதில் தான் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், புற்றுநோய்க்கான கீமோதெரபி மற்றும் இம்யூனோதெரபி சிகிச்சையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-article/1uu7nrd">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/65adynm9phddcvbf2ctjuvxwjtvtfqy2.jpg" />]]></description><pubDate>Sun, 19 Jul 2026 14:24:52 GMT</pubDate></item><item><title><![CDATA[ஆபாச நடன சர்ச்சையில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/koakob]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/koakob]]></guid><description><![CDATA[<p>இலங்கையில் இருந்து மும்பைக்குச் சென்று பிரபல பாலிவுட் நடிகையாக மாறிய ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஹீரோயினாக முக்கிய காரணமே மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் தான் என ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை அளித்தன. 200 கோடி ரூபாய் மோசடி வழக்கில் சிக்கி சிறைக்குச் சென்ற சுகேஷ் ஜாக்குலின் தனது காதலி என்றும் அவருக்கு பல விலை உயர்ந்த பரிசுகளை வழங்கியதாக தெரிவித்த நிலையில், ஜாக்குலினும் விசாரணை வலையில் சிக்கினார்.அந்த சர்ச்சைகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தப்பித்து வந்த ஜாக்குலின் தற்போது ஆபாச நடனம் ஆடிவிட்டார் என அவருக்கு எதிராக மிகப்பெரிய சர்ச்சையே வெடித்துள்ளது.எஸ்டி மியூசிக்கில் கடந்த ஜூலை 15ம் தேதி வெளியான ஜுக்னி (Jugni) ஆல்பம் பாடல் 2 நாட்களில் 14 மில்லியன் வியூஸ் கடந்து மிகப்பெரிய ஹிட் அடித்து ஏகப்பட்ட லாபத்தை கொடுத்துள்ளது. இதற்கு காரணம் பாடல் காட்சியில் உள்ளாடை அணியாமல் நடனம் ஆடும் போது ஜாக்குலின் ஃபெர்னாண்டஸின் அந்தரங்க பகுதி அம்பலமானது தான் என்கின்றனர். ஆபாச நடன சர்ச்சை: ஒரு ஆல்பம் வீடியோவை எடிட்டிங் டேபிளில் கூட பார்க்காமல் நடந்த வார்ட்ரோப் மால்ஃபங்கஷனை தவிர்க்காமல் எப்படி மேக்கர்கள் வெளியிடுவார்கள் என்றும் இது திட்டமிட்டு செய்யப்பட்ட மோசடி என்றும் பாலிவுட் ரசிகர்கள் ஜுக்னி பாடலுக்கு எதிராகவும் ஆபாச நடனமாடிய ஜாக்குலினுக்கு எதிராகவும் சோஷியல் மீடியாவில் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.ரசிகர்களின் கண்டனங்களுக்கு இதுவரை ஜாக்குலின் வாய் திறக்காமல் மெளனம் சாதித்து வரும் நிலையில், எதிர்ப்பு தாங்க முடியாமல் பாடலை உருவாக்கியவர்கள் அந்த இடத்தை ப்ளர் செய்துள்ளனர். வீடியோ பாடலில் தற்போது ஜாக்குலின் வெட்ட வெளிச்சமாக தெரிந்த மார்பக பகுதி ப்ளர் செய்யப்பட்டுள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-article/koakob">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/kuqpwhetj5sdgd94v93cnjvfpsbxfyde.jpg" />]]></description><pubDate>Fri, 17 Jul 2026 13:31:22 GMT</pubDate></item><item><title><![CDATA[ ‘ஃபவுஜி’ டிசம்பர் 3-ம் தேதி ரிலீஸ்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/6zwxv4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/6zwxv4]]></guid><description><![CDATA[<p>ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'ஃபவுஜி' திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி, ஒய். ரவிசங்கர் மற்றும் டி-சீரிஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ரிலீஸ் தேதி புதிய போஸ்டருடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இப்படத்தின் முக்கிய சண்டைக் காட்சியை பின்னணியாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் நடிகர் பிரபாஸ் நீண்ட முடியுடன் காயங்கள் நிறைந்த தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இப்படம் குறித்து படக்குழுவினர் "ஃபவுஜி திரைப்படம் போர்க்களப் பின்னணியில் ஆக்‌ஷன் மற்றும் அழுத்தமான கதைக் களத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் சிறந்த தொழில்நுட்பத் திறனுடன் ஆக்‌ஷன் விரும்பிகளுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்" என்று தெரிவித்துள்ளனர்.இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக இமான்வி அறிமுகமாகிறார். இவர்களுடன் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், ஜெயப்பிரதா மற்றும் பானுச்சந்தர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ள இத்திரைப்படத்திற்கு சுதீப் சட்டர்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். அனில் விலாஸ் ஜாதவ் தயாரிப்பு வடிவமைப்பையும், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பையும் கையாண்டுள்ளனர். வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, படத்திற்கான அடுத்தகட்ட ப்ரோமொஷன் பணிகளைத் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.... <a href="https://tamilpoonga.com/view-article/6zwxv4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/vdbnd6wbuuajtun5jmgjttasp2ptnvpm.jpg" />]]></description><pubDate>Fri, 17 Jul 2026 13:14:59 GMT</pubDate></item><item><title><![CDATA[சினிமாவில் ரீ என்ட்ரி தரும் ஷாலினி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1vrzxko]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1vrzxko]]></guid><description><![CDATA[<p>அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் முதன்முறையாக சேர்ந்து நடித்தார்கள். அப்போதே அவர்களுக்குள் காதல் மலர்ந்துவிட்டது. இவர்களது காதலுக்கு இரண்டு பேரின் வீட்டிலும் சம்மதம் கிடைத்ததை தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கிறார்கள். குடும்பத்துடன் இந்தத் தம்பதி நிம்மதியாகவும், மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்துவருகிறது.அஜித் இப்போது நடிப்பில் மட்டுமின்றி கார் ரேஸிலும் கவனத்தை செலுத்திவருகிறார். அதற்கு ஷாலினி தன்னால் முடிந்த அத்தனை சப்போர்ட்டையும் கொடுத்துவருகிறார். பெரும்பாலும் அஜித் ரேஸுக்கு செல்வதற்கு முன்பு அருகே ஷாலினியும் இருக்கும்படி பார்த்துக்கொள்வார். தன் மனைவிக்கு நெற்றியில் ஒரு முத்தம் கொடுத்த பிறகுதான் ஏகே வண்டி ரேஸில் சீறிப்பாயும் என்பது குறிப்பிடத்தக்கது. அதை பார்த்து பலரும், ஜோடினா இப்படித்தான் இருக்கணும் என பூரிப்பார்கள்.இதற்கிடையே அஜித்தின் அடுத்த படம் பற்றிதான் அனைவரது கவனமும் இருக்கிறது. டயர் 1 ஹீரோக்கள் லிஸ்ட்டில் இருக்கும் அஜித்துக்கு தயாரிப்பாளர் கிடைக்கவே இல்லை என தொடர்ந்து பேசப்பட்டது. இதனையடுத்து அஜித்தே படத்தை தயாரிப்பார் என்று சொல்லப்பட்டாது. இந்நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, திருமணத்துக்கு பிறகு சினிமாவிலிருந்து மொத்தமாக ஒதுங்கியிருந்தார். இப்போது அவர் ரீ என்ட்ரி தரவிருக்கிறாராம்.அதாவது, தனது அடுத்த படத்தை தயாரிக்க முடிவெடுத்த அஜித்; நடிக்கவும் செய்வதால் முழு கவனத்தையும் தயாரிப்பு பணிகளில் செலுத்த முடியாது. அதன் காரணமாக தயாரிப்பு பணிகளில் கவனம் செலுத்துமாறு ஷாலினியிடம் ஏகே சொன்னதாகவும்; அதற்கு ஷாலினியும் ஓகே சொல்லிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடிக்கின்றன. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.... <a href="https://tamilpoonga.com/view-article/1vrzxko">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/hcmjxjvxmgbcwwsyxenk6nl23vnb6sgc.jpg" />]]></description><pubDate>Wed, 15 Jul 2026 08:57:39 GMT</pubDate></item><item><title><![CDATA[மந்​திர​வா​தி கதாபாத்திரத்தில் ஃபஹத் ஃபாசில்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/s26mo8]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/s26mo8]]></guid><description><![CDATA[<p>மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ள திரைப்​படம், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. ஃபேன்​டஸி, நகைச்​சுவை படமான இதை ஷஷாங்க் யெலெட்டி இயக்​கி​யுள்​ளார். கால பைரவா இசையமைத்​துள்​ளார்.ஷோயிங் பிசினஸ் நிறு​வனத்​தின் சார்​பில் எஸ்​.எஸ்​.​கார்த்திகேயா, ‘பாகுபலி’ படத்தை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து இப்​படத்தை தயாரித்துள்ளார். ​இதன் டீஸர் வெளியாகி வரவேற்​பைப் பெற்றுள்​ளது.”இதில் சூரி என்ற மந்​திர​வா​தி​யாக ஃபஹத் ஃபாசில் நடித்​துள்ளார். அவர் ஒரு சிறுமிக்கு மேஜிக் செய்து காட்​டு​கிறார். பின்​னர் அந்த சிறுமியை மறையச் செய்​வதன் மூலம் மற்​றொரு பெரிய வித்​தையை காட்​டு​வ​தாக உறுதி அளிக்​கிறார். அப்​போது​தான் அவருக்கு சிக்​கல் தொடங்​கு​கிறது. அது என்ன நடை​பெறுகிறது என்​பதே படத்​தின் கதை. தெலுங்​கில்​ உரு​வாகி​யுள்​ள இப்​படம்​ மற்ற மொழிகளி​லும்​ செப்​. 11-ல்​ வெளி​யாக இருக்​கிறது“ என்றது படக்குழு.... <a href="https://tamilpoonga.com/view-article/s26mo8">Read more</a></p>]]></description><pubDate>Wed, 15 Jul 2026 08:44:54 GMT</pubDate></item><item><title><![CDATA[நடிகர் ஜனகராஜ்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1mbsjsw]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1mbsjsw]]></guid><description><![CDATA[<p>🌹இன்று பல கணவன்மார்கள் தன் மனைவிகள் ஊருக்கு போய்விட்டால் அடுத்த வினாடியே தன்னுடைய வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது🌹 ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா’ என்ற நகைச்சுவையைத்தான். அப்படி பட்ட நகைச்சுவைக்கு சொந்தக்காரராக விளங்கியவர் ஜனகராஜ்.🌹80களி ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்திக் என அனைத்து முன்னனி ஹீரோக்களுடனும் இணைந்து தன்னுடைய தனித்துவமான நகைச்சுவை காட்சிகளாலும் தனக்கே உரிய பாணியாலும் பேசி மக்களை கவர்ந்தவர்.🌹அவருக்கு உண்டான தனிச்சிறப்பே அந்த சிரிப்புதான். அதை இன்றளவும் பல மிமிக்ரி கலைஞர்கள் பின்பற்றி வருகின்றனர். அந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர் ஜனகராஜ்.🌹ஆனால் சில ஆண்டுகளாகவே ஜனகராஜை நாம் சினிமாவில் பார்க்க முடிவதில்லை. அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் 96.🌹அந்த படத்தில் பள்ளிக் கூடத்தின் பாதுகாவலராக நடித்திருப்பார் ஜனகராஜ்.🌹அதன் பிறகு அவரை பார்க்கவே முடியவில்லை. இந்த நிலையில் நீண்ட வருடங்கள் கழித்து ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி கொடுத்த போது வீட்டில் என் மனைவியுடன் இருக்கிறேன். அவ்வப்போது நண்பர்களாக இருக்கும் என் சக நடிகர்களிடம் தொலைபேசியில் பேசிக் கொள்வேன். ஆனால் யாரும் வருவதும் கிடையாது. நானும் போவதும் கிடையாது. அவரவர் வேலையில் பிஸியாக இருப்பார்கள். எனக்கு வயசு 72 ஆகிறது. நலமுடன் இருக்கிறேன் என்று கூறினார்.... <a href="https://tamilpoonga.com/view-article/1mbsjsw">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/xryeggihcm6yzyigtkvv4kzjuhzydfcs.jpg" />]]></description><pubDate>Wed, 15 Jul 2026 08:15:34 GMT</pubDate></item><item><title><![CDATA[சினிமாவில் அவமானம் அதிகம் - நடிகை விசித்ரா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/16r9efv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/16r9efv]]></guid><description><![CDATA[<p>தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் "மடிப்பு அம்சா"வாக வலம் வந்தவர் தான் நடிகை விசித்ரா. முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கவர்ச்சிப் புயலாகப் பல படங்களில் முத்திரை பதித்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டு விலகி கணவர், குழந்தை என செட்டில் ஆனார். நீண்ட இடைவெளிக்குப் பின், விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மீண்டும் சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுத்தார். அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து 'பிக் பாஸ்' வீட்டுக்குள்ளும் நுழைந்து சிறப்பாக விளையாடினார். அப்போது, சினிமா படப்பிடிப்பின் போது தனக்கு நேர்ந்த சில கசப்பான, வலிகள் நிறைந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அது இணையத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாகவும் மாறியது.தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் விசித்ரா, சமீபத்திய பேட்டி ஒன்றில் சினிமா என்பது மிக வேகமாக, நிறையப் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு களம். அதில் புகழும், பணமும் கிடைக்கும். ஆனால், அங்கே உண்மையான அன்பும், கருணையும் கிடைக்குமா? என்று கேட்டால் கிடைக்காது. அதுவும் புதுமுகமாக சினிமாவுக்குள் நுழையும்போது, அங்கே அன்பை எதிர்பார்க்கவே முடியாது. ஆரம்பத்தில் அவமானங்களையும், கேலி கிண்டல்களையும், அலட்சியங்களையும் மட்டும்தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும். ஆனால், ஒரேயொரு ஹிட் படம் கொடுத்துவிட்டால் போதும், உங்களுக்கென்று ஒரு 'மார்க்கெட்' வந்துவிட்டதால், உங்களை அவமதித்த அத்தனை பேரும் புகழ்வார்கள் அது தான் சினிமா.சினிமாத்துறைடிய பொருத்தவரை இங்கு நிரந்தரமான நண்பனும் கிடையாது, நிரந்தரமான எதிரியும் கிடையாது. அதனால்தான் சினிமாவில் எப்போதுமே ஒரு குறிப்பிட்ட எல்லையில் இருக்க வேண்டும். நம்மிடம் மிகவும் பாசமாக பழகுகிறார்களே என்று நெருங்கிவிடக் கூடாது. அதேபோல, எதிரியாக்கி ஒதுக்கவும் கொள்ளவும் கூடாது. ஏனென்றால் காலம் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் மாறும். நான் எப்போதுமே சினிமா நபர்களிடம் ஒரு குறிப்பிட்ட தூரத்தை கடைப்பிடிப்பேன். யாரிடமும் அளவுக்கு அதிகமாக நெருங்கிப் பழக மாட்டேன். அந்த எல்லையை நான் சரியாக வைத்திருந்ததால் தான். இன்று என் வாழ்க்கையை நான் எந்தக் குழப்பமும் இல்லாமல், மிகுந்த சந்தோஷத்தோடு நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று நடிகை விசித்ரா பேசி இருக்கிறார்.... <a href="https://tamilpoonga.com/view-article/16r9efv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/s8tfjcmgjd6lhfq7gne3nknw2bpp48uu.jpg" />]]></description><pubDate>Tue, 14 Jul 2026 13:51:56 GMT</pubDate></item><item><title><![CDATA[‘டிரெ​யின்’ கதை​யில் விஜய் சேதுபதி தவிர வேறு யாராலும் நடித்​திருக்க முடியாது: மிஷ்கின்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1vzgbuv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1vzgbuv]]></guid><description><![CDATA[<p>மிஷ்கின் இயக்கி இசை அமைத்​துள்ள படம், ‘டிரெ​யின்’. விஜய் சேதுப​தி, ஸ்ரு​திஹாசன், நாசர், கே.எஸ்​.ரவி​கு​மார், நரேன் உள்பட பலர் நடித்​துள்​ளனர்.கலைப்​புலி எஸ்.தாணு​வின் வி கிரியேஷன்ஸ் தயாரித்​துள்ள இந்தப் படத்​தின் டீஸர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னையில் நடை​பெற்​றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் வெற்​றி​மாறன், சசி, பாரத்​திபன், அமீர் உள்பட பலர் கலந்து கொண்​டனர்.விழா​வில் மிஷ்கின் பேசும்​போது, “என்​னுடைய ‘நந்​தலாலா’ படக் கதையைச் சொல்​வதற்​காகத் தயாரிப்​பாளர் தாணு சாரை சந்தித்தேன். அவருக்கு அந்த கதை ஒன்​றுமே புரிய​வில்​லை. பிறகு எவ்வளவு பட்​ஜெட் என்று கேட்​டார். ரூ.4 கோடி என்​றேன். அவர் ஒரு ரூ.60 கோடி​யில் படம் பண்​ணலாம் என்​றார். ‘இந்​தப் படத்​துக்கு அவ்​வளவு தேவை இருக்​காது; இது சாதாரண கதை’ என்​றேன். அந்தக் கதை விக்​ர​முக்கு பிடித்​திருந்​தது. ஆனால் பண்ண முடியவில்லை.ஆனாலும் தாணு சார் அப்​போது எனக்கு ஒரு அட்​வான்ஸ் கொடுத்தார். நீண்ட நாளுக்​குப் பிறகு தாணு சாரை சந்​தித்து படம் பண்​ணலாம் என்​றேன். விஜய் சேதுப​தியை வைத்​துப் பண்ணலாம் என்​றார். விஜய் சேதுபதி என்​னுடன் ஒரு படத்​தில் 2 நாட்​கள் நடித்​தார். பிறகு 10 வருடத்​துக்​குப் பிறகு இணைந்துள்ளோம். முன்பு அவர் வாய்ப்பு கேட்ட போது நான் சரியான பதிலளிக்​க​வில்​லை. பிறகு அவர் பெரிய நடிக​ராக வளர்ந்து விட்​டார். என்​னுடைய ‘சைக்​கோ’ படம் பாத்​து​விட்டு என்னைக் கட்​டிப் பிடித்து முத்​தம் கொடுத்​தார். அவரை மிகச் சிறந்த மனித​னாகப் பார்த்​தேன்.இந்​த கதையை விஜய் சேதுப​திக்​காகப் பார்த்​துப் பார்த்து எழுதினேன். கதை​யில், வாழ்க்கை முடிந்​து​விட்​டது என நினைத்துக் கொண்​டிருக்​கிற கதா​பாத்​திரம் அவருக்​கு. இந்​தப் படத்தை விஜய் சேதுப​தி​யைத் தவிர வேறு யாருமே நடித்திருக்க முடி​யாது. கமல் சார் கூட பண்​ணியிருக்க முடி​யாது. விஜய் சேதுபதி ஒரு எரிமலை மாதிரி. என் படம் பற்றி நான் பெருமையாகப் பேசவர​வில்​லை. படம் நன்​றாக இருந்​தால்​தான் ஓடும் என்​பது தெரி​யும். விஜய் சேதுப​தி​யின்​ நடிப்​பை என்​னால்​ மறக்​கவே முடி​யாது” என்​றார்​.... <a href="https://tamilpoonga.com/view-article/1vzgbuv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/zsjgvmqqb3uckhrmbukxbgiy8xwcuzgn.jpg" />]]></description><pubDate>Tue, 14 Jul 2026 13:44:54 GMT</pubDate></item><item><title><![CDATA[சாமியார்களை தொடர்ந்து சந்திக்கும் சஞ்சிதா ஷெட்டி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/bzqspx]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/bzqspx]]></guid><description><![CDATA[<p>ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.ஒரு காலத்தில் "கட்டிப்புடி கட்டிப்புடிடா' என கவர்ச்சி டான்ஸ் போட்ட மும்தாஜ், "வச்சிக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள" என சிம்புவடன் ஆடிய சனா கான் எல்லாம் கிளாமர் ஹீரோயின்களாக இருந்து இப்போ இறை மார்க்கத்தை கடைபிடிக்கும் பெண்களாக மாறியுள்ளனர். அவர்கள் வரிசையில் சஞ்சிதா ஷெட்டியும் பக்தி மயமாக மாறியுள்ளார்.சூது கவ்வும், பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை சஞ்சிதா ஷெட்டி ஏற்கனவே கிரிவலம் எல்லாம் சென்று தனது பக்தியை வெளிப்படுத்திய நிலையில், சமீப காலமாக தொடர்ந்து சாமியார்களை சந்தித்து வருகிறார்.தில்லாலங்கடி படத்தில் தமன்னாவின் தங்கையாக நடித்து ரசிகர்களை அப்போதே கவர்ந்தவர் தான் நடிகை சஞ்சிதா ஷெட்டி. விஜய் சேதுபதி ஜோடியாக சூது கவ்வும் படத்தில் நடித்து வேறலெவலில் பிரபலமானார். பிட்சா 2, என்னோடு விளையாடு, ரம், எங்கிட்ட மோதாதே, வினோதய சித்தம், பஹீரா, பல்லு படாம பாத்துக்கோ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.கவர்ச்சியாக படங்களில் நடித்து வந்த நடிகை சஞ்சிதா ஷெட்டி சமீப காலமாக பயபக்தியாக மாறியுள்ளார். திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது, சாமியார்களை சந்திப்பதாக போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இன்ஸ்டாகிராமில் எப்போதுமே ஹோம்லி லுக்கில் சுடிதார் மற்றும் சேலை அணிந்தே போட்டோக்களை போட்டு வருகிறார்.... <a href="https://tamilpoonga.com/view-article/bzqspx">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/vgsj5mflcigd2ugitz3rru7hhyntjnqu.jpg" />]]></description><pubDate>Mon, 13 Jul 2026 13:31:37 GMT</pubDate></item></channel></rss>