<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Articles of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Articles of sivam RSS</description><lastBuildDate>Sat, 25 Apr 2026 13:41:20 GMT</lastBuildDate><item><title><![CDATA[தெலுங்கில் சேர்ந்து நடிக்கும் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/k7ifnh]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/k7ifnh]]></guid><description><![CDATA[<p>தமிழ், தெலுங்​கில் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டியும் கீர்த்தி சுரேஷும் தெலுங்​கில் இணைந்து நடிக்​கின்​றனர்.தெலுங்​கில் பால​கிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, வெங்கடேஷ் நடித்த சங்​க​ராந்​திக்கு வஸ்​துனம், சிரஞ்​சீவி நடித்த மன சங்​கரவர பிர​சாத் காரு உள்பட சில படங்களை இயக்​கிய​வர் அனில் ரவிபுடி. இவர் அடுத்து இயக்​கும் படத்​தில் வெங்​கடேஷ், கல்​யாண் ராம் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.இப்​படத்​தில் கீர்த்தி சுரேஷ், கீர்த்தி ஷெட்டி நாயகி​களாக நடிக்​கின்​றனர். சீனியர் நடிக​ரான வெங்​கடேஷ் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்​கிறார். கமர்​ஷி​யல் மசாலா படமான இதன் படப்​பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்​கிறது.</p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/wuqlu4yt6lcc3hftcss2dqksysapr76c.jpg" />]]></description><pubDate>Sat, 25 Apr 2026 13:41:20 GMT</pubDate></item><item><title><![CDATA[பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்.]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1alb9by]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1alb9by]]></guid><description><![CDATA[<p>இது 1987 ல் நடந்த சம்பவம்.அதிகாலை 6 மணி.நடிகர் இயக்குனர் பாண்டியராஜன் வீட்டு டெலிபோன் ஒலித்தது. பக்கத்திலேயே அமர்ந்திருந்த பாண்டியராஜன் ரிசீவரை கையில் எடுத்தார்.(அது லேண்ட்லைன் ஃபோன் காலம்)மறுமுனையில், "நான் எம் ஜி ராமச்சந்திரன் பேசுகிறேன்."உட்கார்ந்திருந்த பாண்டியராஜன் தன்னை அறியாமல் எழுந்து நின்று விட்டார். பதட்டத்தில் வார்த்தைகள் வரவில்லை பாண்டியராஜனுக்கு."தலைவரே... வணக்கம்...சொல்லுங்க தலைவரே..."இதை நடிகர் பாண்டியராஜன் அவர்கள் சொல்ல, நான் அவருக்கு அருகில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். "எதற்காக சார் எம்ஜிஆர் அந்த நேரத்தில் கூப்பிட்டார் ?""அது வந்து ஜான் சார், அப்போதான் எனக்கு முதல் பையன் பிறந்திருந்தான்.""சரி.""முந்தின நாள் இரவு பிரசவம்.நான் அதிகாலையில்தான் வீட்டுக்கு வந்து, லேண்ட் லைன் ஃபோன் மூலமாக உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் குழந்தை பிறந்த தகவலை சொல்ல ஆரம்பித்தேன். எனக்குப் பக்கத்தில் டைரியை வைத்துக் கொண்டு அதில் இருந்த பெயர்களையும் நம்பர்களையும் பார்த்து ஒவ்வொருவராக அழைத்து ஃபோனில் சொல்லிக் கொண்டிருந்தேன்.ஒரு கையில் போன் ரிசீவர்.மறு கையில் டைரி.இப்போது மாதிரி மொபைல் போன் இல்லையே. பெயரை save செய்து வைத்துக் கொள்வதற்கு.உற்று உற்றுப் பார்த்து, ஒரு பெயர் கூட விடாமல் ஃபோன் செய்தேன்.ஒரு கட்டத்தில் களைப்பாக இருந்தது.கையில் இருந்த ரிசீவரை கீழே வைத்தேன். அப்போதுதான் டெலிபோன் மணி அடித்தது.எனக்கு திகைப்பாக இருந்தது.நான்தானே ஒவ்வொருவராக அழைத்து அழைத்து, குழந்தை பிறந்த விஷயத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது போன் வருகிறதே. இந்த நேரத்தில் அழைப்பது யாராக இருக்கும் ?குழப்பத்துடனே ஃபோனை கையில் எடுத்து ஹலோ என்றேன்.மறுமனையில் எம்ஜிஆர்.எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. "தலைவரே தலைவரே.." என்று அடுத்த வார்த்தை வராமல் தவித்துக் கொண்டிருந்தேன்."என்ன தலைவரே இவ்வளவு அதிகாலையில் கூப்பிட்டு இருக்கீங்க?""உனக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறதாமே ?""ஆமாங்க தலைவரே...""அம்மாவும் பிள்ளையும் நல்லா இருக்காங்களா ?""நல்லா இருக்காங்க,இந்த நேரத்தில் கூப்பிட்டு விசாரித்ததற்கு ரொம்ப நன்றி தலைவரே !""சரி பத்திரமா பாத்துக்கோ""தலைவரே இந்த விஷயம் உங்களுக்கு எப்படி...?""தினத்தந்தி பேப்பரில் பார்த்து தெரிந்து கொண்டேன். ஏதாவது உதவி வேணும்னா எப்ப வேணும்னாலும் என்னை கூப்பிடுஇப்போ ஃபோனை வை... <a href="https://tamilpoonga.com/view-article/1alb9by">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/vvaa2vmwcdpdatwkjddfjtguwdhfenzx.jpg" />]]></description><pubDate>Sat, 25 Apr 2026 11:59:19 GMT</pubDate></item><item><title><![CDATA[பாரதிராஜாவின் வீடியோ சொல்லும் கசப்பான உண்மை]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/filoi2]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/filoi2]]></guid><description><![CDATA[<p>சமீபத்தில் நடிகை ராதிகா, 'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவைச் சந்தித்து நலம் விசாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் அவர் "தாய்க்கிழவி படம் பார்த்தீர்களா?" என்று சிரித்துக்கொண்டே கேட்கிறார். ஆனால், அந்த வீடியோவில் பாரதிராஜாவை அந்த நிலையில் பார்ப்பதற்கே மிகவும் மனதிற்குக் கஷ்டமாக இருக்கிறது.​வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனை உடையில் மிகவும் தளர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரை, அவர் தனிப்பட்ட முறையில் ஓய்வெடுக்கும் போது இப்படி வீடியோ எடுத்து வெளியிடுவது எந்த விதத்தில் நியாயம்? ஒரு காலத்தில் தமிழ் சினிமாவையே தன் கட்டளைக்குக் கீழ் வைத்திருந்த ஒரு மாபெரும் கலைஞனுக்கு, அவரது முதிர்ச்சியான காலத்தில் நாம் கொடுக்கும் மரியாதை இதுதானா?​நலம் விசாரிக்கச் செல்வது நல்ல விஷயம் தான். ஆனால், அதை ஏன் கேமரா வைத்து ரெக்கார்ட் செய்து ஊருக்கெல்லாம் காட்ட வேண்டும்? பிரபலங்கள் தங்களின் தனிப்பட்ட பப்ளிசிட்டிக்காகவோ அல்லது சோஷியல் மீடியா லைக்குகளுக்காகவோ ஒருவரின் முதுமையையும், இயலாமையையும் இப்படிப் பொதுவெளியில் காட்சிப்படுத்துவது அப்பட்டமான உரிமை மீறல் இல்லையா? ஒரு நோயாளியின் தனிப்பட்ட சுதந்திரம் (Privacy) இங்கு எங்கே போனது?... <a href="https://tamilpoonga.com/view-article/filoi2">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/s69lx6xubmeinwz7pxpcecrgnkdnrisp.jpg" />]]></description><pubDate>Tue, 21 Apr 2026 14:29:33 GMT</pubDate></item><item><title><![CDATA[பாடகி சரளா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1dii67t]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1dii67t]]></guid><description><![CDATA[<p>யார் இந்த சரளாம்மா?எந்த வி.ஐ.பி-யின் பிறந்தநாள் வந்தாலும், தொலைக்காட்சியில், ‘நூறாண்டு காலம் வாழ்க... நோய் நொடியில்லாமல் வளர்க... ஊராண்ட மன்னர் புகழ்போலே... உலகாண்ட புலவர் தமிழ்போலே...’ என்று பின்னணியில் ஒலிக்கிற மூவர் குரல்களில் ஒரு குரல் இவருடையது. ‘பேசும் தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலைப் பாடிய சரளா இப்போது எப்படியிருக்கிறார்?‘`பக்கவாதம் வந்து ஒரு வரி பாடறதுக்கே இன்னிக்குப் படாதபாடு பட்டுக்கிட்டிருக்குற நான், 50 வருஷத்துக்கு முன்னாடி வாழ்வாங்கு வாழ்ந்தவம்மா. பெரியார், கலைஞர், எம்.ஜி.ஆர், கண்ணதாசன், வாலின்னு என் குரலைப் பாராட்டாத வி.ஐ.பி-க்களே இல்லை. அந்த அளவுக்குக் குரலால் கொடிகட்டிப் பறந்தவ நான்’’ என்கிற சரளாம்மாவின் குரலில் இப்போதும் இருக்கிறது கம்பீரம்.‘`மயிலாப்பூரில் பிறந்தேன். இன்னிக்கு ஊருக்கு வெளியே இந்தச் சின்ன கூண்டுக்குள்ள இருக்கேன். சின்ன வயசுல சினிமாப் பாட்டுன்னா உயிரு. அம்மா பாடகி, அப்பா பாடகர் போன்ற பின்னணியெல்லாம் எனக்குக் கிடையாது. பாட்டுச் சொல்லிக்கொடுக்கக் குருவும் கிடையாது. சினிமா பாடல்களைக் கேட்டு நானா பாடக் கத்துக்கிட்டேன். அம்மாவுக்கு நான் பாட்டுப் பாடறது ரொம்பப் பிடிக்கும். அவங்க சப்போர்ட் இருந்ததால, எம்.ஆர்.ராதா நாடகம், தங்கவேலு நாடகத்திலெல்லாம் பாட்டுப் பாட ஆரம்பிச்சேன்.ஒரு தடவை மயிலாப்பூர் ஆர்.ஆர் சபாவில் நடந்த நாடகத்தில் ‘பஞ்சவர்ணக்கிளி’ படத்தில் வருகிற ‘சத்தியம் சிவம் சுந்தரம்' பாடலைப் பாடிக்கிட்டிருந்தேன். அப்போ என் பாட்டைக் கேட்ட இசையமைப்பாளர் ராமமூர்த்தி (விஸ்வநாதன்), ‘உச்ச ஸ்தாயியிலும் எவ்வளவு இனிமையா இருக்கு இந்தப் பொண்ணோட குரல்’னு சொல்லி ‘தேன்மழை’ படத்துல பின்னணிப் பாடகியா அறிமுகப்படுத்தினார். அதுக்கப்புறம் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துடன் ‘வருவாயா வேல்முருகா’, சீர்காழி கோவிந்தராஜனுடன் ‘சிந்தனையில் மேடைகட்டி’, இளையராஜா வுடன் ‘உனக்கெனத்தானே இந்நேரமா’... இப்படி 20 பாடல்கள்தான் சினிமாவில் பாடியிருக்கேன். ஆனா, மேடைக் கச்சேரிகளில் நான் பாடின பாடல்களை எண்ணவே முடியாது.85 வயசாயிடுச்சு. நான்கு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் மேடைக் கச்சேரி பண்ணிக்கிட்டுதான் இருந்தேன். திடீர்னு வந்த பக்கவாதம் பாட முடியாதபடிக்கு என் குரலை எடுத்துட்டுப் போயிடுச்சு. எவ்வளவோ மேடு பள்ளங்கள் பார்த்துட்டேன். இஸ்லாமியப் பாடல்கள் பாடறதுல ஹனீபாவுக்கு அப்புறம் சரள... <a href="https://tamilpoonga.com/view-article/1dii67t">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/vx7p3yhzhiljrw9bxm5acgtnqm5yjfqt.jpg" />]]></description><pubDate>Mon, 20 Apr 2026 15:18:14 GMT</pubDate></item><item><title><![CDATA[பாரதிராஜா கார் பஞ்சர் ஆனதால் கிடைத்த வாய்ப்பு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/3yr985]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/3yr985]]></guid><description><![CDATA[<p>ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார். இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான்.விதி சில நேரங்களில் எவ்வளவு அழகாகத் தன் விளையாட்டைத் தொடங்குகிறது என்பதற்கு உதாரணமாக தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்துள்ளார். எதிர்பாராமல் நடக்கும் ஒரு சிறு தற்செயல் நிகழ்வு, ஒருவரின் வாழ்க்கைப் பாதையையே எப்படி மாற்றியமைக்கிறது என்று கூறியுள்ளார்.தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா, கார்த்திக், ராதா, ராதிகா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். அந்த வரிசையில் அவர் அறிமுகம் செய்த முன்னணி நடிகை ஒருவர் தான் விஜயசாந்தி. தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், சோலோ ஹீரோயினாக பல வெற்றிப்படங்களையும் போலீஸ் கேரக்டரிலும் நடித்து அசத்தியுள்ளார்.குறிப்பாக ரஜினிக்கு மனைவியாகவும் மன்னன் படத்தில் நடித்திருந்தார்.இவர் அறிமுகம் ஆனது பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கல்லுக்குள் ஈரம் படம் தான். இயக்குநர் பாரதிராஜா அவர்கள் ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக கார் பஞ்சர் ஆனது. அதைச் சரிசெய்ய டிரைவர் குறைந்தபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் ஆகும் எனக் கூறியுள்ளார். இதனால் "வெயிலில் நிற்பதை விட, அருகில் இருக்கும் இந்த ஸ்டூடியோவில் போய் அமருங்கள் சார்" என்று டிரைவர் சொல்ல, பாரதிராஜாவும் சம்மதித்து உள்ளே சென்றார்.அந்த ஸ்டூடியோவில் சும்மா அமர்ந்திருக்கப் பிடிக்காமல், அங்கு இருந்த புகைப்படங்களை அவர் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே இருந்த ஒரு பெண்ணின் புகைப்படம் அவர் கண்களில் பட்டது. அந்தப் பெண் தான் பின்னாளில் புகழ்பெற்ற அந்த நடிகை. "யார் இந்தப் பெண்? இவரை உடனே பார்க்க வேண்டுமே!" என்று பாரதிராஜா ஆர்வம் காட்டினார். உடனடியாக அந்தப் பெண்ணின் தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.இயக்குநர் பாரதிராஜா ஒரு புது முகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறார், உங்கள் மகளின் புகைப்படம் அவருக்குப் பிடித்திருக்கிறது" என்ற செய்தி கேட்டு அந்தத் தந்தை தனது மகளை அழைத்துக் கொண்டு பாரதிராஜாவைச் சந்திக்கச் சென்றார். சந்திப்பு முடிந்த கையோடு, பாரதிராஜா அவருக்கு ஒரு ஃபோட்டோ ஷூட் நடத்தச் சொன்னார். புகைப்படங்களில் அந்தப் பெண் மிக அழகா... <a href="https://tamilpoonga.com/view-article/3yr985">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/kyqnxhv5arri6epufvdvwchbyucjeh4z.jpg" />]]></description><pubDate>Mon, 20 Apr 2026 15:10:24 GMT</pubDate></item><item><title><![CDATA[பிரபல திரைப்பட பாடகி ஆஷா போஸ்லே காலமானார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/n1ozu4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/n1ozu4]]></guid><description><![CDATA[<p>இந்திய திரையுலகின் ஈடு இணையற்ற இசை மேதைகளில் ஒருவரான ஆஷா போஸ்லே, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நம்மை விட்டு மறைந்துள்ளார்.. 92 வயதாகும் இந்தப் புகழ்பெற்ற பாடகிக்கு ஏற்பட்ட திடீர் பாதிப்பு, இந்திய இசை ரசிகர்களைப் பெரும் கவலையிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.கடந்த சில நாட்களாகவே அவருக்கு லேசான உடல்நல பாதிப்புகள் இருந்த நிலையில், நேற்று அவரது நிலைமை சற்று மோசமடைந்துள்ளது.. உடனடியாக மும்பையில் உள்ள ஒரு உயர்தர தனியார் மருத்துவமனையில் ஆஷா போஸ்லே அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.இது குறித்து ஆஷா போஸ்லேவின் பேத்தி விளக்கம் தந்திருந்தார்.. அதில், ஆஷாவுக்கு நுரையீரலில் ஏற்பட்ட தொற்று (Chest Infection) காரணமாகவே சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், தற்சமயம் அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். முதுமை காரணமாக அவருக்குத் தேவையான அனைத்து மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு, நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர் குழுவால் அவர் கண்காணிக்கப்பட்டு வந்தார். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக ஒருபுறம் தகவல்கள் வெளியானாலும், அவரது குடும்பத்தினர் மற்றும் மருத்துவமனை தரப்பில் இருந்து வரும் தகவல்கள் மார்புத் தொற்று தொடர்பான சிகிச்சையை உறுதிப்படுத்தின. இந்நிலையில் நம்மை விட்டு இசைக்குயில் பறந்துள்ளது.. ஆஷா போஸ்லேவின் இசைப் பயணம் என்பது ஒரு சகாப்தம். மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்தைத் தாண்டி, தனது தனித்துவமான குரலால் ஏழு தசாப்தங்களாக் திரையுலகை ஆட்சி செய்தவர்.... <a href="https://tamilpoonga.com/view-article/n1ozu4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/xq3zwnejthumndz568gzjwbdpfuprun9.jpg" />]]></description><pubDate>Mon, 13 Apr 2026 10:59:01 GMT</pubDate></item><item><title><![CDATA[ஸ்ரீலீலா மாதவிடாய் பற்றி கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/bgp01s]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/bgp01s]]></guid><description><![CDATA[<p>நடிகை ஸ்ரீலீலா மாத​வி​டாய் குறித்து தெரி​வித்த கருத்து சமூக வலை​தளங்​களில் பெரும் சர்ச்​சையை ஏற்படுத்தியுள்​ளது. பவன் கல்​யாணுடன் ஸ்ரீலீலா நடித்​துள்ள ‘உஸ்​தாத் பகத் சிங்’ படத்​தின் வெற்றி விழா சமீபத்தில் நடந்​தது.அதில் கலந்​து​கொண்ட ஸ்ரீலீலா​விடம், ஒரு பெண்​ணாக அவர் எதிர்​கொண்ட பெரிய சவால் குறித்​துக் கேட்கப்பட்டது. அதற்​குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “பெண்களுக்கு மாத​வி​டாய் என்​பது சாக்​குப்​போக்கு கிடையாது. நான் பெரும்​பாலான பாடல்​களில் நடனமாடும்​போது மாத​வி​டாய் காலத்​தில்​தான் இருந்தேன்.உடல்​ரீ​தி​யான தடைகளைத் தாண்டி முன்​னேற வேண்டும். உளவியல் ரீதி​யாகவோ அல்​லது உடல் ரீதி​யாகவோ மாத​விடாயைக் காரண​மாகச் சொல்​லக்​கூ​டாது” என்று கூறியிருந்​தார். மருத்​து​வப் படிப்பை முடித்​துள்ள ஸ்ரீலீலாவின் இந்​த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் கடுமை​யான விமர்​சனங்​கள் எழுந்​தன.மருத்​து​வம் படித்த ஒரு​வருக்கு மாத​வி​டாய் வலி, ஒரு பெண்​ணின் அன்​றாடச் செயல்பாடு​களை எவ்​வளவு பாதிக்​கும் என்​பது தெரிந்​திருக்க வேண்​டும். அவ்​வாறு இருந்​தும், ‘இது ஒரு சாக்​குப்​போக்கு அல்ல’ என்று அவர் கூறியது, அந்த வலியை அனுபவிக்​கும் மில்​லியன் கணக்கான பெண்​களுக்கு இழைக்​கப்​படும் அநீதி என பலர் விமர்சித்து வருகின்​றனர்.... <a href="https://tamilpoonga.com/view-article/bgp01s">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/iesfgxqjmnngvnm8cfeeqvtb5q4egpsh.jpg" />]]></description><pubDate>Sat, 11 Apr 2026 15:25:09 GMT</pubDate></item><item><title><![CDATA[‘துரந்தர் 2’ படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/o8ctuv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/o8ctuv]]></guid><description><![CDATA[<p>பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் நடிப்பில் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘துரந்தர் 2’. இத்திரைப்படம் கடந்த மாதம் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் நிறுத்தி வைக்க வேண்டும் எனமதுரையைச் சேர்ந்த டி. ராகேஷ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் கடந்த மார்ச் 15-ஆம் தேதி முதல் அமலில் உள்ள நிலையில், இப்படத்தில் அரசியல் தொடர்பாக ஒரு சார்பான கருத்துகள் இருப்பதால் ‘துரந்தர் 2’ திரைப்படத்தை தமிழக திரையரங்குகளில் தற்போதைய நிலையில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.தேர்தலுக்கு பின் துரந்தர் 2 திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மதாதிகாரி, நீதிபதி அருள் முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில், தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்திய அரசின் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் தேசியப் பாதுகாப்பு கொள்கைகளை இப்படம் பாராட்டும் வகையில் உள்ளதால் இத்திரைப்படத்தின் திரையிட்டிருப்பது, நடைமுறையில் உள்ள தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என்று வாதிட்டிப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை முன்வைப்பதாகவும், திரைப்படத்தின் எந்தப் பகுதிகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுகின்றன என்பதைக் குறிப்பிடவில்லை என தெரிவித்தனர்.மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய சான்றிதழை மனுதாரர் எதிர்க்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.... <a href="https://tamilpoonga.com/view-article/o8ctuv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/q3ufrwk3wfvb5try6rujthhupf9s45wj.jpg" />]]></description><pubDate>Fri, 10 Apr 2026 15:21:22 GMT</pubDate></item><item><title><![CDATA[ஜோதிடரின் வாக்கு பொய்த்தது]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/16xvth6]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/16xvth6]]></guid><description><![CDATA[<p>முடியவே முடியாது. இவனெல்லாம் நிச்சயமாக சினிமாவுக்கு வர வாய்ப்பே இல்லை."ஒரு சிறுவனின் ஜாதகத்தை பார்த்து விட்டு, ஒரு ஜோதிடர் கணித்த கணிப்பு இது. "நான் சொல்வதை நீங்கள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இவன் ஜாதகப்படி, திரை உலகத்துக்கும் இவனுக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே கிடையாது."இப்படி அந்த ஜோதிடர் சொன்னதைக் கேட்டு, அந்த சிறுவனின் தாய் கவலை அடைந்தார். ஏனென்றால் சினிமாவுக்கு போய் ஜெயித்துக் காட்டுவேன் என்று ஒற்றைக் காலில் நின்று அடம் பிடித்தான் அவருடைய மகன்.ஜோதிடர் சொன்ன எதிர்மறையான கருத்தைக் கேட்டு அந்தப் பையன் வருத்தம் கொள்ளவில்லை; வைராக்கியம் கொண்டான்.அந்த ஜோதிடரின் இடத்தில் வைத்தே அவரிடம் சவால் விட்டான்."ஜோதிடர் அய்யா, நல்லா கேட்டுக்கோங்க. உங்கள் ஜோதிடத்தை நான் பொய்யாக்கிக் காட்டுகிறேன். சினிமாவில் நிச்சயமாக ஜெயித்து காட்டுகிறேன். உங்கள் கணிப்பு தப்பு என்பதை கட்டாயம் நிரூபிப்பேன்."புறப்பட்டுப் போனான். போராடினான்.புதிய புதிய முயற்சிகள் செய்தான்.ஜோதிடரிடம் சவால் விட்டுச் சொன்னதை வெகு சீக்கிரத்திலேயே நிறைவேற்றிக் காட்டினான்.அந்தச் சிறுவன்தான் பின்னாளில் பின்னணி பாடல்களில் தனி முத்திரை பதித்த பி.பி. ஸ்ரீனிவாஸ். டிஎம்எஸ் கொடி உச்சத்தில் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே, தனக்கென்று ஒரு தனிக்கொடியை பறக்க விட்ட தனித்துவமான பாடகர்.எத்தனை எத்தனை இனிய பாடல்கள் !காலங்களில் அவள் வசந்தம்...மயக்கமா கலக்கமா...நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்...ரோஜா மலரே ராஜகுமாரி...நிலவே என்னிடம் நெருங்காதே...'இனிமைக்கு இன்னொரு பெயர் பிபி ஸ்ரீநிவாஸ்' என்று எல்லோரையும் சொல்ல வைத்தார் பி பி ஸ்ரீநிவாஸ்.சின்ன வயது ஜோதிடர் சம்பவம் பற்றி, பிற்காலத்தில் அவரிடம் கேட்டபோது, "ஜோதிடம் உண்மையோ பொய்யோ, எனக்கு தெரியாது. ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்வேன்.நாம் உண்ணும் ஒவ்வொரு தானியத்திலும் நம் பெயர் எழுதியிருந்தால்தான் நாம் சாப்பிட முடியும். அது போலத்தான் நான் பாடிய ஒவ்வொரு பாடலிலும் ஆண்டவன் என் பெயரை எழுதியிக்கிறான். அதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது" என்று சொன்னார் பிபி ஸ்ரீநிவாஸ்.அதனால்தான் ஏ எம் ராஜா பாட வேண்டிய 'காலங்களில் அவள் வசந்தம்' பாடலை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக பி பி ஸ்ரீநிவாஸ் பாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அந்தப் பாடலை பாடிய பிறகு, அவரது புகழ் நினைத்தே பார்க்க முடியாத உயரத்திற்கு சென்றது.'... <a href="https://tamilpoonga.com/view-article/16xvth6">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/drg22a6ax6zdrkkgdlcarqbvysjlwjxx.jpg" />]]></description><pubDate>Fri, 10 Apr 2026 14:37:19 GMT</pubDate></item><item><title><![CDATA[ஏப்ரல் 24ஆம் தேதி ரீ-ரிலீஸ் ஆகிறது ‘சிவகாசி’]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/e2g07g]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/e2g07g]]></guid><description><![CDATA[<p>விஜய் நடித்த ‘சிவகாசி’ திரைப்படம் டிஜிட்டல் முறையில் மாற்றப்பட்டு ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது.2005-ஆம் ஆண்டு பேரரசு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் ‘சிவகாசி’. தற்போது இப்படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றப்பட்டு புதுப்பொலிவுடன் ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. விரைவில் புதிய ட்ரெய்லர் உள்ளிட்டவற்றை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவான இப்படத்தில் அசின், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், வையாபுரி உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்திருந்தனர். இப்படம் மாபெரும் வசூல் சாதனை புரிந்தது. விஜய்யின் ‘கில்லி’ படம் மறுவெளியீட்டிலும் வசூல் சாதனை புரிந்தது. இதனை கணக்கில் கொண்டு ஏ.எம்.ரத்னம் ‘சிவகாசி’ படத்தினையும் மறுவெளியீடு செய்ய முடிவு செய்திருக்கிறார்.... <a href="https://tamilpoonga.com/view-article/e2g07g">Read more</a></p>]]></description><pubDate>Thu, 09 Apr 2026 15:32:15 GMT</pubDate></item></channel></rss>