<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Articles of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Articles of sivam RSS</description><lastBuildDate>Thu, 14 May 2026 14:27:29 GMT</lastBuildDate><item><title><![CDATA[கேன்ஸ் பட விழா​வில்  ‘டிசி’ டிரெய்​லர்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/19784c5]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/19784c5]]></guid><description><![CDATA[<p>‘ராக்​கி’, ‘சாணிக்​கா​யிதம்’, ‘கேப்​டன் மில்​லர்’ படங்​களை இயக்​கிய அருண் மாதேஸ்​வரன், அடுத்து இயக்​கி​யுள்ள படம் ‘டிசி’. இதில் லோகேஷ் கனக​ராஜ், தேவ​தாஸ் என்ற கேரக்​டரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.சன் பிக்​சர்ஸ் தயாரிக்​கும் இந்த கேங்​ஸ்​டர் டிராமா படத்​துக்கு அனிருத் இசை அமைக்​கிறார். இதில் சந்​திரா என்ற கதாபாத்திரத்தில் வாமிகா கபி​யும் பார்​வதி என்ற கதாபாத்திரத்தில் சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி​யும் நடிக்​கின்​றனர்.இப்​படத்​தின் புரமோஷன் டீஸர் சில மாதங்​களுக்கு முன் வெளியாகி வரவேற்​பைப் பெற்​றது. இந்​நிலை​யில் இப்​படத்​தின் டிரெய்​லர் தற்​போது நடை​பெற்று வரும் கேன்ஸ் திரைப்​பட​ விழாவில் நாளை வெளி​யிடப்பட இருப்​ப​தாக சன் பிக்​சர்ஸ் அறிவித்​துள்​ளது.</p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/sghydmyjge5ntzlzg3n9xn753x92z3wq.jpg" />]]></description><pubDate>Thu, 14 May 2026 14:27:29 GMT</pubDate></item><item><title><![CDATA[இது உங்களுக்கு தெரியும்தானே?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1hp4yea]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1hp4yea]]></guid><description><![CDATA[<p>நடிகை சரிதா.... சுஜாதா என்ற படத்தில் நடித்திருக்கிறார்சுஜாதா................லலிதா என்ற படத்திலும்லலிதா........... . விஜயகுமாரி என்ற படத்திலும்விஜயகுமாரி..... சாரதா என்ற படத்திலும் நடித்திருக்கிறார்கள் !அஜீத்............ காதல் கோட்டை படத்தில் சூர்யா என்ற பெயரிலும்சூர்யா......... மாயாவி படத்தில் பாலையா என்ற பெயரிலும்பாலையா.... காதலிக்க நேரமில்லை படத்தில் விஸ்வநாதன் என்ற பெயரிலும் நடித்திருக்கிறார்கள். ( நம்ம மெல்லிசை மன்னர் ஒரு நடிகரும் கூட... காதல் மன்னன்.. காதலா , காதலா படங்களில் இவரது அற்புத நடிப்பைக் காணலாம் ! )விஜய்........ தமிழன் படத்தில் சூர்யா என்ற பெயரிலும்சூர்யா....... ஆதவன் படத்தில் மாதவன் என்ற பெயரிலும் நடித்திருக்கிறார்கள்.சிவாஜி .... கௌரவம் படத்தில் ரஜினிகாந்த் என்ற பெயரிலும்ரஜினி காந்த்.... சிவாஜி படத்தில் சிவாஜி என்ற பெயரிலும் நடித்திருக்கிறார்கள்... <a href="https://tamilpoonga.com/view-article/1hp4yea">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/b9rmggnlkhcg3tedbdyzgdvm44fbknub.jpg" />]]></description><pubDate>Wed, 13 May 2026 15:42:18 GMT</pubDate></item><item><title><![CDATA[நடிப்புலக ராட்சசி நடிகை சரிதா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/bzvu8e]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/bzvu8e]]></guid><description><![CDATA[<p>தலைமுடியை இழுத்து.. அந்த இடத்துலேயே எட்டி உதைத்து கொடுமை!! உச்சம் பெற்ற நடிகையின் சொல்ல முடியா வலி!!சினிமா உலகில் உயரம் தொடும் புகழ் கிடைத்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்விகளை சுமந்த பல நடிகைகள் உண்டு. அதில் ஒருவர்தான் சரிதா.. அபிலாஷா என்ற இயற்பெயர் கொண்டவரை, சினிமாவுக்காக இயக்குநர் கே. பாலச்சந்தர் வைத்த பெயர்தான் 'சரிதா'. பணம், புகழ் போன்றவைகளில் சரிதா வெற்றி பெற்றாலும் சொந்த வாழ்க்கை துயரம் பரிதாபகரமானது.ஆழமான நடிப்புடன், "மரோ சரித்ரா" படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சரிதா.. காலப்போக்கில் பல மொழிகளிலும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார்.கருப்பாக இருந்தால், குண்டாக இருந்தால் சினிமாவில் நடிகையாக முடியாது என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் சரிதா. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அவர் நடித்த படங்கள் அனைத்தும் கதைக்கும் நடிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தவை. பாலச்சந்தர் தன்னுடைய 15 படங்களிலும் சரிதாவை நடிக்க வைத்ததும், அந்த 15 படங்களுமே வெற்றி பெற்றதும் இதற்கு சாட்சியாகும்.பாலச்சந்தர், பாலுமகேந்திரா போன்ற ஜாம்பவான்கள் சரிதாவின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பார்கள் என்றால், அவரது நடிப்பு எப்படிப்பட்டது என்று ஸ்பெஷலாக சொல்ல வேண்டியதில்லை.. பல மாநில விருதுகள், தேசிய விருதுகள் என சரிதாவுக்கு அங்கீகாரம் கிடைத்தாலும், மேலும் பல தேசிய விருதுகள் கிடைக்க வேண்டிய நடிகை என்பதையும் மறுக்க முடியாது.ஆனால், அப்படி கிடைக்கவில்லை என்பதுதான் வேதனை. காரணம், சில இந்தி நடிகைகளின் படங்கள் இந்திய அளவில் அதிகம் வெளியானதால், அந்த வாய்ப்புகள் சரிதாவுக்கு வராமலேயே போய்விட்டன.. "மூன்றாம் பிறை" படத்தில் சரிதாவால் கால்ஷீட் காரணமாக நடிக்க முடியவில்லை. ஒருவேளை அதில் நடித்திருந்தால், தேசிய விருது அவருக்கே சென்றிருக்கும் என்று அப்போதைய பத்திரிகைகள் எழுதின.திரையில் உச்சத்தை தொட்ட வாழ்க்கை, நிஜத்தில் அத்தனை இனிமையானதாக சரிதாவுக்கு அமையவில்லை..ஆம், 2011-ல் மலையாள புகழ் நடிகரும், அரசியல்வாதியுமான முகேஷை திருமணம் செய்தார்.. ஆனால் அந்த திருமணம் சரிதாவுக்கு பேரதிர்ச்சியாக முடிந்தது. கர்ப்பமாக இருந்தபோது கணவரால் தாக்கப்பட்டதாக, அடித்து விரட்டப்பட்டதாக கண்ணீர் பேட்டிகளை சரிதா தந்துள்ளார்.. இது தொடர்பாக ஹேமா கமிட்டியில் அவர் அளித்த புகார், ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய... <a href="https://tamilpoonga.com/view-article/bzvu8e">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/ztqdnvtxsakvcvkut2suzf3dqpy956tm.jpg" />]]></description><pubDate>Wed, 13 May 2026 15:36:12 GMT</pubDate></item><item><title><![CDATA[உதவி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/yexumz]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/yexumz]]></guid><description><![CDATA[<p>மக்கள் திலகம் எம்ஜிஆர் கடந்த 1972 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கி முதலில் சந்தித்த தேர்தலிலே வெற்றி பெற்று முதலமைச்சரானார். அதன் பிறகு அவர் சாகும் வரை முதலமைச்சராகவே இருந்தார்.ஆனால் அவர் முதல் முதலில் கட்சி ஆரம்பித்து, முதல் தேர்தலை சந்தித்தபோது அவருக்கு ஏராளமான பண நெருக்கடி இருந்ததாகவும், அதில் அவருக்கு பலர் உதவி செய்த நிலையில் அவரது கட்சிக்காக நடிகை லதா பணம் கொடுத்ததாகவும் தெரிகிறது.இது குறித்து லதா ஒரு பேட்டியில் கூறிய போது எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்தித்தபோது நிதி நெருக்கடியில் இருந்தார். அப்போது நான் சாகுந்தலம் என்ற நாடகத்தை நடத்தி அந்த நாடகத்தின் மூலம் கிடைத்த வருமானத்தில் 32 லட்சம் ரூபாய் கொடுத்தேன். 45 ஆண்டுகளுக்கு முன் நான் கொடுத்த 32 லட்சம் இன்று பல கோடிக்கு சமம் என்றும் அந்த பேட்டியில் லதா தெரிவித்திருந்தார்.அந்த பணத்தை எம்ஜிஆர் என்னிடம் வாங்கும்போது நான் எத்தனையோ பேருக்கு பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறேன், ஆனால் நீ எனக்கு இப்போது கொடுக்கிறாயா? என்று கிண்டலாக கூறியதாகவும் அதை என்னால் இப்போதும் கூட மறக்க முடியாது என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.ஆனால் அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் தான் மிகவும் இக்கட்டான நிலையில் இருந்த போது எம்ஜிஆர் தான் உதவினார் என்றும் அவர் செய்த உதவி நான் கொடுத்த 32 லட்சத்தை விட பெரியது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.குறிப்பாக கடந்த 1986ஆம் ஆண்டு லதாவின் தாயார் உடல் நலம் இன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது முதலமைச்சராக இருந்த எம்ஜிஆர், லதாவின் அம்மா உடல்நிலை குறித்து கேள்விப்பட்டதும், உடனே மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். என்னிடம் ஏன் ஒரு வார்த்தை சொல்லவில்லை என்று உரிமையுடன் கோபப்பட்ட எம்.ஜி.ஆர், உடனடியாக மருத்துவர்களை அழைத்து லதாவின் அம்மாவுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய வேண்டும் என்றும், அதற்கு தேவையான செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.இருப்பினும் லதாவின் அம்மா உடல் நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி காலமாகிவிட்டார். அப்போது லதாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் ஆறுதலாக இருந்தது எம்ஜிஆர் தான் என்றும் கூறப்பட்டது.இந்நிலையில் தான் லதாவின் அம்மா சென்னையில் ஒரு பங்களா போன்ற வீட்டை கட்டிக் கொண்டு இருந்தார். அப்போதுதான் அவர் திடீரென இறந்து விட்டதால் அந்த வீட்டை... <a href="https://tamilpoonga.com/view-article/yexumz">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/raewvudxl3dxzmgjwepq3bf7xw4cmbx6.jpg" />]]></description><pubDate>Mon, 11 May 2026 09:16:40 GMT</pubDate></item><item><title><![CDATA[சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/2keov3]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/2keov3]]></guid><description><![CDATA[<p>’சேயோன்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கவுள்ள ‘சேயோன்’ படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. ஒரேகட்டமாக இதன் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.இதில் நாயகியாக பாக்யஸ்ரீ போஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இன்று அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு, இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாயகி விவகாரம் தகவலாக இருந்ததை படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.‘சேயோன்’ படத்தில் பால சரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் உடன் நடிக்கவுள்ளார். இதன் முழு படப்பிடிப்பையும் மதுரையை சுற்றியுள்ள பகுதிகளிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்கள். அக்டோபரில் பட வெளியீடு என்பதை படத்தின் அறிமுக வீடியோவில் தெரியப்படுத்தியுள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-article/2keov3">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/jyurwf7du7ebsxwnyq2abazt5rvwkrkv.jpg" />]]></description><pubDate>Wed, 06 May 2026 12:51:04 GMT</pubDate></item><item><title><![CDATA[திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி விபத்தில் மரணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/9jj11z]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/9jj11z]]></guid><description><![CDATA[<p>ராஜாஸ்தான் மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், இன்று (மே 5) பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக சினிமா படங்களில் நடித்து வருகின்றனர்.கடந்த 1980-களில் அவரது திரைப்பட தயாரிப்பு பணியை அவர் தொடங்கினார். சுமார் 40+ ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவம் கொண்டவர். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.... <a href="https://tamilpoonga.com/view-article/9jj11z">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/hngmewjtnlcsy2xhj2uq6hu2yufm8jts.jpg" />]]></description><pubDate>Tue, 05 May 2026 18:03:12 GMT</pubDate></item><item><title><![CDATA[பாண்​டி​ராஜ் இயக்​கத்தில் ஜெயராம், ஊர்​வசி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/j04u6c]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/j04u6c]]></guid><description><![CDATA[<p>‘தலை​வன் தலை​வி’ படத்​தின் வெற்​றிக்​குப் பிறகு இயக்​குநர் ‘பசங்க’ பாண்​டி​ராஜ் இயக்​கும் படத்​துக்கு ‘பரிமளா அண்ட் கோ’ என்று தலைப்பு வைத்​துள்​ளனர்.ஜெய​ராம், ஊர்​வசி, சந்​தோஷ் சோபன், சஞ்​சனா கிருஷ்ண​மூர்த்​தி, சாண்​டி, அனந்​திகா சனில்​கு​மார் உள்பட பலர் நடித்​துள்​ளனர். யோகி​பாபு, மிஷ்கின், சிங்​கம்​புலி ஆகியோ​ரும் முக்​கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர்.லைகா புரொடக்‌ஷன்ஸ் சார்​பில் சுபாஸ்​கரன், தமிழ்க்​குமரன் புரொடக்‌ஷன்ஸ் மற்​றும் பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்​கின்​றன. ஜார்ஜ் சி.​வில்​லி​யம்ஸ் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் முதல் தோற்​றம் வெளி​யிடப்​பட்​டுள்​ளது.“இப்​படத்​தின் கதை, வித்​தி​யாச​மான குடும்​பத்​தைச் சுற்றி நகர்​கிறது. அந்த குடும்​பத்​தில் உள்ள மனிதர்​களின் தனித்​து​வ​மான குணா​திச​யங்​கள் மற்​றும் அவர்​கள் சந்​திக்​கும் அபூர்​வ​மான சம்​பவங்​கள் கதை​யின் மையம். சென்​னை​யில் தொடங்​கி, கோவை, பாலக்​காடு வரை பயணிக்​கும் இந்த கதை, த்ரில்​லர் பாணி​யிலும் நகைச்​சுவை கலந்​தும் உரு​வாகி​யுள்​ளது” என்​றது படக்​குழு.... <a href="https://tamilpoonga.com/view-article/j04u6c">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/vjp5w7ieqstibuvcstltdyikcejbljuc.jpg" />]]></description><pubDate>Sun, 03 May 2026 15:46:33 GMT</pubDate></item><item><title><![CDATA[‘ஜனநாயகன்’ பட லீக் விவகாரம் - 9 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/m0ii4d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/m0ii4d]]></guid><description><![CDATA[<p>நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை இணையதளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட 9 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை வாரியத்தின் மறு ஆய்வு குழு முன் ஆய்வில் உள்ள நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி சட்டவிரோதாமாக இணையதளத்தில் வெளியானது.பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், 21 பேர் மீது சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீநாத், சஞ்சய், பாலகிருஷ்ணன், மணிகண்டன், ருத்ரன், ராஜேஷ், பிரசாந்த், செல்வம் மற்றும் ரஜினி ஆகியோர், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.இந்த மனுக்கள், நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில், ‘இந்த படத்தை ஆன்லைன், சமூக வலைதளங்களில் வெளியிட்டதில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. கூகுள் டிரைவ் லிங்க் மட்டும் பெற்றோம். எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜாமீன் வழங்க வேண்டும்’ என வாதிடப்பட்டது.காவல் துறை தரப்பில் ஆஜரான மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன், ‘பல கோடி ரூபாய் முதலீட்டில் தயாரிக்கப்பட்ட படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக வெளியிடப்பட்டதால், பெரும் தொகையை ஈட்டி உள்ளனர்.புலன் விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. இந்த சதித் திட்டத்தின் மற்ற தொடர்புகள் குறித்தும் கண்டறியப்பட வேண்டும் என்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது’ என வாதிட்டார்.பட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என்.புரொடக்‌ஷன்ஸ் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ‘படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட்டதால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. எனவே, ஜாமீன் வழங்கக் கூடாது’ என ஆட்சேபம் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, குற்றச்சாட்டுகளின் தீவிரம், தற்போதைய புலன் விசாரணை நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, 9 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.... <a href="https://tamilpoonga.com/view-article/m0ii4d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/jvicvanxqs9sdu2bpqd6zhnmsqw2uhhg.jpg" />]]></description><pubDate>Sat, 02 May 2026 16:15:07 GMT</pubDate></item><item><title><![CDATA[28 வருடங்​களுக்​குப் பிறகு நாகார்ஜுனா படத்​தில் நடிகை தபு நடிக்கிறார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1pot7db]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1pot7db]]></guid><description><![CDATA[<p>நடிகர் நாகார்​ஜு​னா​வின் 100-வது படத்தை அவரது அன்​னபூர்ணா ஸ்டூடியோஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​தை, ‘நித்​தம் ஒரு வானம்’, ‘மேட் இன் கொரி​யா’ ஆகிய படங்​களை இயக்​கிய ரா.​கார்த்​திக் இயக்​கு​கிறார். இந்​தப் படத்​தில் தபு முக்​கிய வேடத்​தில் நடிக்கிறார்.இரு​வரும் 28 வருடங்​களுக்​குப் பிறகு மீண்​டும் இணைந்து நடிக்கின்​றனர். 1996ம் ஆண்டு இரு​வரும் நடித்து வெளி​யான ‘நின்னே பெல்​லாட​டா’ என்ற தெலுங்கு திரைப்​படம் பிரம்​மாண்ட வெற்​றி​ பெற்றது. கடைசி​யாக 1998-ல் வெளி​யான ‘ஆவிடா மா ஆவிடே’என்ற படத்​தில் நடித்​திருந்​தனர்​.இப்​போது மீண்​டும் சேர்ந்து நடிக்​கின்​றனர். இதன் படப்​பிடிப்பு ஹைத​ரா​பாத்​தில் தொடங்​கி​யுள்​ளது. அதில் இணைந்​துள்​ளதை சமூக வலை​தளப் பக்​கம் மூலம் தெரி​வித்​துள்​ளார் தபு.</p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/qzqtvrl4xsc7fyzsgjmsddzekavdtmaf.jpg" />]]></description><pubDate>Wed, 29 Apr 2026 15:46:16 GMT</pubDate></item><item><title><![CDATA[வறுமையில் வாடிய நடிகர்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1j106ex]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1j106ex]]></guid><description><![CDATA[<p>திறமை இருந்தும் வாய்ப்பு இல்லாமல் வறுமையில் வாடிய நடிகர்!நடிகர் நெல்லை சிவா கோலிவுட்டில் பல்வேறு படங்களில் நடித்தவர். நடிகர் வடிவேலுடன் இணைந்து பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.ஆண்பாவம் படத்தின் மூலம் அறிமுகமானார். நகைச்சுவை நடிகர் மற்றும் துணை நடிகராகவும் நடித்துள்ளார்.மகாபிரபு, வெற்றிக் கொடி கட்டு, கண்ணும் கண்ணும் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் பணியாற்றியுள்ளார்சின்ன வேடத்தில், சில நிமிடங்கள் வந்து சென்றாலும், தன்னுடைய நெல்லை ஸ்லாங்கில் அழகாக பேசி, மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சிவா. ஆண்பாவம் படத்தில் இவர் அறிமுகம் ஆனார்.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் நெல்லை தமிழில் பேசியது இப்போது வைரல் மீம் மெட்டீரியல். சில வருடங்களுக்கு முன் வெளியான பாபநாசம் படத்திலும் கூட நெல்லை சிவா நடித்து இருந்தார்.கற்றது களவு, சகுனி என்று பல படங்களில் நெல்லை சிவா நடித்துள்ளார். காமெடி வேடங்கள் மட்டுமின்றி, குணச்சித்திர தோற்றங்களிலும் கூட இவர் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சரியாக வாய்ப்பு கிடைக்காமல் இவர் கஷ்டப்பட்டு வந்தார்.அதிலும் கொரோனா காரணமாக படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் இவர் பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டு வந்த இவர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும் முன் இவரின் உயிர் பிரிந்தது.வடிவேலின் கிணத்தை காணும் காமெடியில் போலீஸ் அதிகாரியாக வந்து இவர் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். அந்த காமெடியில் இவர் ... <a href="https://tamilpoonga.com/view-article/1j106ex">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/hdkgvagdtj2vvm78rbfc2waxketpxcdh.jpg" />]]></description><pubDate>Mon, 27 Apr 2026 12:28:06 GMT</pubDate></item></channel></rss>