<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Articles of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Articles of sivam RSS</description><lastBuildDate>Thu, 03 Sep 2026 10:22:52 GMT</lastBuildDate><item><title><![CDATA[ஜென்சி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/124a445]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/124a445]]></guid><description><![CDATA[<p>🌹''ஜென்சின்னு ஒரு பொண்ணு இருக்காங்க. அற்புதமான குரல். நீங்க ஒரு தடவை கேளுங்க. பிடிச்சுருந்தா உங்க இசையில் பயன்படுத்திக்கங்க'''' இதுதான் இளையராஜாவிடம், பின்னணிப் பாடகர் யேசுதாஸ் சொன்னது.🌹திறமையற்றவர்களை யேசுதாஸ் போன்றவர்கள் பரிந்துரை செய்யமாட்டார் அப்படின்னு சொல்லுற இளையராஜா, உடனே ஜென்சியை கேரளாவில் இருந்து வரச்சொல்லி குரல் சோதனை செய்கிறார்.🌹அப்போது ஜென்சி '''அன்னக்கிளி ஒன்னைத் தேடுதே''' பாடல் பாடுகிறார். குரல் சோதனைக்காக வந்த ஜென்சிக்கு உடனடியா பாடும் வாய்ப்பு கிடைக்குது. திரிபுரசுந்தரி அப்படிங்கிற படத்தில் ஜானகியோட இணைந்து ஒரு பாடல் பாடுறாங்க. இரண்டாவது 'வட்டத்துக்குள் சதுரம்'' படத்தில் ஒரு பாடல் பாடுகிறார்.🌹அடுத்த பாடல்தான் ஜென்சியின் குரலைத் தமிழர்களின் வாழ்க்கையில் நிரந்தரமாக்கியது.🌹மழை முடிந்த பொன்மாலை ஒன்றில், மிச்சமிருக்கும் குளிரோடு இணைந்து வரும் இளம் சூரியனைப்போன்ற ''அடி பெண்ணே'' பாடல்தான் அந்த இரண்டாவது பாடல்.🌹அவர் அறிமுகமான அந்த 1978 -ம் வருடத்திலேயே அடுத்தடுத்து ஐந்து பெரிய படங்களில் பாடினார். அதில் ஒரு பாடல் பிரியா படத்தில் வரும் என்னுயிர் நீதானே''' பாடல்.🌹அவரை தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்திய யேசுதாசுடன் இணைந்து பாடிய அந்தப்பாடல்தான் ஜென்சியின் மனதுக்கு நெருக்கமான பாடல் என்று கூறுகிறார்கள்.🌹புதிய வார்ப்புகள் , நிறம் மாறாத பூக்கள் படங்களில் அவர் பாடியிருந்த பாடல்களைக் கேட்ட பின், ஜென்சியின் தீவிர ரசிகராக இயக்குனர் பாரதிராஜா மாறினார் . இதன் காரணமாகவே அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், என்று வரிசையாக பாரதிராஜா படங்களில் தொடர்ந்து பாடினார் ஜென்சி.🌹புதிய வார்ப்புகள் படத்தில் ஜென்சி பாடிய 'தம்தனதம்தன தாளம் வரும்' பாடல் இப்போதும் ஆச்சரியமானது என்கிறார்கள். மலையாளம் மட்டுமே தெரிந்த ஜென்சி, தமிழை அத்தனை அழகாக மூச்சு விடாமல் பாடியது முக்கியமானது என்கிறார்கள்.🌹தமிழ்த் திரையுலகிலிருந்து ஜென்சி காணாமல் போனதற்கு அவருடைய தந்தை அந்தோணி ஒரு காரணம் என்று பத்திரிக்கைகளில் இப்போதும் குற்றம்சாட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் தங்கவிடாமல் செய்து, ஜென்சியை இசையமைப்பாளர்கள் தொடர்பு கொள்ள விடாமல் செய்துவிட்டார் என்று சுட்டிக்காட்டுகிறார்கள்.🌹பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி ஆகியோரும் ஜென்சி தமிழ்த் திரையுலகில் இருந்து காணாமல் போனதற்குக் காரணம் என்று பூடகமாகச் சொல்லப்பட்டாலும், தான் ... <a href="https://tamilpoonga.com/view-article/124a445">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/dziqrlb3dppxkfbpc8mjfdevys3s5tun.jpg" />]]></description><pubDate>Thu, 03 Sep 2026 10:22:52 GMT</pubDate></item><item><title><![CDATA[சிவாஜிக்கே நடிப்பு சொல்லி தந்த நாகேஷ்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1qc3x95]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1qc3x95]]></guid><description><![CDATA[<p>திருவிளையாடலில் நடந்த அனுபவம் க்ளாசிக் சினிமாவில் காமெடியில் கலக்கிய முக்கிய நடிகர்களில் ஒருவர் நாகேஷ். மனமுள்ள மறுதாரம் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய நாகேஷ், எம்.ஜி.ஆர், சிவாஜி, முத்துராமன், ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் இணைந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். காமெடி வசனங்கள் மட்டுமல்லாமல் தனது உடல்மொழியாலும் ரசிகர்களை சிரிக்க வைத்த நாகேஷ் ஒரு சில படங்களில் நாயகனாகவும் நடித்துள்ளார்.அதேபோல் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என்றால் அது சிவாஜி கணேசன் தான். அவரை போல் யாரும் நடிக்க முடியாது, அவர் ஒரு நடிப்பு பல்கலைகழகம், அவரை தான் இன்றைய நடிகர்கள் பலரும் பின்பற்றி வருகிறார்கள் என்று பலரும் கூறி வருகின்றனர். சிவாஜி நாகேஷ் கூட்டணியில் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அதிலும் திருவிளையாடல் படத்தில் அந்த தருமி கேரக்டரில் நாகேஷ் தான் நடிக்க வேண்டும் என்று சிவாஜி விரும்பியதாகவும் தகவல்கள் உள்ளது.இதுகுறித்து ஓர் பேட்டியில் நாகேஷ் கூறுகையில்,அதேபோல் திருவிளையாடல் படம் எனக்கு தருமி வேஷம் என்ற உடனே நான் அதில் எதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.அப்போது மைலாப்பூர் கபாலீஸ்வர் கோவிலில் ஒல்லியான ஒருவர் செய்ததை தான் நான் திருவிளையாடல் படத்தில் செய்தேன். ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் இடையில் கிடைத்த 2 மணி நேர இடைவெளியில் தான் அந்த காட்சியில் நடித்தேன். அந்த வருடத்தில் தான் நான் நடித்த 46 படங்கள் வெளியானது. அப்படி என்றால் நான் எவ்வளவு பிஸி என்று நினைத்துப்பாருங்கள்.இந்த படத்தின் ஷூட்டிங்கில் சிவாஜிக்கு சிவன் வேஷம் போட லேட் ஆனும் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் நான் என் காட்சிகளை முதலில் வசனம் பேசிவிடுகிறேன் என்று கேமராமேனிடம் சொன்னேன் அவரோ நீங்கள் வசனம் பேசும்போது சிவாஜி வந்துவிட்டால் என்ன செய்வது என்று கேட்டார். ஆனாலும் அவரை சமாதானப்படுத்தி நான் நடித்துக்கொண்டிருந்தேன்.ஆனால் நான் நடிக்க தொடங்கிய உடனே சிவன் வேடத்தில் சிவாஜி செட்டுக்குள் வந்துவிட்டார். இதை பார்த்து கடுப்பான சிவாஜி இயக்குனரிடம் என்ன நாகேஷ் நடிச்சிட்டு இருக்கான் என்று கேட்டார். அதன்பிறகு இயக்குனர் அவரை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். நடித்து முடித்து அந்த காட்சியை பார்த்த சிவாஜி நாகேஷ் நல்ல நடிச்சிருக்கான். ஒரு சில இடங்களில் மட்டும் சரியாக வரல அந்த இடங்களில் மீண்டும... <a href="https://tamilpoonga.com/view-article/1qc3x95">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/h8dirutmr5xrp4asbyg4zem6epmyezkf.jpg" />]]></description><pubDate>Thu, 03 Sep 2026 10:10:22 GMT</pubDate></item><item><title><![CDATA[அப்பர் வேடத்தில் சிவாஜிகணேசன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1ah5wim]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1ah5wim]]></guid><description><![CDATA[<p>🌹சாரதா ஸ்டுயோவில் திருவரூட் செல்வர் படப்பிட்டிப்பில் சிவாஜிகணேசன் திருநாவுக்கரசர் என்ற அப்பர் வேடத்தில் சிவனடியாராக நடித்துக்கொண்டருந்தார்🌹படப்பிடிப்பு முடிந்த பிறகு வேடத்தை களைக்காமல் அன்னை இல்லம் நோக்கி காரில் செல்கிறார்🌹 கார் போக்ரோட்டில் நுழைக்கிறது சிவாஜிகணேசன் டிரைவரிடம்(சிவா)வீடு வரை ஹாரன் அடிக்காமல் போய் உள்ளே செல்லாமல் வெளியே காரை நிறுத்து என்று சொல்கிறார் டிரைவர் அவ்வாறே செய்கிறார்🌹எஜமானின் கார் வருவதை கண்டு அன்னை இல்ல காவலாளி கேட்டை திறக்கிறார் காரில் இருந்து சிவாஜிகணேசன் கீழே இறங்கி வாயில் விரலை வைத்து உஷ் என்று காவலாளிக்கு சைகை செய்துவிட்டு ஒரு முதியவர் போல் உள்ளே நடந்து சென்றார் வாசலை அடைந்ததும் குரலை மாற்றி🌹அம்மா தாயே என்று குரல் கொடுக்கிறார்🌹குரலை கேட்டு வருகிறார் ராஜாமணி அம்மையார் அம்மாவை கண்டதும் தாயே நான் ஒரு சிவபக்தன் கைலாய மலை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன் ஒருவாய் சோறு கிடைக்குமா என்று கேட்டார்🌹பக்தி பரவசத்தில் வந்திருப்பது தன் மகன் என்று அறியாமல் மரியாதையுடன் அழைத்து சென்று உணவு பரிமாறி வணங்குகிறார்🌹சாமியார் சாப்பிடுவதை பார்த்து நம்ம கணேசன் சாப்பிடுவதை போல இருக்கிறதே என்று கூர்ந்து கவனிக்கிறார் ராஜாமணி அம்மையார்🌹எத்தனையோ முகபாவங்களை காட்டுபவர் தன் தாய் முக மாறுதலை கண்டு சத்தம் போட்டு சிரிக்கிறார் அந்த சிரிப்பு சத்தம் கேட்டு சாப்பிடுவது தன் மகன் கணேசன் என்று உணர்ந்து பிரமிக்கிறார் ராஜாமணி அம்மையார்🌹தன் நடிப்பு திறமையலும் பொருத்தமான வேடத்தினாலும் பெற்ற தாயின் கண்களையே ஏமாற்றிவர் சிவாஜி கணேசன்.... <a href="https://tamilpoonga.com/view-article/1ah5wim">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/4mpznnquv3uhm45e7wfc273hwdcg8uqg.jpg" />]]></description><pubDate>Thu, 03 Sep 2026 10:01:55 GMT</pubDate></item><item><title><![CDATA[ஓவர் ஆக்டிங்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/yv1ijq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/yv1ijq]]></guid><description><![CDATA[<p>🌹ஓவர் ஆக்டிங் என கிண்டலடித்த சோ!.. ரூமுக்கு கூட்டிச்சென்று சிவாஜி என்ன செய்தார் தெரியுமா?..🌹சிவாஜி கணேசன் மிகையாக நடிக்கிறார் அதாவது ஓவர் ஆக்டிங் செய்கிறார் என்கிற குற்றச்சாட்டு அவர் மீது பலரும் வைப்பதுண்டு. அவருடன் நடித்த சில நடிகர்களும் அதை கூறியதுண்டு. ஆனால், சிவாஜி தன்னை மாற்றிக்கொள்ளவே இல்லை. ஒருமுறை நடிகர் சோ ராமசாமியுடன் ஒரு படத்தில் சிவாஜி நடித்துக்கொண்டிருந்தார். ஒரு காட்சியில் சிவாஜி நடிப்பை பார்த்து படப்பிடிப்பு தளத்தில் இருந்த பலரும் கைதட்டி பாராட்டியுள்ளனர்.,🌹ஆனால், சோ மட்டும் அமைதியாக இருந்தாராம். அதை பார்த்துவிட்ட சிவாஜி சோ-வை அங்கிருந்த ஒரு அறைக்க அழைத்து சென்று பேசினாராம்.‘🌹நான் அடித்த அந்த காட்சி உனக்கு பிடிக்க வில்லை.இல்லையா?’ என சிவாஜி கேட்க ‘ஆமாம் சார். ஓவர் ஆக்டிங் போல இருந்தது’ என்றாராம் சோ. அதற்கு சிவாஜி ‘வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையிடம் நான் பேசுவது பிடித்திருந்ததா?’ என கேட்டாராம். அதற்கும் சோ ‘பிடித்திருந்தது. ஆனால், அதிலும் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் இருந்தது’ என சொன்னாராம்.🌹அப்போது பேசிய சிவாஜி ‘நான் சோவுக்கு பிடிப்பது போல் நடித்தால் மக்களிடம் செல்ல முடியாது. பொதுவான ரசிகருக்கு என ஒரு அளவு இருக்கிறது. அதை கொடுத்தால்தான் நான் மக்களிடம் சென்றடைய முடியும்’ எனக்கூறிவிட்டு அந்த கட்டபொம்மன் காட்சியை நான்கு விதமாக நடித்து காட்டினாராம். ஹாலிவுட் நடிகர் போல் ஒன்றையும், சோ நடித்தால் அந்த காட்சி எப்படி இருக்கும் என்பதையும் சிவாஜி நடித்துக்காட்ட பிரமித்துப்போன சோவுக்கு கண்ணில் கண்ணீரே வந்துவிட்டதாம். அதன்பின் சிவாஜியை எங்கேயும் ஓவர் ஆக்டிங் என சோ சொல்வது இல்லையாம்.... <a href="https://tamilpoonga.com/view-article/yv1ijq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/dghcvzcetb6j7fv8yey3mbntdmen5ri9.jpg" />]]></description><pubDate>Wed, 02 Sep 2026 14:05:36 GMT</pubDate></item><item><title><![CDATA[தனது வீட்டை சிவாஜிக்கு விற்ற என்.எஸ்.கிருஷ்ணன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1qqq6kv]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1qqq6kv]]></guid><description><![CDATA[<p>🌹பல வருடங்கள் நாடக அனுபத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை, அறிவுரைகளை தனது நகைச்சுவை மூலம் சொன்னவர் இவர். இவரை மக்கள் கலைவாணர் என அழைத்தனர். யார் மனதையும் நோகடிக்காமல் எல்லோரும் ரசிக்கும்படி காமெடி செய்வது இவரின் பாணி.🌹மற்றவர்களுக்கு கஷ்டம் எனில் உடனே உதவ வேண்டும் என்கிற எம்.ஜி.ஆரின் எண்ணத்திற்கு வழிகாட்டி இவர்தான். ஏனெனில், தான் சம்பாதித்த பணத்தில் பெரும் பங்கு மற்றவர்களுக்கே கொடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். சினிமாவில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தபோதே அவருக்கு எம்.ஜி.ஆரை தெரியும் என்பதால் அவர்தான் எம்.ஜி.ஆரை வழிநடத்தினார்.🌹கஷ்டம் என வருபவர்களுக்கு உதவ வேண்டும். நம்மால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்ய வேண்டும் என எம்.ஜி.ஆரிடம் சொல்லி சொல்லி அவரை வளர்த்தவர்தான் என்.எஸ்.கிருஷ்ணன். எனவேதான், அவர்மீது மிகுந்த அன்பும் மரியாதையையும் எப்போதும் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார்.🌹நிறைய தானங்கள் செய்ததாலும், ஒரு கொலை வழக்கில் சிக்கி சிறை சென்றதாலும் சினிமாவில் நடிப்பதை நிறுத்தியதாலும் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு கடன் சுமை ஏற்பட்டது. ஒருசமயம், சென்னை ராயப்பேட்டை சண்முகமுதலி தெருவில் இருந்த தனது வீட்டை விற்பது என என்.எஸ்.கிருஷ்ணன் முடிவெடுத்தார்.🌹இந்த வீட்டை சிவாஜியிடம் விற்பதாக முடிவு செய்யப்பட்டு வாயளவில் ஒரு தொகையும் பேசப்பட்டது. பணம் இன்னும் கைமாறவில்லை. பத்திரமும் பதியப்படவில்லை. அப்போது மார்வாடி ஒருவர் சிவாஜி பேசிய தொகையை விட அதிகவிலைக்கு அந்த வீட்டை வாங்கிக்கொள்வதாக கூறியுள்ளார். கிருஷ்ணனுக்கு பணத்தேவை அதிகமாக இருந்ததால் ‘மார்வாடியிடமே வீட்டை விற்றுவிடுங்கள்’ என அவரின் நண்பர்கள் கூறியுள்ளனர்.🌹ஆனால், என்.எஸ்.கிருஷ்ணனுக்கு அதில் விருப்பமில்லை. ‘நான் பல வருடங்களாக வசிக்கும் வீடு இது. இந்த பக்கம் வரும்போது நாம வாழ்ந்த வீட்டை ஒரு மார்வாடிக்கு கொடுத்துட்டோமே என நினைத்தால் மனசு கஷ்டப்படும். ஆனா சிவாஜிக்கு விற்றால் ‘நம்ம வீட்டில் நம்ம தம்பி கணேசன்’ இருக்கார்னு மனசு சந்தோஷப்படும். வீட்டுகுள்ள போகவும் மனசு கூசாது’ என சொல்லி அந்த வீட்டை சிவாஜிக்கே விற்றாராம் என்.எஸ் கிருஷ்ணன் அவர்கள்.... <a href="https://tamilpoonga.com/view-article/1qqq6kv">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/x5mhbnrcutvhd3rbjttdskgqrvsvcxsn.jpg" />]]></description><pubDate>Tue, 01 Sep 2026 16:39:44 GMT</pubDate></item><item><title><![CDATA[தேவரின் வள்ளல் குணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ajnr1d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ajnr1d]]></guid><description><![CDATA[<p>தேவர் கோயம்புத்தூரில் இருந்த காலத்தில் கடையில் இரண்டு இட்லிகள் வாங்கினால், பத்துமுறை சாம்பார் வாங்குவார். அவரிடம் இட்லி வாங்க அதற்கு மேல் பணம் இல்லாததால், சாம்பாரைக் குடித்தே வயிற்றை நிரப்புவார். தேவரே இதுக்குமேல சாம்பார் ஊத்த முடியாது... நிறுத்திக்கோரும் என ஓட்டல்காரர்கள் சொல்லியதெல்லாம்கூட நடந்திருக்கிறது. அப்படி ஒருநாள் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்த தேவர் கழுத்தில், வேட்டியைப் போட்டு ஒருவர் இழுத்துவிடுகிறார். தேவர் அவரிடம் வாங்கிய 10 ரூபாய் கடனை இன்னும் திரும்பிக்கொடுக்காததால், அவர் வேட்டியை கழுத்தில் போட்டார். கழுத்தில் வேட்டி போடுவதை அசிங்கமான செயலாக நினைப்பார்கள். அந்த இடத்தில் ஜனமெல்லாம் கூடிவிட்டது. இரண்டு நாட்களில் திருப்பிக்கொடுத்துவிடுவதாக தேவர் சொன்னதும் கழுத்தில் போட்ட வேட்டியை அவர் எடுத்தார்வாக்கு கொடுத்தபடி இரண்டு நாட்களில் பணம் கொடுக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்த தேவர், கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு மருதமலைக்குக் கிளம்பினார். ‘ஒருத்தன் சாம்பார் ஊத்தமாட்டேங்கிறான்; இன்னொருத்தன் கழுத்தில் வேட்டியைப் போடுகிறான். உன்னையே நம்பியிருக்க எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை தேவையாடா... நீயெல்லாம் கடவுளாடா’ என முரட்டுத்தனமாக வேட்டியைக் கட்டிக்கொண்டு முருகன் சிலையை உடைக்க மருதமலை படிக்கட்டில் ஏறுகிறார். அந்தக் காலத்தில் மருதமலை மிகவும் சிறிய கோவிலாகத்தான் இருந்தது. கெட்டக் கெட்ட வார்த்தைகளில் திட்டிக்கொண்டே படியேறுகையில், சிகரெட் பிடித்துவிட்டு யாரோ தூக்கி எறிந்த ஒரு சிகரெட் பெட்டி ஓர் ஓரத்தில் கிடக்கிறது. அதில் ஏதோ இருப்பதுபோல தெரிந்ததும், தேவர் கையில் எடுத்துப் பார்க்கிறார். அதில் பத்து ரூபாய் நோட்டு இருந்துள்ளது. அந்தப் பத்து ரூபாய் கிடைத்ததும் கோவிலிலேயே தேவர் கதறி அழுதிருக்கிறார். அதன் பிறகு, கோயம்புத்தூர் திரும்பிவந்து அந்தக் கடனை தேவர் அடைத்தார்.சினிமாவில் நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து பின்னாட்களில் பெரிய கோடீஸ்வரனாகிவிட்டார். தேவருக்கு சர்க்கரை வியாதி வந்தவுடன் உணவுப் பழக்கத்தில் கண்டிப்போடு இருக்கும்படி டாக்டர்கள் தேவரை அறிவுறுத்தினர். இதையும், 'சாப்பிடணும்னு நினைக்கையில் கையில் பணம் கொடுக்கல... பணம் கொடுத்திருக்கையில் சாப்பிடவிட மாட்டேங்கிற' என முருகனிடம் கோபத்தோடு முறையிடுவார். தினமும் இதுபோல பூஜையை முடித்துவிட்டு, அதன்பின்னரே காலை உணவு சாப்பிடு... <a href="https://tamilpoonga.com/view-article/ajnr1d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/a8efdebtnwsmy7uky6z6mtt6fkebkrzr.jpg" />]]></description><pubDate>Tue, 01 Sep 2026 16:32:14 GMT</pubDate></item><item><title><![CDATA[3 படம், ஒரே கேரக்டர்; காமெடியில் அசத்திய ரேவதி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1nobcaw]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1nobcaw]]></guid><description><![CDATA[<p>பிரபு, பிரபுதேவா, ஜோதிகா மூவருக்கு போட்டியே இவர் தான்முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை சித்திக் லால் இயக்கியிருந்தனர். மலையாளத்தில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.நடிகை ரேவதி 90 களில் மிகவும் பிரபலமானவர். அவரது படத்திற்கு இன்னும் ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், மலையாளம், தெலுங்குத் திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் முன்னணி நடிகையாக வலம் வருவதுடன், இந்தி மற்றும் ஆங்கிலப் படங்களையும் இயக்கியுள்ளார்.1983 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கிய 'மண்வாசனை' திரைப்படத்தின் மூலம் ரேவதி தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே பெரும் வெற்றியைக் கண்ட அவர், தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து 'மௌன ராகம்', 'புன்னகை மன்னன்', 'வைதேகி காத்திருந்தாள்', 'கிழக்கு வாசல்', 'தேவர் மகன்', 'அஞ்சலி', 'மகளிர் மட்டும்' போன்ற பல வெற்றிப் படங்களில் நடித்து தனது முத்திரையைப் பதித்தார். ரேவதி தனது நடிப்பு மற்றும் இயக்கத்திற்காக பல விருதுகளைப் பெற்றுள்ளார்.நடிப்பு மட்டும் இல்லாமல் இயக்கம், டப்பிங் என பன்முக திறமையுடன் வலம் வரும் நடிரக ராதிகா, ஒரே கேரக்டரில் 3 படத்தில் நடித்துள்ளார். இதில் இரு படங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் 1989-ம் ஆண்டு வெளியான படம் ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங். அப்போதைய மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிப்பில் வெளியான இந்த படத்தை சித்திக் லால் இயக்கியிருந்தனர். மலையாளத்தில் பெரிய வெற்றியை பெற்ற இந்த படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டது.பிரபு, ரேவதி, வி.கே.ராமசாமி ஆகியோர் நடிப்பில் வெளியான இந்த படத்தை மலையாளத்தில் ஒரிஜினல் படத்தை தயாரித்த ஃபாசில் இயக்கியிருந்தார். அரங்கேற்ற வேளை என்ற பெயரில் வெளியான இந்த படத்தில், நண்பரிடம் வாங்கிய கடனை அடைக்க வெளியூருக்கு வரும் பிரபு, வி.ஜே.ராமசாமியின் நாடக சபாவில் இணைந்து அந்த வீட்டில் தங்குகிறார். அதே வீட்டில் வசிக்கும் ஏமாற்றும் பெண்ணான ரேவதிக்கும் பிரபுவுக்கும் எப்போதும் மோதலாகவே இருக்கும். இவர்களுக்கு இடையில் வி.கே.ராமசாமி மாட்டிக்கொண்டு படாதபாடுபடுவார்.அதே சமயம் இவர்கள் மூவருக்கும் இருக்கும் பணத்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஒரு போன் கால் வருகிறது. அதை வைத்து, இவர்கள் தங்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொண்டார... <a href="https://tamilpoonga.com/view-article/1nobcaw">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/unrmpp9bdqzfultcdxp8efayrvtgjyhq.jpg" />]]></description><pubDate>Fri, 28 Aug 2026 17:02:13 GMT</pubDate></item><item><title><![CDATA[ராஜ்கிரணின் பேட்டி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/7qohjy]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/7qohjy]]></guid><description><![CDATA[<p>ஆடையைப் பார்க்காதே ...மனசைப் பாரு!இது ஜெயிக்கும் - - -ராஜ்கிரண்!‘’ பாரதிராஜா சார் என் மேலே அளவு கடந்த பிரியம் வைச்சிருக்கிறதுக்குக் காரணம், என்னோட இயல்பான தன்மை.16 வயதினிலே- படம் தயாரிப்பில் இருக்கும்போது கிட்டத்தட்ட முடியற சூழ்நிலை.இன்னும் உச்சக்கட்டம் மட்டும் தான் படம் பிடிக்க வேண்டியது பாக்கி.மத்ததை எல்லாம் முடிச்சாச்சி. வியாபாரம் ஆகலை.வந்து பார்த்த விநியோகஸ்தர்கள் எல்லாம் வாங்கலை.அப்ப..அந்தச் சூழலில் தான் நான் போய்க் கதை கேட்கிறேன்.எனக்குக் கதை பிடிச்சது.புடிச்ச உடனே வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு,என்.எஸ்.சி. பகுதி. அப்ப அது தான் பெரிசு.அதோட விநியோக உரிமையை வாங்கினேன்.கதை கேட்டு முடிஞ்சவுடனே பேசி முடிவு பண்ணுனதுனாலே பாரதிராஜாவாலே அதை நம்ப முடியலை.ஏன்னா.. அதுக்கு முந்திப் பலருக்கும் கதை சொல்லப்பட்டு அதைக் கேட்டுட்டு ‘’ அய்ய.. இது ஓடாதுய்யா.. என்னய்யா.. கமலஹாசன் ஒரு விளையாட்டுப் பையன் மாதிரி நடிச்சிக்கிட்டிருந்தவரு. அவரைப் போயி இப்படி வெத்திலை,பாக்கு போட வைச்சு, முடிய அசிங்கப்படுத்திக் கேவலப்படுத்தியிருக்கேய்யா.. என்னத்த ஓடும்?’’ –இப்படின்னு சொன்னாங்களாம்.நான் போய்க் கதையைக் கேட்டு முடிச்சிட்டு பிரமாதமா இருந்துச்சின்னு கை கொடுத்து வியாபாரம் பேசலாம்னதும் அவருக்கு ஆச்சர்யம் தாள முடியலை.என்னைக் கேட்டாரு.‘’ என்ன காதர்.. நெசமாத் தான் சொல்றீங்களா?நெசமாத் தான் படம் பிடிச்சிருக்கா?நெசமாத் தான் வாங்குகிறீங்களா? எனக்கு ஒண்ணுமே புரியல. அப்படின்னாரு..நான் சொன்னேன்.‘’படத்தில் ஒரு அடிப்படையான கருத்தைச் சொல்லியிருக்கீங்க.. ஆளைப் பார்க்காதே..ஆடையைப் பார்க்காதே. மனசைப் பாரு.. இது கிராமத்திலயிருந்து பட்டணம் வரைக்கும் எல்லோருக்கும் தேவையான கருத்து.இது எல்லா ஜனங்களோட மனசுக்கும் தெரிஞ்ச விஷயம். அதனாலே இந்தக் கருத்து ஜெயிக்கும். எனக்கு நம்பிக்கை இருக்கு. அதனால நான் வாங்கிறேன்னேன்.கட்டிப்பிடிச்சிக்கிட்டாரு.ஆக – அன்னைக்கு ஆரம்பிச்சது என்னோட பழக்கம்.பாரதிராஜா மாதிரி இன்னைக்கி நகரத்திலே இருக்கி 90 % பேர் கிராமத்திலே இருந்து வந்தவங்க தான். அவங்களாலே பட்டணத்துக்காக வாழ்க்கை முறைகளை மாத்திக்க முடியாது.கிராமத்தானாகவே வாழ்ந்துக்கிட்டிருக்கோம் எல்லோரும்.அதனால இது இயல்பா அமையுற விஷயம்!’’-ராஜ்கிரணின் பேட்டியின் ஒரு பகுதி.... <a href="https://tamilpoonga.com/view-article/7qohjy">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/4rddexxn9r5pqfgpjztg3au5curpgdnm.jpg" />]]></description><pubDate>Fri, 28 Aug 2026 16:53:57 GMT</pubDate></item><item><title><![CDATA[போட்டோஷூட்டில் கலக்கி வரும் ரம்யா பாண்டியன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/65xz9m]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/65xz9m]]></guid><description><![CDATA[<p>ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள இந்த சமீபத்திய புகைப்படங்களில், ரம்யா பாண்டியன் கிளாசிக் மாடர்ன் கெட்டப்பில் அட்டகாசமான போஸ்களை கொடுத்துள்ளார். ஃபேன்சி டிசைனர் பேக்ரவுண்டில், ஸ்லீவ்லெஸ் வைட் டாப்ஸ் மற்றும் கருப்பு உடையில் அவர் கொடுத்திருக்கும் கில்லர் லுக் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. மொட்டை மாடி சேலை லுக்காக இருந்தாலும் சரி, இந்த மாதிரி மார்டன் லுக்காக இருந்தாலும் சரி... ரம்யா பாண்டியன் எப்போதும் கெத்துதான் என நெட்டிசன்கள் கமெண்ட் பாக்ஸில் லைக்ஸ்களையும் ஹார்ட்டின்களையும் குவித்து வருகின்றனர்.தமிழ் சினிமாவில் டம்மி டப்பாசு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ரம்யா பாண்டியன், அதனைத் தொடர்ந்து தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் சமுத்திரகனியுடன் ஆண் தேவதை போன்ற திரைப்படங்களில் தனது இயல்பான மற்றும் நேர்த்தியான நடிப்பால் ரசிகர்களின் பாராட்டை பெற்றார். இருப்பினும், அவரது சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையையும் அடையாளத்தையும் ஏற்படுத்திக் கொடுத்தது அந்த புகழ்பெற்ற மொட்டை மாடி ஃபோட்டோ ஷூட் தான். அதன் பிறகு டிவியில் குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற பல ஹிட் நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேலும் பிரபலமானார். சினிமா, சின்னத்திரை, போட்டோஷூட் என பல களங்களில் தொடர்ந்து கலக்கி வரும் ரம்யா பாண்டியனின் இந்த புதிய மார்டன் லுக் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் செம்ம ட்ரெண்டிங்கில் உள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-article/65xz9m">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/5z3wpdankzicfrsxwttzexazaypr4sc2.jpg" />]]></description><pubDate>Tue, 25 Aug 2026 14:16:01 GMT</pubDate></item><item><title><![CDATA[கனகாவுக்கு நீதிமன்றத்தில் அதிர்ச்சி கொடுத்த அப்பா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/11b9szm]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/11b9szm]]></guid><description><![CDATA[<p>கரகாட்டக்காரன் திரைப்படத்தில் நடித்து புகழடைந்த கனகா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். அவரது தாய் தேவிகாவின் மரணம் அவரை நிலைகுலைய செய்ய சினிமாவிலிருந்து ஒட்டுமொத்தமாக ஒதுங்கினார். பல வருடங்கள் தனிமையிலேயே இருந்துவருகிறார். இந்நிலையில் அவர் குறித்து தயாரிப்பாளர் பாலாஜி பிரபு ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது.தமிழ் சினிமாவின் மூத்த நடிகையான தேவிகாவின் மகள் கனகா. அவரை கங்கை அமரன் தனது கரகாட்டக்காரன் திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகம் செய்தார். ராமராஜன் ஹீரோவாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. கனகாவின் நடிப்பு முதல் படம் போன்றே இல்லை. முதல் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அதனை பயன்படுத்தி தனக்கென தனி மார்க்கெட்டை பிடித்துக்கொண்டார் அவர்.குட்டி பத்மினிக்கு பிறகு பலர் கனகாவை சந்திக்க முயன்றாலும் அவர்களால் பார்க்க முடியவில்லை. மேலும் கனகாவை பேட்டி எடுப்பதாகவும்; விரைவில் அது தனது யூடியூப் சேனலில் வரும் என்றும் பத்மினி கூறியிருந்தார். ஆனால் அவரோ பேட்டி கொடுப்பதில்லை என்பதில் உறுதியாக நின்றுவிட்டார். இந்நிலையில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்திய பேட்டியில் கனகா குறித்து பேசியது கவனத்தை ஈர்த்திருக்கிறது.பாலாஜி பிரபு அளித்த அந்தப் பேட்டியில், "கனகாவை பொறுத்தவரை அவரது அம்மா அருகே இல்லையென்றால் பேசுவதற்குகூட பயப்படுவார். அவரது அம்மா இறந்த பிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை. ஒரு ஆள் சப்போர்ட்டில் வாழ்ந்தாலே இந்தப் பிரச்னை வரத்தான் செய்யும். பலருடன் பழக வேண்டும். நிறைய நண்பர்களை அருகே வைத்துக்கொள்ள வேண்டும். அவர்கள் எல்லாம் இருந்தால் கஷ்டம் கொஞ்சம் குறையும். யாருமே அருகே இல்லாததால் இடிந்து போய்விட்டார். கனகாவின் தாயும், தந்தையும் பேசிக்கொள்வதில்லை.இருப்பினும் சொத்தில் தனக்கு பங்கு வேண்டுமென்று கனகாவின் தந்தை வழக்கு தொடுத்திருந்தார். தேவிகா இருக்கும்வரை அந்த வழக்கை நடத்திக்கொண்டிருந்தார். பிறகு கனகா சென்றுகொண்டிருந்தார். ஒருநாள் அவர் கோர்ட்டில் அமர்ந்திருக்கும்போது அவர் அருகே ஒரு பெரியவர் அமர்ந்து எப்படி ம்மா இருக்க என்று கேட்டார். இவர் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு நன்றாக இருக்கிறேன் என சொன்னார். அந்த நபர்தான் அவரது அப்பா. அப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் இரண்டு பேரும்" என்றார்.... <a href="https://tamilpoonga.com/view-article/11b9szm">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/3rqjequex4y7ecpuynaxw4fbeprep3gj.jpg" />]]></description><pubDate>Tue, 25 Aug 2026 13:58:10 GMT</pubDate></item></channel></rss>