<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Articles of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/author/58]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/author/58" rel="self" type="application/rss+xml" /><description>Articles of sivam RSS</description><lastBuildDate>Mon, 29 Jun 2026 15:07:17 GMT</lastBuildDate><item><title><![CDATA[நேகா மாலிக்கின் உச்சகட்ட கவர்ச்சி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1vx6lj9]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1vx6lj9]]></guid><description><![CDATA[<p>பாலிவுட் நடிகையும் மாடலுமான நேகா மாலிக், சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களால் தொடர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தனது ஃபேஷன் சென்ஸ் மற்றும் ஸ்டைலிஷ் தோற்றத்திற்காக அறியப்படும் அவர், தற்போது வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.இந்த புகைப்படங்களில் நேகா மாலிக் வெள்ளை நிற சட்டை மற்றும் அரை டவுசர் அணிந்து, படு போல்டான தோற்றத்தில் பல்வேறு போஸ்களை வழங்கியுள்ளார். இயற்கையான மேக்கப், திறந்த தலைமுடி மற்றும் தன்னம்பிக்கையை வெளிப்படுத்தும் புன்னகை ஆகியவை அவரது தோற்றத்திற்கு மேலும் அழகு சேர்த்துள்ளன.புகைப்படங்கள் வெளியாகிய சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கான லைக்குகளையும், ஏராளமான கருத்துகளையும் பெற்றுள்ளன. "ஸ்டன்னிங்", "கார்ஜியஸ்", "சூப்பர் லுக்" போன்ற கருத்துகளை ரசிகர்கள் பதிவிட்டு அவரது புதிய லுக்கை பாராட்டி வருகின்றனர்.சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நேகா மாலிக், அவ்வப்போது புதிய ஃபோட்டோஷூட்கள் மற்றும் ஃபேஷன் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்த புதிய போட்டோஷூட்டும் அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று, இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாக்களிலும் கலக்கிய நேகா மாலிக்கை இன்ஸ்டாகிராமில் சுமார் 3 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். வெள்ளை சட்டையை பட்டனை கொஞ்சம் கழட்டிவிட்டு கன்னா பின்னாவென கவர்ச்சியில் நேகா மாலிக் போஸ் கொடுத்து இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.... <a href="https://tamilpoonga.com/view-article/1vx6lj9">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/kgjpu3nzi7rctszhnkxmbbpgxi65jwzu.jpg" />]]></description><pubDate>Mon, 29 Jun 2026 15:07:17 GMT</pubDate></item><item><title><![CDATA[பாக்யராஜ் துக்க வீடு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது - ராதிகா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/x0kbf3]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/x0kbf3]]></guid><description><![CDATA[<p>திரைக்கதை மன்னன் என்று கொண்டாடப்பட்ட பாக்யராஜ் நேற்று முன்தினம் திடீரென உயிரிழந்துவிட்டார். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டிருந்தபோது பல யூடியூப் சேனல்கள் எல்லாம் அங்கே மொய்த்துவிட்டன. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ராதிகாதான் அங்கே அநாகரீகமாக கூடியிருந்தவர்களை நோக்கி, இப்படி செய்யாதீர்கள் என கோரிக்கை வைத்தார்.இதற்கிடையே பிரபலங்கள் மறைந்த வீட்டில் கேமராக்களை தூக்கிக்கொண்டு படையெடுப்பவர்களின் எண்ணிக்கை வர வர அதிகரித்திருக்கிறது. சோகத்துடன் வருபவர்களிடம் சென்று மைக்கை நீட்டுவது, யாரையும் உள்ளே செல்ல விடாமல் வழியை மறித்துக்கொண்டு நிற்பது என இஷ்டத்துக்கு செய்தார்கள்.நடிகை ராதிகா இதையெல்லாம் பார்த்து டென்ஷன் ஆகி, 'உங்களுக்கு டிஆர்பி வேண்டுமென்றால் தனியாக நடித்து தருகிறோம். இந்த இடத்தை சர்க்கஸ் ஆக்காதீர்கள்' என கூறினார். பிறகு அவரே கூட்ட நெரிசலிலும் சிக்கினார். இந்நிலையில் பாக்யராஜ் குறித்தும், நடந்த சம்பவங்கள் குறித்தும் அவர் இப்போது பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், "50 ஆண்டுகளாக சிறப்பான நட்புக்கு என் இறுதி வழியனுப்புதல். சிறந்த படைப்பாளி, எழுத்தாளர். சினிமாவில் பல எல்லைகளை கடந்தவர்.நான் பல சிரிப்புகளையும், மறக்க முடியாத அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட மனிதர். என் குடும்பத்துக்கு எப்போதும் துணையாக நின்றவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் இது அதிர்ச்சியான பிரிவு. அமைதியாக துக்கம் அனுசரிக்க வேண்டிய இடம் ஒரு சர்க்கஸ் போல் ஆகிவிட்டது. நாம் எப்போது இவ்வளவு இரக்கமற்றவர்களாக மாறினோம். இனி இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாத வகையில் அரசும், திரையுலகமும் சேர்ந்து உரிய நடைமுறைகளை வகுக்க வேண்டும். மறைந்தவருக்கு மரியாதையும், கண்ணியமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்" என குறிப்பிட்டிருக்கிறார்.... <a href="https://tamilpoonga.com/view-article/x0kbf3">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/45dc6eihvenkdf7nlabcshyjsfbfbyjf.jpg" />]]></description><pubDate>Mon, 29 Jun 2026 15:03:45 GMT</pubDate></item><item><title><![CDATA[நடிகரும், இயக்குநருமான கே.பாக்கியராஜ் காலமானார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1ffg8f3]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1ffg8f3]]></guid><description><![CDATA[<p>பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், கதாசிரியராகவும் இருந்து, அவராலேயே நடிகனாக அறிமுகப்படுத்தப்பட்டு, இயக்குநரானவர் கே.பாக்யராஜ். திரைக்கதை மன்னன் என்று அழைக்கப்படுகிறவர். இதற்கு காரணம், அவரது தனித்துவமான கதை சொல்லும் முறையும், சாதாரண விஷயத்தையும் சுவாரஸ்யமாக மாற்றும் திறமையும்தான். அவரது கதைகள் பெரும்பாலும் ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையைச் சுற்றியே இருக்கும்.மிகைப்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளோ, பிரம்மாண்டமோ இல்லாமல், பக்கத்து வீட்டுக்காரர் ஒருவருக்கு நடக்கும் கதையைப் பார்ப்பது போன்ற உணர்வை அவர் தருவார். ஒரு கதையை எப்படி ஆரம்பித்து, எங்கே ட்விஸ்ட் வைக்க வேண்டும் அதை எப்படிச் சாமர்த்தியமாக அவிழ்க்க வேண்டும் என்பதில் அவர் கில்லாடி. இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்கு திரைக்கதை எழுதுவது எப்படி என்பதற்கு பாக்யராஜின் படங்களே பாடப்புத்தகமாக விளங்குகின்றன.தீவிர சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்தது கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தான் தற்போது கே.பாக்கியராஜ் உடல்நிலை கவலைக்கிடம் என இன்று காலை தகவல் வெளிவந்துள்ளது. சுயநினைவை இழந்த நிலையில் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. வீட்டில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையிலேயே அவர் உயிர் பிரிந்தது.... <a href="https://tamilpoonga.com/view-article/1ffg8f3">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/fpf6zrh8dnry9gzargtgxfphxbidydlq.jpg" />]]></description><pubDate>Sat, 27 Jun 2026 04:59:02 GMT</pubDate></item><item><title><![CDATA[என்றும் மறக்க முடியாத நடிகை சௌந்தர்யா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/16e1ij2]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/16e1ij2]]></guid><description><![CDATA[<p>தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிப் படங்களில் பிரகாசித்த ஒரு திறமையான நடிகை. 1990களில் தென்னந்தியத் திரையுலகில் தனது நடிப்புத் திறமையாலும், நடனத திறமையாலும் பெரும் வரவேற்பைப் பெற்றார்.சிறு வயதலேயே நடனக் கலையில் ஆர்வம் கொண்டிருந்த நடிகை பரத நாட்டியத்தில் சிறந்த பயிற்சி பெற்றவர். இதன் தாக்கம் அவரது திரைப்பட நடிப்பிலும் நடனக் காட்சிகளிலும் தெளிவாகத் தெரிந்தது. “ஆபத்து”, “லைலா”, போன்ற பல படங்களில் நடித்து தனக்கென ஒரு தனிததுவமான இடத்தைப் பெற்றர்.பொன்னுமணி, அருணாச்சலம், படையப்பா, காதலா காதலா, தவசி, சொக்கத்தங்கம் போன்ற பல திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புத் திறமையை நிரூபித்தார். காதல், சண்டை, குடும்பக் கதைகள் என பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தன்னை வளர்த்துக் கொண்டாவர்நடிப்பு மட்டுமல்லாமல் ஒரு திறமையான இயக்குனராகவும் மாறினார். “ஸ்திரீ” எனும் கன்னடப் படத்தை இயக்கி, பெண் இயக்குனர் என்ற முறையில் கவனத்தைப் பெற்றார். இது அவரது படைப்பாற்றலையும், திரையுலகின் பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிலைநிறுத்தும் ஆற்றலையும் வெளிப்படுத்தியது.அவரது மறைவு தென்னிந்தியத் திரையுலகிற்கு பேரிழப்பாக இருந்தது. இன்றும் அவரது நடிப்புத் திறமையும், நடனக் கலையும் பல திரைப்பட ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கின்றன.ஒரு குறுகிய காலத்தில் வாழ்ந்தாலும், தனது நடிப்பாற்றலாலும் பன்முக ஆளுமையாலும் தமிழ் சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பெற்றுள்ளார் சௌந்தர்யா.... <a href="https://tamilpoonga.com/view-article/16e1ij2">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/6b9eyrwhngadh5fwam2af4vta37vesg4.jpg" />]]></description><pubDate>Fri, 26 Jun 2026 13:50:44 GMT</pubDate></item><item><title><![CDATA[குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு போட்டி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/cnj9e4]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/cnj9e4]]></guid><description><![CDATA[<p>மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது. இதை குன்னக்குடியே பல இடங்களில் சொல்லியுள்ளார்.அதாவது, தனது வயலினில் ஒரு மெட்டை குன்னக்குடி வாசிப்பார். சிறிதும் யோசிக்காமல் கண்ணதாசன் அதற்கு பாட்டு எழுத வேண்டும்.இது தான் போட்டி. குன்னக்குடி கடினமான மெட்டுக்கள் வரும்படி வாசித்தாராம். ஆனால் ஒவ்வொரு முறையும் கண்ணதாசன் அதற்கான வார்த்தைகளை உடனுக்குடன் கூறிவிடுவாராம்.அந்த பாடல்களில் ஒன்று தான் மேலே சொன்ன 'மருதமலை மாமணியே' பாடல்.ஒரு கட்டத்தில் சற்றே கடினமான மெட்டை வயலனில் வாசித்து 'இதற்கான வார்த்தைகளை கூறுங்கள்' என்றாராம் குன்னக்குடி. உடனடியாக வந்து விழுந்த வார்த்தைகள் "சக்திச்சரவண முத்துக்குமரனை மறவேன்"....குன்னக்குடி வைத்தியநாதன் இதே பாடலில்.......முடிவில் வேண்டுமென்றே வயலினில் சம்பந்தம் இல்லாமல் நிச நிச நிச நிச என்று வேகமாக வாசித்துவிட்டாராம்..கவிஞர் உடனே இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மலையடி, நதியடி, கடலடி சகலமும் உனதடி என்ற வார்த்தையை எழுதியவுடன் வயலீனை நான் சிறிது நேரம் கீழே வைத்து "ஐயா ,என்னை விட்டுடுங்க"ன்னு கும்பிட்டேன் என்றார்...கவிஞரே உங்கள் பாதம் பணிகிறோம்.... <a href="https://tamilpoonga.com/view-article/cnj9e4">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/8hpzcseraadcdrye8szsk2lp8kjlyp67.jpg" />]]></description><pubDate>Wed, 24 Jun 2026 13:25:49 GMT</pubDate></item><item><title><![CDATA[இவர் யார் என்று தெரிகிறதா?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/3kvh0v]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/3kvh0v]]></guid><description><![CDATA[<p>குரல் அழகின் சுரப்பொருள் தமிழ் சினிமா இசை வரலாற்றில் தனிச்சிறப்புடன் ஒலிக்கும் குரல்களில் குரலும் ஒன்று. கம்பீரமும் இனிமையும் ஒருங்கே கலந்த அவரது பாடல் நடை, அவரை மற்ற பின்னணிப் பாடகிகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.குரலில் ஒரு தனித்த கூர்மையும் வீரியமும் இருந்தது. சோகப் பாடல்களில் கண்ணீர் சொட்டும் உணர்வை வெளிப்படுத்தும் அதே குரல், அதிரடியான “கபாரே” பாடல்களிலும், நாட்டுப்புற பாடல்களிலும் வேறு பரிமாணம் கொண்டு ஒலித்தது. இந்த பல்துறை வல்லமையே அவரை இயக்குநர்களும் இசையமைப்பாளர்களும் விரும்பும் பாடகியாக ஆக்கியது.வெறும் ஒரு பாடகி அல்ல தமிழ் சினிமா இசையின் ஒரு கால கட்டத்தின் குரலாக அவர் வடிவம் பெற்றார். பாடல்கள் இன்றும் “பழைய தமிழ் திரை இசை” ரசிகர்களின் இதயங்களில் வாழும் அழியாத சொத்தாக நிலைத்திருக்கின்றஎல். ஆர். ஈஸ்வரி அம்மாவின் தற்போதைய புகைப்படம்... <a href="https://tamilpoonga.com/view-article/3kvh0v">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/lpkn9sr6t6nsdupdwbfu2lmryhffyv9n.jpg" />]]></description><pubDate>Mon, 22 Jun 2026 13:39:47 GMT</pubDate></item><item><title><![CDATA[நெகிழ வைக்கும் ஜாக்கி சான்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/18jysbb]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/18jysbb]]></guid><description><![CDATA[<p>"மக்களால் எப்படி நினைவு கூறப்படுகிறோம் என்பதே முக்கியம்!" தனது 35,000 கோடி சொத்துக்களை ஏழைகளுக்கு வழங்க அதிரடி முடிவு!திரைப்படங்களில் ஸ்டண்டுகளால் நம்மை வியக்க வைத்த உலகப் புகழ்பெற்ற அதிரடி நாயகன் ஜாக்கி சான், நிஜ வாழ்க்கையிலும் ஒரு மாபெரும் ரியல் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். தனது ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகளின் நலனுக்காகத் தானம் செய்யப்போவதாக அவர் எடுத்துள்ள முடிவு ஒட்டுமொத்த உலகையும் நெகிழ வைத்துள்ளது!தந்தையின் போதனையும்.. மகனின் அர்ப்பணிப்பும்:நல்ல மனம் படைத்த தந்தை: "என் தந்தை ஒரு அழகான மனிதர் மட்டுமல்ல, மிக நல்ல மனம் படைத்தவர். நாம் எப்படி வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல; இறுதியில் இந்த உலக மக்கள் நம்மைக் குறித்து எப்படி நினைவு கூர்கிறார்கள் என்பதை எனக்குச் சொல்லிக்கொடுத்ததே அவர்தான்" என ஜாக்கி சான் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.35,000 கோடி ரூபாய் தானம்: தந்தையின் அந்த உன்னதமான போதனையைப் பின்பற்றி, தான் கடினமாக உழைத்துச் சம்பாதித்த சுமார் 35,000 கோடி ரூபாய் ($4.5 Billion+) மதிப்புள்ள ஒட்டுமொத்த சொத்துக்களையும் ஏழைகள் மற்றும் ஆதரவற்றோரின் நலனுக்காகக் கொடுக்க அவர் முடிவெடுத்துள்ளார்.வாரிசுக்குச் சொத்து இல்லை: "என் மகனுக்குத் திறமை இருந்தால் அவன் சொந்தமாகச் சம்பாதித்துக் கொள்வான்; திறமை இல்லையென்றால் நான் சேர்க்கும் பணத்தை அவன் வீணடித்துவிடுவான்" என்று ஏற்கனவே கூறி வாரிசு அரசியல், வாரிசு சொத்துரிமைக்கு அப்பாற்பட்டு சிந்திப்பவர் ஜாக்கி சான்!திரையுலகில் பல சாதனைகளைப் படைத்தாலும், சாகும் போது நாம் கொண்டு செல்லப்போவது எதுவுமில்லை என்ற உயரிய தத்துவத்தை உணர்ந்து, ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றத் துணியும் ஜாக்கி சான் அவர்களின் இந்த பெருந்தன்மைக்கு உலகெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன."பணம் சேர்ப்பதை விட, மனிதர்களின் இதயங்களில் அன்பைச் சேர்ப்பதே உண்மையான மனிதநேயம்!"... <a href="https://tamilpoonga.com/view-article/18jysbb">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/kvnbvsaga9iayjqqdf9jnm9xzkyhnuuj.jpg" />]]></description><pubDate>Mon, 22 Jun 2026 13:09:03 GMT</pubDate></item><item><title><![CDATA[தனுஷ் - மிருணாள் தாக்​குர் பிரிந்து விட்டார்களா?]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/52y35d]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/52y35d]]></guid><description><![CDATA[<p>இந்தி நடிகை மிருணாள் தாக்​குர், ‘சீ​தா​ராமம்’, ‘ஹாய் நானா’ ஆகிய பான் இந்​தியா படங்​களின் மூலம் தமிழிலும் அறியப்பட்டார். அவரும் நடிகர் தனுஷும் காதலித்து வரு​வ​தாகக் கடந்த சில மாதங்​களாகச் செய்​தி​கள் வெளி​யாகி வந்​தன.சில விழாக்​களில் இரு​வரும் ஒன்​றாகக் கலந்​து​ கொண்​டதை அடுத்து இச்​செய்தி வேக​மாகப் பரவியது. இரு​வரும் திரு​மணம் செய்​து​கொள்ள இருப்​ப​தாக​வும் கூறப்​பட்​டது. அதை மிருணாள் தாக்​குர் மறுத்​திருந்​தார். ‘எனக்கே தெரி​யாமல் என் திரு​மணம் பற்​றிய செய்​தி​கள் வரு​கின்​றன’ என்று கூறி​யிருந்​தார்.இந்​நிலை​யில் தற்​போது இரு​வரும் பிரிந்​து​விட்​ட​தாக புதிய தகவல் பாலிவுட்​டில் வெளி​யாகி இருக்​கிறது. எனினும், இதை யாரும் அதி​காரப்​பூர்​வ​மாக உறு​திப்​படுத்​த​வில்​லை.... <a href="https://tamilpoonga.com/view-article/52y35d">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/rqrwccsypeah95jyhdzxxbbnzehrntvf.jpg" />]]></description><pubDate>Sun, 21 Jun 2026 13:09:23 GMT</pubDate></item><item><title><![CDATA[ ‘அனந்தன் காடு’ அரசி​யல் கதையில்லை: ஆர்யா]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/waiufq]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/waiufq]]></guid><description><![CDATA[<p>ஆர்யா, இந்​திரன்​ஸ், சுனில், நிகிலா விமல், ரெஜி​னா, போஸ் வெங்கட், அஞ்​சலி நாயர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அனந்தன் காடு’.ஜியேன் கிருஷ்ணகு​மார் இயக்​கி​யுள்ள இப்​படத்​துக்கு அஜனீஸ் லோக்​நாத் இசை அமைத்​துள்​ளார். யுவா ஒளிப்​ப​திவு செய்துள்ளார். மினி ஸ்டூடியோஸ் சார்​பில் வினோத் தயாரித்துள்ள இந்த ஆக்‌ஷன் த்ரில்​லர் படம் தமிழ், மலை​யாள மொழிகளில் உருவாகியுள்​ளது. இதன் டீஸர் வரவேற்​பைப் பெற்றுள்​ளது. ஜூன் 25-ல் வெளி​யாகும் இப்​படத்​தின் செய்தியாளர்​கள் சந்​திப்பு சென்​னை​யில் நடைபெற்றது.நடிகர் ஆர்யா ​போது, “இது 2 வருட​மாக நடை​பெற்ற திரைப்படம். ‘எனிமி’ படப்​பிடிப்பு நடந்து கொண்​டிருந்​த​போது, முரளி கோபி ஒரு ஒன்​லைன் சொன்​ன​தாக தயாரிப்​பாளர் வினோத் என்​னிடம் சொன்​னார். அந்​த கதை​யில் பல அடுக்குகள் இருந்​தன. ‘லூசிபர்’ போன்ற படங்​களில் நாம் அதைப் பார்த்திருக்கிறோம்.அத்​தகைய திரைக்​கதையை திரை​யில் அதே தரத்​தில் கொண்டு வரு​வது சவாலான விஷ​யம். இயக்​குநர் ஜியேன் கிருஷ்ணகு​மார் மற்​றும் தயாரிப்​பாளர் வினோத் எந்த சமரச​மும் செய்​யாமல், அந்த திரைக்கதை​யின் ஆழத்​தை​யும் வலிமை​யை​யும் திரை​யில் கொண்டு வந்​திருக்​கிறார்கள். எனது கதா​பாத்​திரம் எமோஷனலாக​வும், வலு​வான​தாக​வும் இருந்​த​தால் ஒப்​புக் கொண்​டேன். அரசி​யல் பின்​னணி​யில் உள்ள ஆக்ஷன் கதை இது. ஆனால், அரசி​யல் கதை இல்​லை.திரு​வனந்​த​புரத்தை மைய​மாகக் கொண்​டு, கேரளா – தமிழ்​நாடு எல்லைப் பகு​தி​களில் நடை​பெறும் கதை இது. எனவே படத்​தில் தமிழ், மலை​யாள மொழிகள் இயல்​பாக இடம்​பெறும். தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞ​னாக நடித்​திருக்​கிறேன். டெக்னிக்​கலாக​வும் இந்​த படம் சிறப்​பாக உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.... <a href="https://tamilpoonga.com/view-article/waiufq">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/ybbuycnqmhmjyu7zdzv9qixrspasvmnr.jpg" />]]></description><pubDate>Sun, 21 Jun 2026 12:43:48 GMT</pubDate></item><item><title><![CDATA[நீச்சல் குளத்தில் அழகு காட்டும் அஞ்சலி சிவராமன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/c7yud8]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/c7yud8]]></guid><description><![CDATA[<p>பேட் கேர்ள் படத்தில் நடித்த அஞ்சலி சிவராமனுக்கு 31 வயது ஆகிறது. ஜூன் மாதம் பாதியை கடந்தும் சம்மர் வெயிலின் தாக்கம் இன்னமும் குறையாத நிலையில், சன் டே ஸ்பெஷலாக நீச்சல் குளத்தில் தோழியுடன் குளித்து விளையாடிய வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களை ஜில்லாக்க முயற்சித்துள்ளார்.ஏப்ரல் மாதம் சம்மர் தொடங்கியதில் இருந்தே ஏகப்பட்ட நடிகைகள் பிகினி உடைகளை வாங்கி வைத்துக் கொண்டு நீச்சல் குளங்களிலும், பீச்களிலும் சும்மா போஸ் கொடுத்து போட்டோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து கல்லா கட்ட ஆரம்பித்தனர். மேலும், சில நடிகைகள் சினிமாவில் பெரிதாக வாய்ப்புகள் இல்லாத நிலையில், சப்ஸ்கிரிப்ஷன் பக்கம் இறங்கி மாதம் லட்சக் கணக்கில் நடிக்காமலே சம்பாதிப்பது எப்படி என பாடம் நடத்தி வருகின்றனர்.பேட் கேர்ள் ஹீரோயின்: கேரளாவை சேர்ந்த அஞ்சலி சிவராமன் கடந்த 2022ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான கோபால்ட் ப்ளூ என்கிற வெப்சீரிஸில் நடித்து கவனத்தை ஈர்த்தார். அதன் பின்னர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பேட் கேர்ள் படம் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமானார். பல சர்ச்சைகளை கிளப்பிய பேட் கேர்ள் திரைப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரிதாக போகவில்லை. ஆனால், ஆம்ரி எனும் ஆங்கில படத்தில் தற்போது அஞ்சலி சிவராமன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அவரது போல்டான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.நீச்சல் குளத்தில் தோழிகளுடன்: ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஏகப்பட்ட ஜாலியான ரீல்கள் எல்லாம் இன்ஸ்டாகிராமில் வருவது வாடிக்கை. நடிகை அஞ்சலி சிவராமன் தனது தோழிகளுடன் சொகுசு ஹோட்டலில் உள்ள நீச்சல் குளத்தில் குடித்து கும்மாளம் போட்ட வீடியோவை தற்போது வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-article/c7yud8">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/huchmyuqjueuswyn2su6wfijrgeweebs.jpg" />]]></description><pubDate>Mon, 15 Jun 2026 14:58:05 GMT</pubDate></item></channel></rss>