<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:atom="http://www.w3.org/2005/Atom"><channel><title>Articles of sivam RSS</title><link><![CDATA[https://tamilpoonga.com/m/articles/rss/author/11]]></link><atom:link href="https://tamilpoonga.com/m/articles/rss/author/11" rel="self" type="application/rss+xml" /><description>Articles of sivam RSS</description><lastBuildDate>Tue, 22 Jul 2025 14:59:23 GMT</lastBuildDate><item><title><![CDATA[நாகேஷ்  கவிஞர் கண்ணதாசன் பற்றி கூறியது....]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ந-க-ஷ-கவ-ஞர-கண-ணத-சன-பற-ற-க-ற-யத]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ந-க-ஷ-கவ-ஞர-கண-ணத-சன-பற-ற-க-ற-யத]]></guid><description><![CDATA[<p>ஒருநாள், பாலசந்தர், கண்ணதாசன், எம்.எஸ்.விஸ்வநாதன் மூன்று பேரும் ஒன்றாக இருந்தபோது, நான் அங்கே போனேன்.'வா, நாகேஷ்... உனக்கு தான் ஒரு, 'டூயட்' பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன்...' என்றார், கவிஞர்.'துாத்துக்குடி பாஷை பேசுவியே, அதற்கு ஏற்றார்போல் ஒரு பாட்டு கேட்டிருக்கிறேன்...' என்றார், பாலசந்தர்.'துாத்துக்குடியா...' என்று கேட்டு, பக்கத்தில் இருந்த, பஞ்சு அருணாசலத்திடம், 'பஞ்சு... பாட்டை எழுதிக்கோ...' என்று சொல்ல ஆரம்பித்தார், கண்ணதாசன்.முத்துக் குளிக்க வாரீகளா, மூச்சை அடக்க வாரீகளா...'அட... துாத்துக்குடின்னு மனுஷரிடம் சொன்ன மாத்திரத்தில், அதற்கு ஏற்றபடி பாடல் வரிகள் வந்து விழுகின்றனவே...' என்று, நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம்.அத்துடன் விடவில்லை.எம்.எஸ்.வி.,யிடம், 'நம்ம நாகேஷுக்கு, பாட்டுல ஸ்பெஷலா ஏதாவது செய்...' என்று, கவிஞர் கூறினார். தான் போட்டிருந்த, 'டியூனை' தாலாட்டு பாணியில் சற்றே நீட்டி, போட்டுக் காட்டினார்.ஆளான பொண்ணுக பாக்கு வெக்கும் முன்னமே... என்று, தாலாட்டு வரிகளை சேர்த்து, இன்னும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.அனுபவி ராஜா அனுபவி படத்தில் நடித்து கொண்டிருந்த போது, கண்ணதாசனை சந்தித்தேன்.'மெட்ராஸ் ரோடுல நடந்துகிட்டே பாடுறதா, ஒரு பாட்டு எழுத சொல்லியிருக்காங்க...' என்றார்.'கவிஞரே... நான் தாராபுரத்துக்காரன்; மெட்ராஸ் வந்ததுலேர்ந்து, எனக்கு ஒரு பெரிய சந்தேகம்... எங்க ஊர்ல எல்லாம் கன்னு குட்டியை அவிழ்த்து, மாடுகிட்ட விடுவாங்க... அது ஓடி போய், பசு மாட்டு மடியில முட்டி முட்டி, பாலை குடிக்கும். அப்புறம் கன்னுகுட்டியை இழுத்து கட்டி விட்டு கறந்தால், மாடு, பால் சுரக்கும்.'ஆனா, பாருங்கண்ணே... இந்த மெட்ராஸ்ல, கன்னு குட்டியோட தோலுக்குள்ளே வைக்கோலை அடைச்சு வெச்சிடறாங்க... அந்த வைக்கோல் கன்னு குட்டியை, மாடுகிட்ட எடுத்து போய், ரெண்டு நிமிஷம் காட்டறான்; மாடு பால் சுரக்க ஆரம்பிச்சிடுது... இது எப்படின்னு எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு...' என்றேன்.'நீ சொல்றது கூட சுவாரசியமா தான் இருக்கு... இதைக் கூட பாட்டுல வெச்சுக்கலாம்...' என்றார்.'ம்... பஞ்சு, எழுதிக்க...' என்று சொல்லி, மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்... என்று ஆரம்பித்து, மடமடவென்று பாடல் வரிகளை சொல்லியபடியே வந்தவர், எனக்கு இனிய ஆச்சரியத்தை கொடுத்தார்...வைக்கோலால கன்னுக்குட்டி, மாடு எப்போ போட்டது... கக்கத்துல துாக்கி வெச்சா கத்த... <a href="https://tamilpoonga.com/view-article/ந-க-ஷ-கவ-ஞர-கண-ணத-சன-பற-ற-க-ற-யத">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/qcvmwyydengmqg5xm8nqar4ckuisjfya.jpg" />]]></description><pubDate>Tue, 22 Jul 2025 14:59:23 GMT</pubDate></item><item><title><![CDATA[எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் ரகசியமாக நடந்த வாலியின் திருமணம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/16lts8l]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/16lts8l]]></guid><description><![CDATA[<p>வாலி புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூட!ஒரு நாள் எம்.ஜி.ஆரை வாலி சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது, "வாலி! காலா காலத்தில் ஒரு கல்யாணம் செய்து கொள்ளுங்க! நிறைய பணம் சம்பாதிக்கிறபோது, தனி மனிதனா இருந்தா தப்புத் தண்டாவுலே புத்திப்போகும். நீங்க உங்களுக்குப் பிடிச்ச பொண்ணைச் சொல்லுங்க. நான் முன்நின்று உங்க கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்...'' என்று எம்.ஜி.ஆர். பாசத்துடன் சொன்னார்.அப்படியிருந்தும், எம்.ஜி.ஆருக்கே தெரியாமல் வாலியின் ரகசிய திருமணம் நடந்தது.பிரபல திரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.இதுபற்றி வாலி எழுதியிருப்பதாவது:-"நேசித்த பெண்ணை மணந்து கொள்ள வேண்டும் என்று, அல்லும் பகலும் அதே சிந்தனையில் இருந்தேன். அவள் பிடி கொடுத்துப் பேசவில்லை.இருப்பினும், அவளது சித்திரத்தை அழித்துவிட்டு இன்னொரு சித்திரத்தை எழுதிப் பார்க்க என் மனம் தயாராயில்லை.அப்படி ஒரு காதல் தவத்தில் நான் ஈடுபட்டிருந்த நாளில்தான், "எங்க வீட்டுப்பிள்ளை'' படத்திற்காக பாடல் எழுத உட்கார்ந்தேன்.டைரக்டர் சாணக்யா, பாடல் காட்சியை விளக்கினார்."கதாநாயகன், தான் விரும்பும் பெண்ணின் உள்ளத்தில் இடம் பெற்று விடவேண்டும் என்று படாதபாடு படுகிறான்'' என்று கூறி, அதற்கேற்ப பாடல் எழுதச் சொன்னார்.குமரிப்பெண்ணின் உள்ளத்திலேகதாநாயகனின் உள்ளுணர்விலேயே நானும் இருந்ததால், என் உள்ளக்கிடக்கையை அப்படியே பாடலாக்கினேன்."குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்; குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்?'' - இந்தப் பாட்டின் தாக்கத்தால், என் காதலி மனம் கசிந்தாள்; என் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினாள்.''இவ்வாறு வ... <a href="https://tamilpoonga.com/view-article/16lts8l">Read more</a></p><img src="https://tamilpoonga.com/s/aqb_articles_photos_resized/nku6xhr3yxbuu6xkqwnnifw5e4v7ysrf.jpg" />]]></description><pubDate>Mon, 21 Jul 2025 16:38:53 GMT</pubDate></item><item><title><![CDATA[கார் விபத்தில் சிக்கினார் நடிகர் அஜித் குமார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/க-ர-வ-பத-த-ல-ச-க-க-ன-ர-நட-கர-அஜ-த-க-ம-ர]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/க-ர-வ-பத-த-ல-ச-க-க-ன-ர-நட-கர-அஜ-த-க-ம-ர]]></guid><description><![CDATA[<p>இத்தாலியில் நடைபெற்று வரும் ஜிடி 4 கார் ரேஸ் போட்டியில் அஜித் குமார் சென்ற கார் நின்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் சினிமாவிலிருந்து ஒதுங்கி கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். பைக் மற்றும் கார் ரேஸ் மீது அதிக ஆர்வம் கொண்ட அஜித் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் தொடரில் பங்கேற்றார். இதற்காக கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக துபாயில் தங்கி பயிற்சியும் மேற்கொண்டார். கார் ரேஸ்க்காக தன்னுடைய் காரையும் வடிமைத்தார். துபாய் கார் ரேஸ் தொடங்குவதற்கு முன்னதாக அஜித் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பிரேக் ஃபெயிலியர் காரணமாக கார் விபத்துக்குள்ளானது. எதிர்பாராத விதமாக இந்த கார் விபத்தில் அஜித்திற்கு எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. இதைத் தொடர்ந்து இந்த கார் ரேஸிலிருந்து விலகுவதாக அறிவித்து பின்னர் மீண்டும் கார் ரேஸில் பங்கேற்றார்.இதில் 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தார். துபாய் கார் ரேஸ் சீரிஸைத் தொடர்ந்து போர்ச்சுகல் நாட்டில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கேற்றார். இதில் எதிர்பாராத விதமாக கார் விபத்தில் சிக்கியுள்ளார். பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அவரது கார் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் அஜித்திற்கு எந்த காயமும் ஏற்படவில்லை. ஆனால், அவரது கார் மட்டுமே பயங்கரமாக சேதமடைந்துள்ளது.... <a href="https://tamilpoonga.com/view-article/க-ர-வ-பத-த-ல-ச-க-க-ன-ர-நட-கர-அஜ-த-க-ம-ர">Read more</a></p>]]></description><pubDate>Sun, 20 Jul 2025 15:12:12 GMT</pubDate></item><item><title><![CDATA[நடிகர் செந்திலின் மகன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1q5tbik]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1q5tbik]]></guid><description><![CDATA[<p>இலவசமாக ஏழைகளுக்கு மருத்துவம் பார்க்கும் நடிகர் செந்திலின் மகன்..செந்தில் நடிகராக இருந்தாலும் அவர்களுடைய மகன் மருத்துவராக பலருக்கும் பல உதவிகளை செய்து வருகிறார்.அதே நேரத்தில் செந்திலுடைய குடும்பத்தில் யாருமே படித்தவர்கள் கிடையாதாம். முதல் முறையாக டாக்டருக்கு படித்தது செந்திலுடைய மகன் தான். அவர் டாக்டருக்கு படித்துக் கொண்டிருக்கும் போது ஒரே ஒரு சினிமாவிலும் நடித்திருக்கிறார். ஆனால் அதற்குப் பிறகு எந்த சினிமாவிலும் அவர் நடிக்கவில்லை. தன்னுடைய படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்தி அடுத்தடுத்து அதில் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறாராம்.அப்போதுதான் ஜனனி என்ற பல் மருத்துவரை மணிகண்ட பிரபு காதலித்து இருக்கிறார். இவர்களுடைய காதலுக்கு இரண்டு வீட்டிலும் பெரிய அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை.ஆனால் மணிகண்ட பிரபு நடிக்க கிளம்பியதும் ஜனனிக்கு பயம் வந்திருக்கிறது. ஏனென்றால் ஜனனியின் அப்பா ஜனனியை ஒரு டாக்டருக்கு தான் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்து இருந்தாராம். ஆனால் பிறகு மணிகண்டன் டாக்டராகவே மாறியதும் இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் திருமணம் முடிந்தது.... <a href="https://tamilpoonga.com/view-article/1q5tbik">Read more</a></p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 15:16:58 GMT</pubDate></item><item><title><![CDATA[முனைவர் பட்டம் பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ம-ன-வர-பட-டம-ப-ற-ற-நக-ச-ச-வ-நட-கர-ச-ர-ல]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ம-ன-வர-பட-டம-ப-ற-ற-நக-ச-ச-வ-நட-கர-ச-ர-ல]]></guid><description><![CDATA[<p>வேல்முருகன் தங்கசாமி மனோகர் (பிறப்பு: மார்ச் 6, 1960) என்பது இவர் இயற்பெயர்.இவர் பிறந்து வளர்ந்த ஊர் கோவில்பட்டி. அங்கே இருக்கும் GVN கல்லூரியில் ரசாயனத்தில் பட்டப் படிப்பு படித்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டமும் பெற்றுள்ளார்.."தமிழ் சினிமாவின் வளர்ச்சியில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு - 1937 முதல் 1967" என்ற தலைப்பில் .lஎம்.ஃபிலுக்கான ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பித்தார். அக்டோபர் 2019 இல் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் "தமிழ் சினிமாவில் நகைச்சுவை" என்ற தலைப்பில் தமிழில் முனைவர் பட்டம் பெற்றார்.அவரது கல்லூரி நாட்களில், அவர் சிவாஜி கணேசன், முத்துராமன் மற்றும் நாகேஷ் போன்ற தமிழ் நடிகர்களைப் போல் மிமிக்கிரி செய்து அவரது அசாத்திய திறமைக்காக அறியப்பட்டார். அவர்தான் திரைப்பட உலகில் நகைச்சுவ்வை நடிகர் சார்லலி என்று அழைக்கப் படுகிறார். ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக அவருக்கு இந்த பெயர் சூட்டப்பட்டது.நகைச்சுவை நடிகராகவும், துணை நடிகராகவும் 800க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.மோனோ ஆக்டிங், மேடை நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்தல் போன்றவற்றில் மிகவும் திறமையான இவர், பல்வேறு நாடுகளில் தன் கலையை திறம்பட காட்டியுள்ளார். இவருடைய அபார நடிப்பு திறமைக்காக 2004ல் கலைமாமணி விருது, 2018lல் கலைசிகரம் விருது, மற்றும் பல திரைப்பட விருதுகளை வாங்கியுள்ளார்.... <a href="https://tamilpoonga.com/view-article/ம-ன-வர-பட-டம-ப-ற-ற-நக-ச-ச-வ-நட-கர-ச-ர-ல">Read more</a></p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 14:49:21 GMT</pubDate></item><item><title><![CDATA[காலத்தால் அழியா பாடல்கள் தந்த டி ஆர் மகாலிங்கம்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/c6n4n8]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/c6n4n8]]></guid><description><![CDATA[<p>1950களில் 14 வெளிநாட்டு கார்களுடன் பங்களா, பவிசு, பெரிய நடிகர், படத் தயாரிப்பாளர் என பெருமைபொங்க வாழ்ந்த டி.ஆர்.மகாலிங்கம், அடுத்த 5 ஆண்டுகளில் எல்லாவற்றையும் இழந்து மஞ்சள் கடுதாசி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். வறுமையால் வெல்லப்பட்டார். ஆழ்கடலில் முத்திருக்க, அலைகளால் கரையில் கொண்டு சேர்க்கப்படும் சாதாரண சிப்பியாக ஒதுங்கினார் மகாலிங்கம். இசைக்கலைஞன் அல்லவே. கீழே விழுந்த மகாலிங்கத்தைத் தூக்கி நிறுத்தினார் கவியரசு கண்ணதாசன். கண்ணதாசன் தான் சொந்தமாகத் தயாரித்த முதல் படமான 'மாலையிட்ட மங்கை'யில் துணிந்து மகாலிங்கத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்.அந்தப்படத்தில் டி.ஆர்.மகாலிங்கம் பாடியசெந்தமிழ் தேன்மொழியாள் இன்றுவரை செந்தமிழைப் போல ரசிகர்களின் நெஞ்சில் செழிப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறது.உச்சஸ்தாயிலேயே பாடி பழக்கப்பட்ட டி.ஆர்.மகாலிங்கத்தை மென்மையான குரலில் பாடவைக்க முடியுமா? உயரமாய் பறக்கும் பருந்தை செல்லமாக குழையும் சிட்டுக்குருவியாக்க முடியுமா? ஆனால், மென்மையான பாடலைப் பாடவைத்து, தமிழ் ரசிகர்களுக்கு விருந்தாக்கிக் காட்டினார்கள் கவியரசு கண்ணதாசனும் விஸ்வநாதன் ராமமூர்த்தியும். . மாலையிட்ட மங்கையில் வரும் 'நானன்றி யார் வருவார்?' பாடல் மென்மையின் மேன்மையைச் சொல்லும்.சந்தத்திலிருந்து பிசகாமல் கவிமணம் வீசும் கண்ணதாசனின் பாடல் வரிகள், பழைமையின் பக்குவத்தை மீறாத விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள், உச்சஸ்தாயில் ஊர்வலம் போகும் மகாலிங்கத்தின் மயக்கம் தரும் குரல். இவைதான்,மாலையிட்ட மங்கையை மங்களகரமாக மாற்றியது. 'எங்கள் திராவிடப் பொன்னாடே' பாடலும் மிகப் பிரபலம்.'மாலையிட்ட மங்கை' மகாலிங்கத்தின் கழுத்தில் மாலையிட்ட மங்கையானது. படம் அமோக வெற்றி. சரிவில் இருந்து மீண்டார் மகாலிங்கம். 1959-ம் ஆண்டு வெளியான 'அமுதவல்லி', பாடல்களின் இன்பவல்லி. பட்டுக்கோட்டையோடு விஸ்வநாதன் ராமமூர்த்தியின் ஜனரஞ்சகமான மெட்டில் ஆடை கட்டிக் கொண்டது நிலவு. அமுதவல்லியின் 'ஆடைகட்டி வந்த நிலவோ' பாடலை ரசிக்காதவர்கள் யார்?1960-ம் ஆண்டு - எழுத்தாளர் எல்லார்வி எழுதிய ''கலீர் கலீர்'' நாவல்தான் 'ஆடவந்த தெய்வம்' ஆனது. முக்கோணக் காதல் கதை. டி.ஆர்.மகாலிங்கத்தோடு ஈ.வி.சரோஜா, அஞ்சலி தேவி ஆகியோர் நடித்திருந்தனர். சாஸ்திரிய சங்கீத காதலர்களுக்கு விருந்து படைத்துக் கொண்டிருந்த மகாலிங்கம், இந்தப் படத்தில் சாதாரண மக்களுக்கும், ச... <a href="https://tamilpoonga.com/view-article/c6n4n8">Read more</a></p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 14:17:10 GMT</pubDate></item><item><title><![CDATA[கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியின் மகன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/கல-ஞர-கர-ண-ந-த-ய-ன-ம-தல-மன-வ-ய-ன-மகன]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/கல-ஞர-கர-ண-ந-த-ய-ன-ம-தல-மன-வ-ய-ன-மகன]]></guid><description><![CDATA[<p>கலைஞர் கருணாநிதியின் முதல் மனைவியான பத்மாவதிக்கு பிறந்த மூத்த மகன் தான் மு.க.முத்து.மு.க.முத்துவின் தயாரான பத்மாவதி பிரபல பாடகரான சிதம்பரம் ஜெயராமனின் சொந்த தங்கை.சிதம்பரம் ஜெயராமனுக்கும், கலைஞர் கருணாநிதிக்கும் ஒரே சமயத்தில் திருவாரூரில் திருமணம் நடந்தபோது அதை தலைமைத் தாங்கி நடத்தி வைத்தவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.சிதம்பரம் ஜெயராமனின் சொந்த அக்கா மகளைத்தான் கல்யாணம் செய்திருக்கிறார் மு.க.முத்து.ஆரம்பத்திலிருந்தே பாடுவதில் தேர்ச்சி பெற்றிருந்த மு.க.முத்து, திமுக சார்ந்த நாடகங்களில், திமுக மேடைகளில் பிரச்சார பாடல்களைப் பாடி இருக்கிறார். அதற்கேற்ற குரல் வளம் அவருக்கு இருந்தது.பிறகு அவர் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்தார். அவர் நடித்த முதல் படம், 'பிள்ளையோ பிள்ளை'. அந்தப் படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரைப் போன்ற தோற்றத்திலும், அவரைப் போலவே பாவனைக் காட்டியும் நடித்திருப்பார் மு.க.முத்து.அதைத் தொடர்ந்து 'சமையல்காரன்' என வெவ்வேறு படங்களில் நடித்திருக்கிற மு.க.முத்துவுடன் ஜோடி சேர்ந்து நடிகை நிர்மலாவும், லட்சுமியும் நடித்திருக்கிறார்கள். சமையல்காரன் படத்தில் அவருடன் கூடவே நடித்தவர், அப்போது சிறையிலிருந்து வெளியே வந்தவரான எம்.ஆர்.ராதா.அவர் நடித்த படங்களில் அவரே தனது சொந்தக் குரலில் பாடவும் செய்திருக்கிறார். “சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க...” என்று அவர் பாடிய பாடல் அப்போது பிரபலம்.இதே மு.க.முத்துவுக்கும் தமிழக அரசியலில் என்ன பங்கு இருக்கிறது என்று கேட்டால், அவருடைய பங்கும் இல்லாமல் இல்லை.எம்ஜிஆருக்கு ரசிகர் மன்றங்கள் இருப்பதைப்போலவே மு.க.முத்து நடித்த 'பிள்ளையோ பிள்ளை' வெளிவந்ததும் மு.க.முத்துவின் பெயரில் தமிழ்நாடு முழுக்க ரசிகர் மன்றங்கள் துவக்கப்பட்டன.சில இடங்களில் எம்ஜிஆர் மன்றங்களை கலைக்கச் சொல்லி மு.க.முத்துவுக்கான ரசிகர் மன்றங்கள் துவக்கி வைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.விழா ஒன்றில் மு.க.முத்துவை சந்தித்த எம்.ஜி.ஆர், “நீ உனது பாணியில் நடி” என்று சொன்னதாகக் கூட அப்போது ஒரு தகவல் பரவி இருந்தது.மு.க.முத்துவிற்கு மன்றங்கள் தமிழ்நாடு முழுக்க உருவாக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர் அதிமுகவைத் துவக்குவதற்கு ஆன பல காரணங்களில் ஒரு காரணமாகச் சொல்லப்பட்டது.இப்படிப் பலவற்றில் 80-கள் வரை செய்திகளில் அடிபட்ட மு.க.முத்து, அதன்பிறகு முழுக்க எந்த செய்திகளிலும் அடிபடாமல் விலகி... <a href="https://tamilpoonga.com/view-article/கல-ஞர-கர-ண-ந-த-ய-ன-ம-தல-மன-வ-ய-ன-மகன">Read more</a></p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 13:27:18 GMT</pubDate></item><item><title><![CDATA[கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/1as77vd]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/1as77vd]]></guid><description><![CDATA[<p>மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 77. கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு பிறந்தவர் மு.க.முத்து.பூக்காரி, பிள்ளையோ பிள்ளை, அணையா விளக்கு ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். 77 வயதான அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்திருக்கிறார். அவரது உடல், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.மு.க.முத்து உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். கட்சியின் மூத்த நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.</p>]]></description><pubDate>Sat, 19 Jul 2025 13:15:08 GMT</pubDate></item><item><title><![CDATA[அற்புத நடிகர் விஜயன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/அற-ப-த-நட-கர-வ-ஜயன]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/அற-ப-த-நட-கர-வ-ஜயன]]></guid><description><![CDATA[<p>கேரளாவில் பிறந்த இவர், அந்த மாநிலத்தில் நீண்ட நாள் பதவி வகித்த முதல்வரும் பிரபல மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான ஈ.கே.நாயனாரின் சொந்தக்காரர். மலையாள சினிமாவுக்குள் முதன் முதலில் கதாசிரியராக அறிமுகமான விஜயனின் கைவண்ணத்தில் உருவான 'சங்கு புஷ்பம்' படம் வசனத்துக்காகவே மலையாளத்தில் ஹிட். அப்படியே நடிப்பு, இயக்கம் என வளர்ந்த விஜயனை தமிழுக்கு அழைத்து வந்தவர், பாரதிராஜா. பாரதிராஜாவின் பெரும்பாலான படங்களில் விஜயனை பார்க்கலாம்.1978ல் வெளியான 'கிழக்கே போகும் ரயில்', விஜயனை கேரள கரையில் இருந்து கோலிவுட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது. அடுத்த ஆண்டே 'முள்ளும் மலரும்' இயக்குநர் மகேந்திரனின் இயக்கத்தில் 'உதிரி பூக்கள்'. இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் அந்த படம் அதிரி புதிரி ஹிட். படத்தின் ஹீரோ விஜயன். அதாவது ஆன்ட்டி ஹீரோ.2 குழந்தைகளுக்கு தந்தையான பின்னும் மனைவியை கொன்று விட்டு கொழுந்தியாளை அடைய துடிக்கும் வேடம், விஜயனுக்கு... (அஜித்தின் 'ஆசை' படத்தோட raw versionன்னு சொல்லலாம்) அந்த படத்தில் பின்னி எடுத்திருப்பார், விஜயன். அவரது உடல்வாகு, வில்லத் தனமான பார்வை அமைதியான தோற்றம் எல்லாம் அவரது கேரக்டரை ஹிட்டாக்கின. அதன் பிறகு, மலையாளம் கூடவே தமிழிலும் ஏராளமான படங்களில் விஜயன் நடித்தார்.பாரதிராஜா, பாக்யராஜ், மகேந்திரன் என முன்னணி இயக்குர்களிடம் நடித்த இவர், 1980 ஒரே ஆண்டில் மட்டும் 11 படங்களில் தமிழில் நடித்திருக்கிறார். அவற்றில் பல லாபம் ஈட்டிய படங்கள். சின்ன பட்ஜெட்டில் நல்ல லாபம் என்றால் இவரும் சுதாகரும் தான் அன்றைய தயாரிப்பாளர்களின் சாய்ஸ். 1980களுக்கு பிறகுதான் தமிழில் ரஜினி, கமல் ஆதிக்கம் துவங்கியது. அதற்கு முந்தைய கால கட்டத்தில் இவருக்கும் அன்றைய நாளின் மற்றொரு ஹீரோவான சுதாகருக்கும் தனி ரசிகர் கூட்டமே உண்டு. ஆரம்ப கால விஜயனிடம் கொஞ்சம் மம்முட்டி சாயலை பார்க்க முடியும்.கதாநாயகன் வேடத்துக்கு பிறகு, 1992 வரை நிறைய கேரக்டர் ரோல்களிலும் விஜயன் நடித்தார். 'மண் வாசனை', 'நிறம் மாறாத பூக்கள்', 'பொண்ணு ஊருக்கு புதுசு', 'பசி', 'ஒரு கைதியின் டைரி', 'கொடி பறக்குது', 'அன்புக்கு நான் அடிமை' (ரஜினியின் அண்ணன்), 'நாயகன்' (மும்பை குடிசை வாழ் மக்கள் இடத்தை வாங்கி தரும் புரோக்கர் துரை)... இப்படி அவரது படங்களின் பட்டியல் மிக நீளம்.இதற்கிடையே, 'புதிய ஸ்வரங்கள்' மூலம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அப்... <a href="https://tamilpoonga.com/view-article/அற-ப-த-நட-கர-வ-ஜயன">Read more</a></p>]]></description><pubDate>Fri, 18 Jul 2025 01:21:44 GMT</pubDate></item><item><title><![CDATA[ரஜினி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த கமல்ஹாசன்]]></title><link><![CDATA[https://tamilpoonga.com/view-article/ரஜ-ன-வ-ட-ட-க-க-த-ட-ர-வ-ச-ட-அட-த-த]]></link><guid><![CDATA[https://tamilpoonga.com/view-article/ரஜ-ன-வ-ட-ட-க-க-த-ட-ர-வ-ச-ட-அட-த-த]]></guid><description><![CDATA[<p>நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி, ஜெயிலர் 2 என இரண்டு பிரம்மாண்ட படங்கள் தயாராகி வருகின்றன. இதில் கூலி திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 14ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேபோல் ரஜினி கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான ஜெயிலர் 2 ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். மேற்கண்ட இரண்டு திரைப்படங்களையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த இரண்டு படங்களுக்கும் அனிருத் தான் இசையமைக்கிறார்.சினிமாவில் பிசியாக உள்ள கமல்ஹாசன், அரசியலிலும் மக்கள் நீதி மய்யம் என்கிற கட்சியின் தலைவராக உள்ளார். அக்கட்சி திமுக உடன் கூட்டணி அமைத்த பின்னர், அந்த கூட்டணியில் இருந்து நடிகர் கமல்ஹாசன் ராஜ்யசபா எம்பி ஆக தேர்வு செய்யப்பட்டார். விரைவில் எம்பி-ஆக பாராளுமன்றத்தில் அமர உள்ள நடிகர் கமல்ஹாசன், இன்று காலை தன்னுடைய நண்பர் ரஜினிகாந்தை போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்தார். எம் பி ஆக உள்ள கமல்ஹாசனுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த், அவருடன் சிறிது நேரம் உரையாடினார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.... <a href="https://tamilpoonga.com/view-article/ரஜ-ன-வ-ட-ட-க-க-த-ட-ர-வ-ச-ட-அட-த-த">Read more</a></p>]]></description><pubDate>Wed, 16 Jul 2025 14:08:36 GMT</pubDate></item></channel></rss>