பேருந்தில் நிற்க முடியாமல்
சிரமப்படும் நமக்கு எழுந்து,
தன் இடம் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*இருக்கை மனிதர்!*
ரயிலில் மேலேற முடியாத
நமக்கு தன் கீழ் இருக்கையை
கொடுக்கும் அந்த யாரோ ஒரு
*உயர்ந்த மனிதர்!*
சாலை விபத்தில் நமக்கு
முதல் ஆளாய் ஓடோடி வந்து
உதவும் அந்த யாரோ ஒரு
*சகாய மனிதர்!*
தூக்கிவிட மறந்த நம்
வண்டி சைட்ஸ்டாண்டை
தன் சைகையிலேயே
தூக்கிவிடச் சொல்லும்
அந்த யாரோ ஒரு
*சைகை மனிதர்!*
வண்டிச் சக்கரத்தில்
மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லி
எச்சரிக்கும் அந்த யாரோ ஒரு
*எச்சரிக்கை மனிதர்!*
செல்லும் வழி தெரியாமல்
முழிக்கும் நமக்கு சரியான
வழி சொல்லி உதவும்
அந்த யாரோ ஒரு
*முகவரி மனிதர்!*
திடீரென்று நின்று விட்ட
நம் வண்டியை உதைத்து
ஓட வைத்துக் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*உதை மனிதர்!*
சில்லறை இல்லாமல் நாம்
தவிக்கும்போது, சரியான
சில்லறை கொடுத்து உதவும்
அந்த யாரோ ஒரு
*நாணய மனிதர்!*
தவறவிட்ட நம் பணப்பையை
நம்மைத் தேடிவந்து
கொடுத்துச் செல்லும்
அந்த யாரோ ஒரு
*நேர்மை மனிதர்!*
ATM இயந்திரத்தில்
பணம் எடுக்கத் தெரியாமல்
தவிக்கும் போது, எடுத்துதவும்
அந்த யாரோ ஒரு
*நல்ல மனிதர்!*
உயிருக்கு போராடும்
ஆபத்தான நிலையில்,
யாருக்கென்றே தெரியாமல்
இரத்தம் கொடுக்க முன்வரும்
அந்த யாரோ ஒரு
*குருதி மனிதர்!*
இன்னும் இன்னும் இப்படி,
நம்மைச் சுற்றியே,
எத்தனையோ அந்த
*"யாரோ மனிதர்கள்!"*
எப்போதும் இருக்கிறார்கள்.
தேவையானச் சூழலில்
தங்களுக்குள் இருக்கும்
மனிதர்களை அவர்கள்
வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
நாமும் இருப்போம் முடிந்தவரை
யாரோ அந்த சில மனிதர்களாய்!
சிரமப்படும் நமக்கு எழுந்து,
தன் இடம் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*இருக்கை மனிதர்!*
ரயிலில் மேலேற முடியாத
நமக்கு தன் கீழ் இருக்கையை
கொடுக்கும் அந்த யாரோ ஒரு
*உயர்ந்த மனிதர்!*
சாலை விபத்தில் நமக்கு
முதல் ஆளாய் ஓடோடி வந்து
உதவும் அந்த யாரோ ஒரு
*சகாய மனிதர்!*
தூக்கிவிட மறந்த நம்
வண்டி சைட்ஸ்டாண்டை
தன் சைகையிலேயே
தூக்கிவிடச் சொல்லும்
அந்த யாரோ ஒரு
*சைகை மனிதர்!*
வண்டிச் சக்கரத்தில்
மாட்ட இருக்கும் துப்பட்டாவை சொருவிக்கொள்ளச் சொல்லி
எச்சரிக்கும் அந்த யாரோ ஒரு
*எச்சரிக்கை மனிதர்!*
செல்லும் வழி தெரியாமல்
முழிக்கும் நமக்கு சரியான
வழி சொல்லி உதவும்
அந்த யாரோ ஒரு
*முகவரி மனிதர்!*
திடீரென்று நின்று விட்ட
நம் வண்டியை உதைத்து
ஓட வைத்துக் கொடுக்கும்
அந்த யாரோ ஒரு
*உதை மனிதர்!*
சில்லறை இல்லாமல் நாம்
தவிக்கும்போது, சரியான
சில்லறை கொடுத்து உதவும்
அந்த யாரோ ஒரு
*நாணய மனிதர்!*
தவறவிட்ட நம் பணப்பையை
நம்மைத் தேடிவந்து
கொடுத்துச் செல்லும்
அந்த யாரோ ஒரு
*நேர்மை மனிதர்!*
ATM இயந்திரத்தில்
பணம் எடுக்கத் தெரியாமல்
தவிக்கும் போது, எடுத்துதவும்
அந்த யாரோ ஒரு
*நல்ல மனிதர்!*
உயிருக்கு போராடும்
ஆபத்தான நிலையில்,
யாருக்கென்றே தெரியாமல்
இரத்தம் கொடுக்க முன்வரும்
அந்த யாரோ ஒரு
*குருதி மனிதர்!*
இன்னும் இன்னும் இப்படி,
நம்மைச் சுற்றியே,
எத்தனையோ அந்த
*"யாரோ மனிதர்கள்!"*
எப்போதும் இருக்கிறார்கள்.
தேவையானச் சூழலில்
தங்களுக்குள் இருக்கும்
மனிதர்களை அவர்கள்
வெளிப்படுத்தி விடுகிறார்கள்.
நாமும் இருப்போம் முடிந்தவரை
யாரோ அந்த சில மனிதர்களாய்!